என் மலர்
தொழில்நுட்பம்
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1.75 எம்எம் அளவு மெல்லிய பெசல்கள் உள்ளன.
இதன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளேவில் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் பெற்று இருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், லிக்விட் வி.சி. கூலிங் உள்ளது.
புதிய நோட் 11 ப்ரோ சீரிசில் உலகின் முதல் ஹாலோகிராபிக் சஸ்பென்ஷன் உற்பத்தி முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், என்.எப்.சி. உள்ளது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கிறது.
விலை விவரங்கள்
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன், டைம்லெஸ் பர்பில் மற்றும் மில்கி வே புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 250 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18,710, 8 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,245 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி விலை 328 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 24,572 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன் மற்றும் டைம்லெஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,245, 8 ஜிபி + 128 ஜிபி விலை 328 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24,572, 8 ஜிபி + 256 ஜிபி 359 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வீடியோ கால் செய்யும் போது சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி, ட்வீட் ஒன்றை அவரே பதிவு செய்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க வீடியோ கால் மட்டுமே ஒற்றை தீர்வாக மாறி போனது. வீடியோ கால் சேவைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் பல்வேறு இதர செயலிகள் அசுர வளர்ச்சி பெற்றன.
வீடியோ காலிங் சேவைகளை அதிகம் சார்ந்து இருக்கும் சூழலில் பலர் இவற்றில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களில் அவ்வப்போது சிக்குவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதுபோன்ற சிக்கலில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் சிக்கியிருக்கிறார்.

சமீபத்தில் கெர்மிட் தி பிராக் உடன் நடைபெற்ற நேர்காணலில் சுந்தர் பிச்சை பேசும் போது அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். பின் அதை கவனித்த சுந்தர் சிரித்தப்படி நேர்காணலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுந்தர் பிச்சை, அனைவரிடமும் அன்மியூட் செய்ய மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட லாவா அக்னி 5ஜி நவம்பர் 9 ஆம் தேதி அரிமுகமாகிறது.
புதிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று சென்சார்கள், முன்புறம் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய லாவா அக்னி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறம் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் புதிய போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது போக்கோ எம்3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரில் அதன் அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி போக்கோ ஸ்மார்ட்போன் 21091116ஏசி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
The beloved M-series is back for one last time in 2021!
— POCO (@POCOGlobal) October 28, 2021
Introducing #POCOM4Pro 5G!
Time to #PowerUpYourFun!
Stay tuned on November 9th at 20:00 GMT+8 for the last POCO launch of the year! pic.twitter.com/kopKxTwFqY
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முந்தைய போக்கோ எம்3 ப்ரோ மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலின் விலையும் முந்தைய மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்4 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 5ஜி கனெக்டிவிட்டி, 4 ஜிபி+64 ஜிபி மற்றும் 6 ஜிபி+128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது லேப்டாப் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கல்வி துறைக்கென பிரத்யேகமாக குறைந்த விலை லேப்டாப் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த லேப்டாப் டென்ஜின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் டிஸ்ப்ளே, இன்டெல் செலரான் என்4120 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு யு.எஸ்.பி. ஏ போர்ட், ஒரு யு.எஸ்.பி. சி போர்ட், ஹெட்போன் ஜாக், பேரெல் ரக ஏ.சி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய டென்ஜின் லேப்டாப் சர்பேஸ் பிராண்டிங்கில் லேப்டாப் எஸ்.இ. பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதில் எஸ்.இ. என்பது ஸ்டூடண்ட் எடிஷன் அல்லது ஸ்கூல் எடிஷன் என்ற விரிவாக்கம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய கேல்கஸி எம்33 5ஜி குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்.எம். எம்336பி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மாகவே உள்ளது. முந்தைய கேலக்ஸி எம்32 5ஜி மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி மாடல் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு மாடலாக இருக்கும் என தெரிகிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டு விவரங்களை அறிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது.
ஆண்டு வருவாய் கூட்டத்தில் இதுபற்றி பேசிய சுந்தர் பிச்சை, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கான சாதனமாக இருக்கும் என தெரிவித்தார். பீச்சர் போன் பயனர்களை பெருமளவு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வைக்க ஜியோபோன் நெக்ஸ்ட் பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும். சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சார்ந்து உருவாகி இருக்கும் பிரகதி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் பிராசஸர், வாய்ஸ் அசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் மாடல்களில் டிமென்சிட்டி 920 சிப்செட் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களின் டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போதைய டீசர்களில் புதிய ரெட்மி நோட் 11 மாடல்கள் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா, டூயல் ஐ.எஸ்.ஓ. தொழில்நுட்பம், 2.1 ஒற்றை பிக்சல் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி+ 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள் பிளாக், பர்பில் மற்றும் மிஸ்டி பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ கூடுதலாக மற்றொரு நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.
ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ்2 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை 8 இன்ச் எல்.டி.பி.ஒ. ஒ.எல்.இ.டி. பேனல், 120 வாட் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், கலர் ஓ.எஸ். 12 உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஒப்போ நிறுவனம் எதிர்கால அணியக்கூடிய சாதனத்திற்கான காப்புரிமை பெற்று இருந்தது. புதிய தொழில்நுட்பம் வெனஸ் அன்லாக்கிங் மெத்தட் மற்றும் வெயின் அன்லாக்கிங் டிவைஸ் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது முக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு இணையான பயோமெட்ரிக் சிஸ்டம் ஆகும். எல்.ஜி. நிறுவனமும் இதே போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி அதற்கு ஹேண்ட் ஐ.டி. என பெயர் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டேப் கே10 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
லெனோவோ நிறுவனம் டேப் கே10 மிட்-ரேன்ஜ் டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 10.3 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக லெனோவோ தெரிவித்து உள்ளது.

லெனோவோ டேப் கே10 மாடல் அபிஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 25 ஆயிரம் ஆகும். எனினும், புதிய டேப் கே10 எல்.டி.இ. 3 ஜிபி+32 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும், வைபை, 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 15,999, எல்.டி.இ. 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. பின் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி ஓ.எஸ். கொண்டிருக்கும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. பிரகதி ஓ.எஸ். இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களை சேர்ந்த தலைசிறந்த குழு இதனை உருவாக்கி இருக்கிறது.

இந்த ஓ.எஸ்.-இல் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆட்டோமேடிக் ரீட்-அலவுட், ஆன்-ஸ்கிரீன் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் வசதி, பில்ட்-இன் கேமரா ஏ.ஆர். பில்ட்டர்கள், ஜியோ மற்றும் கூகுள் செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும்.
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பிராசஸரில் சிறப்பான கனெக்டிவிட்டி, லொகேஷன் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் வென்னிலா நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், ஐகூ இந்த ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட் மாடலுடன் ஐகூ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
வென்னிலா ஐகூ 8 மாடல் ஐகூ 8 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐகூ 8 ப்ரோ மாடல்தான் இந்தியாவில் ஐகூ 8 லெஜண்ட் பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

சீன சந்தையில் ஐகூ 8 சீரிஸ் மாடல்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டன. இந்த மாடல்களில் சாம்சங்கின் இ5 அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், யு.எப்.எஸ். 3.1 ஸ்டோரேஜ், லிக்விட் விசி கூலிங், எல் வடிவ கேமரா பம்ப், கிம்பல், ஓ.ஐ.எஸ்., ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.






