என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
உயர் ரக அம்சங்களுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்24 Oct 2021 3:45 AM GMT (Updated: 23 Oct 2021 3:30 PM GMT)
ரியல்மி நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.
ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் உயர்-ரக அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விலை மற்றும் ஹார்டுவேர் அம்சங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும், இதன் வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது.
தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரியல்மி 8 ப்ரோ மாடலில் புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X