என் மலர்
தொழில்நுட்பம்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கும் வகையில் இந்தியாவுக்கான அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. விதிகளை ஏற்கும் விவகாரம் குறித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

மனுதாரின் மனுவில், `ட்விட்டரில் நான் எதிர்கொண்ட பதிவு குறித்து குறைதீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரின் தொடர்பு விவரங்களை கண்டறிய இயலவில்லை. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்கரை அதிகாரியாக நியமித்து இருக்கிறது. ஆனால் இது சமீபத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை முறையாக ஏற்கும் வகையில் இல்லை,' என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளித்த ட்விட்டர், அரசு விதித்த புது கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை ஏற்கும் வகையில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது.
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் அம்சங்கள்
- 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.3
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.5
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 50 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மாடல் ஆஸ்டிராய்டு பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் மில்கி வே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூன் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்குகிறது.
சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு சீனாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடல் போக்கோ எக்ஸ்3 ஜிடி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வெர்ஷன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பதால், இதன் 5ஜி வேரியண்ட் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படலாம். அம்சங்களை பொருத்தவரை இதன் 4ஜி வேரியண்டில் 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்ககப்பட்டு உள்ளது.
போக்கோ நிறுவனம் போக்கோ எப்3 ஜிடி மாடலை 2021 மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இது ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 ஜிடி மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி விற்பனை ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் டிவி U1S மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ட்விட்டர் தளத்தில் பேஸ்புக்கில் உள்ளது போன்ற எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் தளத்தில் எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ளது போன்று விரைவில் ட்வீட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்கலாம். தற்போது ட்வீட்களுக்கு லைக் மூலமாகவே விருப்பம் தெரிவிக்கும் முறை அமலில் உள்ளது.
விரைவில் லைக்ஸ், சீர்ஸ், ஹூம், சேட் மற்றும் ஹாஹாஹா போன்ற ரியாக்ஷன்களை வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஐகான்கள் எமோஜிக்கள் போன்றே காட்சியளிக்கிறது. சில ரியாக்ஷன்களுக்கு ஐகான்களை உறுதிப்படுத்தும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Twitter is working on Tweet Reactions view:
— Jane Manchun Wong (@wongmjane) May 28, 2021
“Likes”, “Cheer”, “Hmm”, “Sad”, “Haha”
The icons for the Cheer and Sad reactions are WIP and shown as the generic heart one at the moment https://t.co/ZCBhH8z7JRpic.twitter.com/dGqq1CzIis
புது ரியாக்ஷன்கள் பேஸ்புக்கில் எமோஜிக்கள் உள்ளது போன்றே காட்சியளிக்கிறது. யார் யார் எந்த எமோஜி மூலம் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர் என்ற விவரங்களை ட்விட்டர் வழங்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2nd Gen ஏர்பாட்ஸ் ப்ரோ ஹெட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி லெவல் ஏர்பாட்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்பாட்ஸ் மாடல் முதல் முறையாக அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முற்றிலும் புது கேஸ், சிறிய ஸ்டெம் கொண்டிருக்கும் ன கூறப்படுகிறது.

2022 ஆண்டு வெளியாக இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் மேம்பட்ட மோஷன் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேம்பட்ட ஏர்பாட்ஸ் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவு விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை அப்டேட் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் சி25எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மே 31 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து ரியல்மியின் மற்றொரு ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் மலேசியாவில் அறிமுகமான ரியல்மி சி25எஸ் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இதில் பெரும்பாலும் சி25 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களே உள்ளன. எனினும், இதில் வேறு பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி25எஸ் மாடலில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி25எஸ் மாடலில் 6.5 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் இதன் 64 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. மலேசியாவில் இதன் விலை 699 ரிங்கட் இந்திய மதிப்பில் ரூ. 12,300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புது தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற விர்ச்சுவல் நிகழ்வில் தெரிவித்து இருக்கிறார்.

புது விலை குறைந்த ஸ்மார்ட்போனினை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என அவர் தெரிவித்தார்.
கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் துவங்கும் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோ 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிஎஸ் 5 கன்சோலை வாங்கிய பல்வேறு வாடிக்கையாளர்கள், ப்ளிப்கார்ட் தளத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். கேமிங் கன்சோல்களை வாங்க ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை கேன்சல் செய்ய ப்ளிப்கார்ட் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ளிப்கார்ட் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு கன்சோல் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டது என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆர்டர்களை விரைவில் விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. மே 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பிஎஸ்5 விற்பனையில் இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது.
`ப்ளிப்கார்ட் சார்பில் அழைப்புகள் வந்தது. அழைப்பை மேற்கொண்டவர், பிஎஸ்5 கன்சோலுக்கான ஆர்டரை கேன்சல் செய்தால் ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக தெரிவித்தார்'. என பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் குற்றஞ்சாட்டினர்.
விநியோகம் செய்ய தாமதம் ஆகும், இதனால் ஆர்டரை கேன்சல் செய்யக் கோரி ப்ளிப்கார்ட் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி இருக்கின்றன.
போக்கோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் F3 GT இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலை சார்ந்து உருவாகி இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமராக்களை சுற்றி எல்இடி லைட்கள் உள்ளன.
"Locked & loaded, finger on the trigger" The next F is closer than you thought.
— POCO India - Register for Vaccine 💪🏿 (@IndiaPOCO) May 28, 2021
Good things come to those who wait, best things to those who never give up! pic.twitter.com/Pu7G6VZgFR
எல்இடி லைட்கள் மட்டுமின்றி போக்கோ F3 GT மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி X7 மேக்ஸ் ஆகும். இது மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் நிலை டிக் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும்.
இந்த நிலையில், வாட்ஸ்அப் டிக் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது.


இந்தியாவில் சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் தகவல்களில் அதிகாரிகள் சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டும் பதிவுகளை நீக்குவது, சர்ச்சைக்குள்ளாகும் தகவலை முதலில் பதிவிட்டது யார் என்ற விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலாகி இருக்கின்றன.
இதை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் மத்திய அரசு இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிப்பதாக கூறி, புது டிக் முறை அமலுக்கு வந்துள்ளது என வைரல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை. ஏற்கனவே பலமுறை இதேபோன்ற தகவல் வைரலாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி US1 ஸ்மார்ட் டிவி மாடலை ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதே நாளில் புது ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் நார்டு N200 5ஜி வேரியண்ட் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் வலைதளத்தில் சிறப்பு குலுக்கல் நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட்போன் வெளியாகும் நாள் வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. குலுக்கலில் அதிகபட்சம் 8500-க்கும் அதிக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

வரும் நாட்களில் புது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி விவரங்களை ஒன்பிளஸ் வெளியிடும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் அமேசான் தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.






