என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
Byமாலை மலர்28 May 2021 4:13 AM GMT (Updated: 28 May 2021 4:13 AM GMT)
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி US1 ஸ்மார்ட் டிவி மாடலை ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதே நாளில் புது ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் நார்டு N200 5ஜி வேரியண்ட் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் வலைதளத்தில் சிறப்பு குலுக்கல் நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட்போன் வெளியாகும் நாள் வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. குலுக்கலில் அதிகபட்சம் 8500-க்கும் அதிக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
வரும் நாட்களில் புது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி விவரங்களை ஒன்பிளஸ் வெளியிடும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் அமேசான் தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X