என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகின்றன.


    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்தின் டென்சார் சிப்செட் பயன்படுத்துகின்றன. 

    பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும். பிக்சல் 6 ப்ரோ மாடல் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    அதன்படி பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120x1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50 எம்பி பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்துள்ளது.


    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனம் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்று இருக்கிறது. சியோமியின் எம்.ஐ. வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விற்பனையால் இது சாத்தியமானது என சியோமி தெரிவித்து இருக்கிறது.

    அமேசான் தளத்தில் விற்பனையான பத்து டிவிக்களில் எட்டு மாடல்கள் எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டை சேர்ந்தவை ஆகும். ரெட்மி டிவி எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் எம்ஐ டிவி 5எக்ஸ் 43 இன்ச் மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

     சியோமி ஸ்மார்ட் டிவி

    தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களுக்கு ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களுக்கு ரூ. 3500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எம்ஐ டிவி 5எக்ஸ் சீரிஸ் மாடலுக்கு ரூ. 3 ஆயரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கின்றன.


    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனையில் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்கள் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. 

     ப்ளிப்கார்ட்

    பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐந்தில் ஒரு வாடிக்கையாளர் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஸ்மார்ட்போனினை வாங்கியுள்ளனர். ஆப்பிள் மட்டுமின்றி சியோமி மற்றும் ரியல்மி நிறுவன மாடல்களும் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.


    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 குறித்த அறிவிப்பை 2021 ஐ.ஒ. நிகழ்வில் வெளியிட்டது. பல்வேறு டெவலப்பர் பிரீவியூ, பீட்டா பில்டுகளை கடந்து தற்போது ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனினும், இது ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் முறையில் வெளியாகி இருக்கிறது.

    தற்போதைய அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படவில்லை. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

     ஆண்ட்ராய்டு 12 யு.ஐ.

    ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் 3, பிக்சல் 3ஏ, பிக்சல் 4, பிக்சல் 4ஏ, பிக்சல் 4ஏ 5ஜி, பிக்சல் 5 மற்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர விரைவில் அறிமுகமாக இருக்கும் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.

    பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தவிர இந்த ஆண்டு இறுதியில் சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, சியோமி, ரியல்மி, டெக்னோ மற்றும் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.


    உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது. உலகம் முழுக்க பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 4) இரவு 9 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

     பேஸ்புக்

    பின் சில நிமிடங்களில் சர்வர் டவுன் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைதளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதே போன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.

    ‘முடங்கிய சேவை திரும்ப செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் இதன் சேவைகள் முடங்கி, பின் செயல்பாட்டுக்கு வந்தது.

    7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 700 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

     பேஸ்புக் ஸ்கிரீன்ஷாட்

    ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சூக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சாம்சங் சப்போர்ட் வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    கடந்த மாதம் சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமராவுடன் குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்22

    ஜெர்மனியில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 239.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,700 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியவில் இந்த ஸ்மார்ட்போன் ஆப்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இது பிளாக், லைட் புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ப்ரோ அந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பெயரில் புதிய பிராசஸர் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த பிராசஸர் கொண்ட சாதனங்கள் வெளியீடு, உற்பத்தி சிக்கல் காரணமாக தள்ளி போனதாக கூறப்படுகிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து சில வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

     மேக் மினி

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அளவில் மினி எல்.இ.டி. ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிளாட்-எட்ஜ் டிசைன், மேக்சேப் சார்ஜிங் போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படலாம்.

    மேக்புக் தவிர பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்புக் ப்ரோ மாடலை தொடர்ந்து மேம்பட்ட மேக் மினி, ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
    ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி ஐபோன் மாடல் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் 2021 சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கியது. 

    சிறப்பு விற்பனையின் அங்கமாக ஐபோன் 12 மினி மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் தற்போது ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் ஐபோன் 12 மினி ரூ. 59,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    சிறப்பு விற்பனையில் ஐபோன் 12 மினி 128 ஜிபி விலை ரூ. 43,999 என்றும் 256 ஜிபி விலை ரூ. 53,999 என்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    விலை குறைப்பு காரணமாக தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஐபோன் மாடலாக ஐபோன் 12 மினி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மினி தற்போது ரூ. 69,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ55 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஏ54 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒ.எஸ்.11 கொண்டிருக்கும் ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

     ஒப்போ ஏ55

    ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 15,490 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிக 5ஜி பேண்ட்களுக்கான வசதி கொண்டுள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

     மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ

    மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாங்கும் இந்திய பயனர்களுக்கு ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாக வழங்குகிறது.


    ஆப்பிள் இந்தியா நிறுவனம் ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோருக்கு மட்டும் பொருந்தும். மேலும் இது அக்டோபர் 7 ஆம் தேதி துவங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து ஐபோன் 12 மினி விலை ரூ. 59,900 என துவங்குகிறது. ஐபோன் 12 விலை ரூ. 65 ஆயிரம் என துவங்குகிறது. இந்தியாவில் ஏர்பாட்ஸ் விலை ரூ. 14,900 ஆகும்.

     வலைதள ஸ்கிரீன்ஷாட்

    முன்னதாக ஆப்பிள் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கியது. இந்த சலுகை கல்வி சலுகையின் அங்கமாக வழங்கப்பட்டது.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் நோட் 1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலையில் விற்பனைக்கு வருகிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் நோட் 1 மாடலை அறிமுகம் செய்து கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கியது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் விலை அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 என உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இன் நோட் 1 விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இன் நோட் 1 விலையில் ரூ. 1500 குறைக்கப்பட்டு ரூ. 9499 என மாறி இருக்கிறது.

     மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

    விலை குறைப்பு ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அமலுக்கு வருகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போதைய விலை குறைப்பு நிரந்தரமானதா அல்லது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ×