என் மலர்
மொபைல்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்ற நாடுகளில் எக்சைனோஸ் 2100 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12, 5ஜி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. அம்சங்கள்
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4
- சிங்கில் / டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
- 32 எம்.பி. செல்பி கேமரா
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மோஸ்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. வைட், லாவெண்டர், கிராபைட் மற்றும் ஆலிவ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி.+128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை முறையே 699.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 52,215 என்றும் 8 ஜி.பி.+256 ஜி.பி. விலை 769.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 57,340 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரை வெளியிட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பிளஸ் 9 ஆர்.டி. ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
Get ready to decode greatness. Coming soon!#NeverSettlepic.twitter.com/kEtiDfAt3e
— OnePlus India (@OnePlus_IN) January 2, 2022
ஒன்பிளஸ் 9ஆர்.டி. அம்சங்கள்
- 6.62 இன்ச் 1080x2400 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 ஜி.பி.யு.
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்.பி. பிரைமரி கேமரா
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா
- 16 எம்.பி. செல்பி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வார்ப் சார்ஜ் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 மாடலுக்கான டீசரையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. இதில் 40 டி.பி. வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன், மூன்று மைக்ரோபோன்கள், கால் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசர் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாதம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துவிட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
இதில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பும் அம்பலமாகி இருக்கிறது.
அதன்படி புதிய மாடல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள், வளைந்த ஸ்கிரீன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இதே விவரங்கள் அடங்கிய ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா
- 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
- 32 எம்.பி. செல்பி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 80 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல்களின் புதிய ரெண்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன.
புதிய ரெண்டர்களின் படி கேலக்ஸி எஸ்22 மாடலில் பன்ச் ஹோல் ரக ஃபிளாட் டிஸ்ப்ளே, மெட்டல் சேசிஸ், வலதுபுறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், சாம்சங் லோகோ இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன், பின்க் கோல்டு, பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, கிரீன், பேண்டம் பிளாக் மற்றும் பேண்டம் வைட் நிறங்களில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென், மெட்டல் பிரேம், நான்கு கேமரா சென்சார்கள், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் கியூ.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனினை ரூ. 49,999 விலையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 36,999 விலையில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 9 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒன்பிளஸ் 9 5ஜி 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் எக்சேன்ஜ் சலுகையும் சேர்க்கும் போது ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 31,999 விலையில் வாங்கிட முடியும். அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6.55 இன்ச் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீட்டை தொடர்ந்து மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 மாடல் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ்30 ப்ரோ பெயரில் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து மோட்டோரோலா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை துவங்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு சீனாவில் துவங்கி இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் எல்.டி.பி.ஒ. 2.0 டிஸ்ப்ளே பயன்படுத்துகிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் சாம்சங் டிஸ்ப்ளேவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் வளைந்த எல்.டி.பி.ஒ. அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 32 எம்.பி. செல்பி கேமரா, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. லென்ஸ், 3 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டன.
சாம்சங்கின் புதிய எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் வால்மார்ட் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. இதன் 128 ஜி.பி. கிராபைட் நிற வேரியண்ட் விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,450 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த பதிவு தவறுதலாக இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. இதன் 128 ஜி.பி. விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 256 ஜி.பி. விலை 749 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம்.
வால்மார்ட் பதிவுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் அறிமுகமானதும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ நிறுவனம் வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்க்கப்பட்டது.
விவோ நிறுவனம் தனது வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டீசரில் வி23 மாடலில் பிளாட் ஸ்கிரீன், மெட்டல் பிரேம் மற்றும் வ23 ப்ரோ மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
வி23 ப்ரோ மாடலில் இரட்டை செல்ஃபி கேமராக்கள், மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எஸ்12 மற்றும் எஸ்12 ப்ரோ போன்றே காட்சியளிக்கின்றன. விவோ வி23 ப்ரோ மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

புதிய வி23 சீரிஸ் இந்தியாவின் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த வசதி விவோ வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி மாடல்களின் சன்ஷைன் கோல்டு நிற வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் 18 ஜி.பி. ரேம் வேரியண்ட் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் என அழைக்கப்படுகிறது. இதன் விற்பனை இதுவரை துவங்காமல் இருந்தது. தற்போது இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் 18 ஜி.பி. + 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடலில் 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது ஜி.டி.2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. இது ரியல்மி நிறுவனத்தின் முதல் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகமாகிறது.
முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ஜி.டி.2 ப்ரோ மாடலில் மூன்று புதிய அம்சங்கள் முதல் முறையாக ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைன் கொண்டு உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் உலகிலேயே முதல்முறையாக பயோ-சார்ந்த பேக் கவர் வழங்கப்படுகிறது.

இத்துடன் 150 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா, ஃபிஷ்-ஐ மோட், ஆண்டெனா அரே மேட்ரிக்ஸ் சிஸ்டம், உலகின் முதல் அல்ட்ரா-வைடு பேண்ட் ஆண்டெனா ஸ்விட்சிங் தொழில்நுட்பம், வைபை என்ஹான்சர், 360 டிகிரி என்.எப்.சி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி ஜி.டி. 2 ப்ரோ மாடலில் 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 800 டாலர்களுக்கும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹாங்-காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்பினிக்ஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனிஷ் கபூர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்தார்.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய 55 இன்ச் டி.வி. மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

“ஸ்மார்ட்போனின் விலையை நிர்ணயிக்க பல்வேறு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். உதிரிபாகங்கள் விலை மட்டுமின்றி, டாலர் மதிப்பு கடந்த சில மாதங்களில் 8 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த விலையை பாதிக்கும். இருந்தபோதும், ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5 முதல் 6 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்பினிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த 55 இன்ச் டி.வி. மாடல் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும்.






