search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அசுஸ்
    X
    அசுஸ்

    இரண்டு போன்களை 15-ந்தேதி ரிலீஸ் செய்கிறது அசுஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அசுஸ் செல்போன் நிறுவனம் இரண்டு மாடல்களை வருகிற 15-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    இந்தியாவில் கடந்த சில நாட்களாக செல்போன் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இரண்டு ரோக் மாடல் போன்களை வருகிற 15-ந்தேதி ரிலீஸ் செய்கிறது.

    அசுஸ் ரோக் போன் 5S, 5S புரோ ஆகிய மாடல்களை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. இரண்டு போன்களும் 6.78 இன்ஞ் நீளம் கொண்ட, ஃபுல் ஹெச்.டி.பிளஸ், அமோல்டு ஹெச்.டி.ஆர்., 144 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே (சாம்சங்ஸ் E4 போன்று) கொண்டதாகும்.

    18 ஜி.பி. வரை ரேம் கொண்ட நிலையில், 512 ஜி.பி. வரை ஸ்டோரேஜ் வசதி கொண்டது. பிராசஸ்சர் Snapdragon 888 Plus SoC கொண்டது.

    இதில் 5S புரோ ரோக் விசன் கலருடன், பிமோல்டு டிஸ்பிளே கொண்டது. 16 ஜி.பி. ரேம் கொண்ட 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 18 ஜி.பி. ரேம் கொண்ட ரேம், 512 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஓ.எஸ். ரோக் யூ.ஐ. உடன்  ஆண்ட்ராய்டு 11 கொண்டது. இரண்டு சிம் (நானோ) வசதி கொண்டது. 64 எம்.பி. ரியர் கேமரா, 13 எம்.பி. அல்டாரா வைடு கேமரா, அதுமட்டுல்லாமல் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் கேமரா கொண்டுள்ளது. 64 எம்.பி. ரியல் கேமராவில் 8K வீடியோ எடுக்கலாம்.

     6000 mAh/5800 mAh வசதியுடன், 65வாட்ஸ் ஹைபர்சார்ஜ் வேக சார்ஜ் வசதி கொண்டது. முன்பக்கம் 24 எம்.பி. கேமரா வசதி கொண்டது.
    Next Story
    ×