என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
    • ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.

    ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.

    இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு

    இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.

    அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.

    முக்கிய அம்சங்கள்:

    இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.

    யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.

    சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

    எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.

    இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது

    குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.

    வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.

    • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
    • புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மீடியாடெக் பிராசஸருக்கு பதிலாக எக்சைனோஸ் 1330 SoC பிராசஸரால் இயக்கப்படுகிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது. இத்துடன் ஜெமினி லைவ் ஆப்ஷன் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    முந்தைய கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் சற்று மெல்லியதாகவும் இலகுவாகவும் மாறியுள்ளது. மேலும் கேமரா வடிவமைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் சஃபையர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.12,499 என்றும் 6GB + 128GB மாடலின் விலை ரூ.13,999 மற்றும் டாப்-எண்ட் 8GB + 128GB மாடலின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி M17 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் .

    இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 500 வங்கி சார்ந்த கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் உள்ளது.

    • ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
    • இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.

    ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:

    டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

    சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது.
    • ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்.

    வோடபோன் ஐடியா (Vi) அதன் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ரூ.249 திட்டம் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.249 திட்டம் முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உடன் வருகிறது.

    பிரபல ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், வோடபோன் ஐடியா இன்னும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது, இது இன்னும் ஒரு நல்ல சலுகையாகும். ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்து. இத்துடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

    1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தை நீக்கியிருக்கலாம். இதற்கு பிறகு, மலிவு விலை வரம்பை (ரூ.300க்குக் கீழ்) பார்க்கும்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 1 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை பெரும்பாலும் நீக்கியுள்ளன. ஜியோ இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 திட்டத்தை வழங்குகிறது.

    ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள். நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

    மலிவு விலை பேக்குகள் பிரிவின் கீழ் ஜியோ வழங்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன, அவை ரூ.189 மற்றும் ரூ.799 விலையில் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்குகின்றன. ஆனால் ரூ.189 திட்டத்துடன், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.799 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இது 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது.

    • சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும்.
    • 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் சியோமி நிறுவனம், சியோமி 17, சியோமி 17 ப்ரோ மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போனைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்வான்ஸ் ஜூம் வசதி கொண்ட மூன்று 50 எம்.பி. கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இதில் சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும். இதில் 7500mAh பேட்டரி, 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில், 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.

    குட்டி திரையில், பாடல் கேட்பது, குறுந்தகவல்களை படிப்பது, அழைப்புகள் பற்றிய விவரங்களை பார்ப்பது போன்ற தேவைகளுக்காக, போனின் பின்பக்கம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்ரினோ 840 GPU கிராஃபிக்ஸ் கார்டு, ஹைப்பர் ஓ.எஸ். 3, 8K வீடியோ ரெக்கார்டிங், IP68 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வழங்கப்பட்டுள்ளது.

    • ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    • 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

    விவோ V60e அம்சங்கள்:

    விவோ இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட் புதிய, விவோ V60e ஸ்மார்ட்போன்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 + IP69 சான்றுகளுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ V60e ஸ்மார்ட்போனில் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

    கேமராவை பொறுத்தவரை, விவோ V60e ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும்.

    • இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.
    • இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது.

    இந்தியாவில் ரெனோ 14 5ஜி மாடலின் புதிய வெர்ஷனை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கலாச்சார ரீதியாக ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுமையான ஃபினிஷ் கொண்டுள்ளது. இந்த மாடல் வழக்கமான நிறுவனத்தின் அதே அம்சங்களுடன் வருகிறது. அதே நேரத்தில் அதன் பின்புற பேனலில் தனிப்பயனாக்கப்பட்ட தோற்றம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்பம் உள்ளது.

    புதிய வெர்ஷன் ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் என அழைக்கப்படுகிறது. இது மண்டலா மற்றும் மயில் உள்ளிட்ட இந்திய மையக்கருத்துகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளி மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் சுடர் போன்ற ஃபினிஷ் கொண்டுள்ளது. இவை அனைத்தும் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இது மாறுபாட்டையும் ஆழத்தையும் கொண்டுவருகிறது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலை வேறுபடுத்தும் வகையில் ஒப்போ நிறுவனத்தின் க்ளோ-ஷிஃப்ட் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த நடைமுறை மற்றும் தோற்றம் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்து இருக்கிறது. இந்த சாதனம் ஏரோ-ஸ்பேஸ் கிரேடு ஃபிரேம், கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    புதிய ஒப்போ ரெனோ 14 5ஜி ஸ்பெஷல் எடிஷன் 8GB ரேம், 256GB மெமரி மாடலின் விலை ரூ.39,999 ஆகும். பண்டிகை கால தள்ளுபடி செய்யப்பட்டு இந்த மாடலின் விலை ரூ.36,999 ஆகக் குறைகிறது. வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா மாத தவணை, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.3,000 வரை கேஷ்பேக், ரூ.3,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

    ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் அம்சங்கள்

    இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.6 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது LPDDR5X RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் 80W சார்ஜிங், 6000mAh பேட்டரி கொண்டுள்ளது.

    கேமராவை பொருத்தவரை OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 50MP ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது. மேலும் இரட்டை ஸ்பீக்கர்கள், இ-சிம் சப்போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மேம்பட்ட கூலிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

    • 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
    • டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    S-சீரிஸ் டேப்லெட் மாடல்களை அப்டேட் செய்த நிலையில், சாம்சங் தற்போது பட்ஜெட் பிரிவு வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில், என்ட்ரி லெவல் டேப்லெட் கேலக்ஸி டேப் A11-ஐ அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மாடல் கேலக்ஸி A9 மாடலை போன்று அதே விலையில் தொடங்குகிறது. இந்த மாடல் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி டேப் A11 மாடலில் 2.2GHz ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5,100mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 8.7 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    பட்ஜெட் பிரிவில் லெனோவா மற்றும் ரெட்மி என போட்டி நிறுவன பிரான்டுகளை விட கேலக்ஸி டேப் A11 விலையில் சலுகையை கொண்டுள்ளது. அதன்படி இந்த டேப்லெட் வைபை மாடலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன், செல்லுலார் ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மெமரியை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

    • போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
    • கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்திற்கு பிறகு, ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன், ஆஃப்லைன் வர்த்தக தளங்களில் சலுகை விலையுடன் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் ஸ்மார்ட்போன், பானாசோனிக் பி110 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.4,999 முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்ச பயன்பாடு கொண்டவர்கள், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்துபவர்கள், இந்த டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

    சோலோ 1எக்ஸ், லாவா இசட் 1எஸ், ரெட்மி 5ஏ போன்ற மாடல்கள் ரூ.5,299 விலையிலும், போகோ சி71 ரூ.5,599 விலையிலும், ரெட்மி ஏ2 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஆகியவை ரூ.5,900 விலையிலும் விற்பனையாகின்றன. இவையனைத்தும் 1 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.

    ரெட்மி ஏ3எக்ஸ், ரெட்மி ஏ5, ரெட்மி 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் ரூ.5,999 விலையில் கிடைக்கின்றன. போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் மாடலின் 6 ஜிபி ரேம் மாடல் 128 ஜிபி மெமரியுடன், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் ரூ.6,499 விலையிலேயே கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக சலுகை வழங்கி அதன் விலையை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. அதுவும், ரூ.1.10 லட்சத்தில் விற்பனையாகிறது.

    • PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது.
    • இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    சோனி நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் பிளே ஸ்டேஷன் 5 (PS5) மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த குறுகிய கால சலுகை கன்சோலின் டிஜிட்டல் மற்றும் Physical Edition மாடல்களின் விலையை ரூ.5,000 குறைக்கிறது.

    அசத்தலான சலுகைகளை வழங்கும் சோனியின் பண்டிகை சிறப்பு விற்பனை நேற்று (திங்கட்கிழமை) அமேசான், பிளிப்கார்ட், இதர ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனை மையங்களில் தொடங்கியது.

    ரூ. 5,000 தள்ளுபடி:

    பிளேஸ்டேஷன் சாதனத்தின் தாய் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்டிகை கால விற்பனையை அறிவித்தது. இந்த சலுகை: PS5 Physical Edition (CFI-2008A01X) மற்றும் PS5 Digital Model (CFI-2008B01X)- என இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 மாடல்களுக்கு பொருந்தும். அதன்படி இரண்டு கன்சோல்களும் ரூ. 5,000 தள்ளுபடியைப் பெறுகின்றன.

    சலுகையின் கீழ் PS5 டிஜிட்டல் எடிஷன் ரூ.44,990 விலையில் கிடைக்கிறது. இது அதன் சில்லறை விலை ரூ.49,990இல் இருந்து ரூ.44,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.54,990க்கு விற்பனை செய்யப்படும் கன்சோலின் Physical Edition ரூ.49,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பண்டிகை கால சிறப்பு விற்பனை அக்டோபர் 19ஆம் தேதி அல்லது ஸ்டாக் தீரும் வரை அமேசான், பிளிப்கார்ட், பிளிங்கிட், ஜெப்டோ, க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் மற்றும் நாட்டில் உள்ள பிற அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டேஷன் சில்லறை விற்பனை ஸ்டோர்களில் நடைபெறும்.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம், சோனி நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் மாடல் PS5 கன்சோலின் விலையை ரூ. 5,000 உயர்த்தியது. இதனால் கன்சோலின் விலை ரூ. 44,990இல் இருந்து ரூ. 49,990 ஆக உயர்ந்தது.

    • மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் நிறுவனத்தின் முதல் ஓபன் இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) நத்திங் இயர் (ஓபன்) அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்வ மாடல் காப்புரிமை நிலுவையில் உள்ள டயாபிராம், டைட்டானியம் கோட்டிங், அல்ட்ரா-லைட் டிரைவர் மற்றும் ஸ்டெப்டு டிசைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தனித்துவ வடிவம் ஆடியோ சிதைவை குறைத்து, லோ ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்துகிறது. இதன் இயர் ஹூக் நிக்கல்-டைட்டானியம் வயர் கொண்டுள்ளது. இது நெகிழ்வானதாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது.

    ஆட்டோமேடிக் பேஸ் என்ஹான்ஸ் அல்காரிதம் குறைந்த ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்தி சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஹெட்செட் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான அழைப்புகளை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது. இது 28 மில்லியனுக்கும் அதிகமான இரைச்சல் சூழ்நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது 2 மணிநேரயிலான பிளேபேக்கை உறுதி செய்கிறது.

    நத்திங் இயர் (ஓபன்) வைட் நிறத்தில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 9,999 ஆகும். இது இப்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

    ×