என் மலர்
கணினி
ஏர்டெல் நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகைகளை நாடு முழுக்க வழங்குவதாக அறிவித்து உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 199 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இரு சலுகைகளும் மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் தற்சமயம் இந்தியா முழுக்க ஏர்டெல் பயனர்கள் எந்த வட்டாரத்தில் இருந்தாலும் இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இரு சலுகைகளிலும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. இவற்றில் அதிவேக டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த சலுகைகள் 16 வட்டாரங்களில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் ஏர்டெல் ரூ. 129 மற்றும் ரூ. 199 சலுகைகள் புதிய அறிவிப்பின் படி இந்தியா முழுக்க ஏர்டெல் சேவை வழங்கப்படும் 23 வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
தற்போதைய அறிவிப்பு வெளியாகும் முன் இரு சலுகைகளும் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, சென்னை, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படாமல் இருந்தது.
ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 199 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டியும் 24 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சலுகைகளை குறைந்த விலையில் அறிவித்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீட்டித்து உள்ளது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இணைய சேவை வழங்கும் மூன்று புதிய சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.
புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400ஜிபி என அழைக்கப்படுகிறது. இவை அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பியுஎன் 400 ஜிபி சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையையும் வழங்குகிறது.

200ஜிபி சிஎஸ்111 சலுகையில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா ரூ. 490 விலையில் வழங்கப்படுகிறது. 300 ஜிபி சிஎஸ்112 சலுகையின் கட்டணம் ரூ. 590 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பியுஎன் 400 ஜிபி சலுகையில் மாதம் 400 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் 200 ஜிபி சிஎஸ்111 மற்றும் 300 ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400 ஜிபி சலுகைகள் தற்சமயம் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய சலுகைகள் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமின்றி அனிமேட்டெட் எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்டின் ப்ரோபைல் பக்கம் சென்று வீடியோ கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த இன்டர்ஃபேஸ் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் வீடியோவை ஆன் அல்லது ஆஃப் செய்வது மற்றும் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களிடையே மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் டெலிகிராம் சாட்களில் ஸ்கிரால் செய்வதுடன், வீடியோவை பாஸ் செய்யாமல் மல்டி-டாஸ்கிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. அனைத்து அழைப்புகளும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது.
வீடியோ கால் அம்சத்துடன் புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஆல்ஃபா அம்சமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. டெலிகிராம் செயலியில் க்ரூப் வீடியோ கால் செய்வதற்கான வசதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
குவால்காம் நிறுவன பிராசஸர்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சைபர்செக்யூரிட்டி பிரச்சினை பொதுவான ஒன்றாக மாறிவருகிறது. தற்சமயம் குவால்காம் சிப்செட்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செக்பாயிண்ட் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.
புதிய பாதுகாப்பு குறைபாட்டை குவால்காம் ஆச்சிலீஸ் என அழைக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் விற்பனையாகும் மொபைல் போன்களின் 40 சதவீத மாடல்களில் குவால்காம் பிராசஸர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த பாதுகாப்பு குறைபாடு உலகம் முழுக்க மொபைல் சாதனங்களை பயன்படுத்துவோரில் 40 சதவீத பேரை பாதித்து இருக்கலாம்.

இந்த குறைபாடு காரணமாக மொபைல் சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் இன்ஸ்டால் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் சிப்களில் உள்ள 400 வரி கோட்களை யார் கண்டறிந்தாலும், ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இந்த கோட்களை இயக்கும் உரிமை கொண்டவர்களால், அழைப்புகளை பதிவு செய்ய முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களில் இருந்து விவரங்களை திருடவும், செயலிகளை இன்ஸ்டால் செய்யவும், சாதனத்தை நிரந்திரமாக பிளாக் செய்யவும் முடியும். இந்த குறைபாடு பற்றிய விவரங்கள் ஏற்கனவே குவால்காம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.
அந்த வகையில் இதனை சரி செய்யும் பணிகளில் குவால்காம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதனை சரி செய்வதற்கான அப்டேட்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிகிராம் செயலியில் விரைவில் வீடியோ காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு கடுமையான போட்டியாளராக டெலிகிராம் இருக்கிறது. டெலிகிராமில் அவ்வப்போது புதுப்பது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த செயலியில் இதுவரை வீடியோ காலிங் வசதி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலை விரைவில் மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்படலாம்.
உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து புதிய ஏபிகே வெர்ஷன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தற்போதைய தகவல்களின் படி டெலிகிராமின் வீடியோ காலிங் இன்டர்பேஸ் மற்ற செயலிகளில் உள்ளதை போன்றே காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. பின்புறம் மற்றும் முன்புற கேமராக்களை மாற்ற ஆன் ஸ்கிரீன் பட்டன் வழங்கப்படுகிறது. இதேபோன்று வீடியோ டாகிள், மியூட் மற்றும் குளோஸ் செய்யக்கோரும் பட்டன்களும் ஸ்கிரீனில் காணப்படுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் நிறுவனத்தின் புதிய 10 ஆம் தலைமுறை மொபைல் பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு, நீண்ட பேட்டரி லைஃப், விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய அல்ட்ரா-ஸ்லிம் லேப்டாப் கிளான்ஸ் பை மிராமெட்ரிக்ஸ் எனும் ஏஐ சார்ந்த மென்பொருள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பவர் பட்டனில் கைரேகை சென்சார் மற்றும் விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி போன்ற கூடுதல் செக்யூரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய லெனோவோ லேப்டாப் மாடலில் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 2ஜிபி ஜிடிடிஆர்5, அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி மற்றும் அதிகபட்சம் 16 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் 3200 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் 14 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, டால்பி விஷன் மற்றும் லெனோவோ சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் வைபை 6, டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
புதிய லெனோவோ யோகா லேப்டாப் ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 79990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் லெனோவோ வலைதளங்களில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது.
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் இணைந்து அடுத்த தலைமுறை கேமிங் கன்சோலின் விற்பனை மூன்று மாதங்களில் துவங்கும் என தெரிவித்து இருக்கின்றன. புதிய கேமிங் கன்சோல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச வெளியீடு என்பதால் புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் இந்திய சந்தையிலும் நவம்பர் மாத வாக்கில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் நவம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர் பேக்கேஜிங்கில் நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன் விற்பனை செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே இதன் வெளியீடு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது.
புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடலில் ஆயிரக்கணக்கான கேம்கள் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் பிளே ஸ்டேஷன் 5 சாதனத்திற்கு போட்டியாக அமைகிறது.
சோனியின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு கன்சோல்களும் விடுமுறை காலத்தை குறிவைத்து வெளியிடப்பட இருக்கின்றன.
சியோமி நிறுவனம் சீன சந்தையில் புதிய எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
சியோமி நிறுவனம் எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி மாடலை தனது 10-வது ஆண்டுவிழா நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவியில் 55 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிரான்ஸ்பேரன்ட் 4K OLED 10 பிட் பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஏஐ மாஸ்டர் ஸ்மார்ட் என்ஜின், மீடியாடெக் 9650 கஸ்டம் மேட் டிவி சிப், ஏஐ மாஸ்டர் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது வெவ்வேறு மோட்களில் ஆடியோவை வித்தியாசமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இதில் 5.7 எம்எம் அல்ட்ரா தின் பாடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கஸ்டம் மேட் எம்ஐயுஐ பிரத்யேக ஹோம் பேஜ், செட்டிங்ஸ், மை ஆப் மற்றும் உறுதியான டிரான்ஸ்பேரன்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K OLED டிஸ்ப்ளே
- குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் எம்டி9650 பிராசஸர்
- மாலி ஜி52 எம்சி1 ஜிபியு
- புரொஃபஷனல் கேம் மோட், ஆட்டோமேடிக் லோ லேடென்சி மோட்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- எம்யுஐ டிவி
- வைபை, ப்ளூடூத் 5, 3xஹெச்டிஎம்ஐ 2.1, 2x யுஎஸ்பி
- டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ஆடியோ
சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் மாடல் விலை 49999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 537210 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்பசம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எதிர்கால சர்பேஸ் டுயோ சாதனத்தை அறிவித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு பிரிவு தலைவர் பனோஸ் பனே இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆண்ட்ரோமெடா எனும் பெயரில் தயாராகும் சர்பேஸ் டுயோ மாடலை மைக்ரோசாப்ட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சாதனம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது எனினும், இதன் வெளியீடு தாமதமானது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கிறது. இந்த யூசர் இன்டர்பேஸ் பார்க்க விண்டோஸ் 10 போன்று காட்சியளிக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சர்பேஸ் டுயோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 11 எம்பி பிரைமரி கேமரா, 5.6 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள். இரு ஸ்கிரீன்களில் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மாடல் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சர்பேஸ் டுயோ இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரியல்மி பிராண்டின் புதிய 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. முன்னதாக இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி போன்ற ஆன்லைன் வலைதளங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் முதற்கட்டமாக இந்தியா முழுக்க சுமார் 1250 விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ரியல்மி பிராண்டை நாடு முழுக்க பிரபலப்படுத்தும் நோக்கில் துவங்கபட்டு இருப்பதாக தெரிகிறது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் மற்றும் 4 ஸ்பீக்கர் சிஸ்டம், ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கின்றன. இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டிசிஎல், வு மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.
ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆன்லைன் தளங்களிலேயே விற்பனையாகி வந்தன.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்கலுக்கு தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில்ல அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாமல் இருப்பவர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை மூன்று நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது. இவ்வாறு இலவச டேட்டா வழங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இலவச சலுகையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த குறுந்தகவல் அடங்கிய ஸ்கிரீன்ஷாட் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோன்ற சலுகைகளை தொடர்ந்து பெற அன்லிமிட்டெட் சலுகையை தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தெரிவித்து உள்ளது.
தங்களின் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களில் இலவச சலுகையை வழங்க ஏர்டெல் எவ்வாறு தேர்வு செய்கிறது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறதா அல்லது தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பிரபல வீடியோ காலிங் செயலியான ஜூம் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜூம் செயலியில் புதிய ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது. புதிய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய ஃபில்ட்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டு உள்ளது. வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவம் கிடைக்காமல் இருந்தது. விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ள ஜூம் புதிய அம்சங்களை வழங்கி உள்ளது.
புதிய நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் உள்ளது. இவற்றை லே, மிட் மற்றும் ஹை என பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜூம் வீடியோ செட்டிங்களில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
முன்னதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டது. கூகுள் மீட்ஸ் சேவையிலும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் என்க்ரிப்ஷன் மற்றும் இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது.






