என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சாம்சங் கேலக்ஸி F54 5ஜி மாடல் எக்சைனோஸ் 1380 சிப்செட் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகள் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் கேலக்ஸி A54 மாடலில் உள்ளதை போன்றே எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், கேலக்ஸி F54 5ஜி மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED பிளஸ் ஸ்கிரீன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1 கொண்டிருக்கும் கேலக்ஸி F54 5ஜி மாடல் நான்கு ஒஎஸ் அப்டேட்கள், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படவுள்ளன.

    சாம்சங் கேலக்ஸி F54 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி O டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் எக்சைனோஸ் 1380 பிராசஸர்

    மாலி G68 MP5 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 5.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் மீடியோர் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 27 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    • இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) துவங்கியது. ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் துவங்கிய WWDC 2023 நிகழ்வில் புதிய லேப்டாப், பிராசஸர், ஒஎஸ் வெர்ஷன்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. அந்த வகையில், 2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    15-இன்ச் மேக்புக் ஏர்: 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் மாடல் ஆகும். முழு சார்ஜ் செய்தால் இந்த லேப்டாப்பை அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன.

    மேக் ஸ்டூடியோ: ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் மற்றும் M2 அல்ட்ரா சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேக் ப்ரோ: யாரும் எதிர்பாராத நிலையில், ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் மூலம் அப்டேட் செய்து இருக்கிறது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹார்டுவேரை தொடர்ந்து சாஃப்ட்வேர் அறிவிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறலாம்.

    ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ்-இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய ஆஃபர் வழங்கப்படுகிறது.

    விஷன்ப்ரோ ஹெட்செட்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும். இந்த சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்புடன், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. 

    • புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ மாடலின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வில் தனது மேக் ப்ரோ மாடலை முற்றிலும் புதிய M2 அல்ட்ரா சிப்செட் உடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மேக் ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மூன்று மடங்கு அதிவேகமானது ஆகும். M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ மாடலில் 24-கோர் சிபியு மற்றும் 76-கோர் ஜிபியு, இருமடங்கு ரேம் மற்றும் எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் வாங்கிட முடியும். இத்துடன் அதிகபட்சம் ஏழு ஆஃப்டர்பர்னர் கார்டுகள் புதிய மேக் ப்ரோவில் வழங்கப்பட்டு உள்ளன. இது 8K ப்ரோ ரெஸ் தரம் கொண்ட 22 வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இதில் நான்கு தண்டர்போல்ட் 4 போர்ட்கள் உள்ளன.

    இந்த மேக் ப்ரோ மாடல் ஆறு ப்ரோ டிஸ்ப்ளே XDR-க்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி ஏ போர்ட்கள், இரண்டு அதிக பேண்ட்வித் கொண்ட HDMI போர்ட்கள், இரண்டு 10GB ஈத்தர்நெட் போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ (டவர் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் மேக் ப்ரோ (ரேக் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    • புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். செயலிகளை சப்போர்ட் செய்கிறது.
    • குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் WWDC 2023 நிகழ்வில் வைத்து அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் பற்றிய தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும்.

    இதுதவிர ஆப்பிள் உருவாக்கி இருக்கும் ஐசைட் (Eyesight) எனும் அம்சம் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் ஹெட்செட் உள்புறத்தில் இருக்கும் கேமராக்களை கொண்டு ஹெட்செட் பயன்படுத்துவோரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு பயனர்கள் எந்த அளவுக்கு மெய்நிகர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் அனைவரின் தலையிலும் எளிதில் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் இந்த ஹெட்செட்-இன் ஹெட் பேண்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அணிபவருக்கு மென்மையாகவும், அதிக சவுகரியத்தை கொடுக்கும் வகையிலும், எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலும் இருக்கிறது.

    விஷன் ப்ரோ மாடலின் ஹெட்பேண்ட்-இல் டூயல் டிரைவர் ஆடியோ பாட்கள் உள்ள. இவை பயனர்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோ தொழிநுட்பத்தை வழங்குகின்றன. ஹெட்செட் எடையை மேலும் குறைப்பதற்காக விஷன் ப்ரோ மாடலில் வெளிப்புற பேட்டரி யூனிட் உள்ளது. வயர் மூலம் பேட்டரி மற்றும் ஹெட்செட் இணைக்கப்பட்டு உள்ளது.

    கேமராவை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் மூன்று எலிமெண்ட் லென்ஸ்கள், ஹை-ரெஸ் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் இரண்டு IR கேமராக்கள், LED இலுமினேஷன்கள் உள்ளன. இந்த சாதனம் LiDAR மற்றும் வழக்கமான கேமரா சென்சார்களையும் பயன்படுத்துகிறது. இந்த ஹெட்செட் ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இது முற்றிலும் புதிய R1 சிப் மற்றும் M2 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    சஃபாரி போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே, நிஜ உலகில் மனிதர்களுடன் உரையாட முடியும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ சாலைகளிலும் பயன்படுத்த முடியும். விஷன் ப்ரோ ஹெட்செட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிக கேம்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

    • புதிய ஐஒஎஸ்-இல் சிரி சேவையை இயக்க ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதும்.
    • புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டது. புதிய ஐஒஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி இன்கமிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதை போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.

    மெசேஜஸ் அம்சத்தில் மிக எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இத்துடன் ஃபேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். இத்துடன் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும்.

    சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். இதே போன்று புகைப்படங்களையும் மிக எளிதில் ஷேர் செய்யலாம்.

    புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏ.ஐ. சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஒஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. புதிய ஐஒஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும். 

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது.

    டீசர்களின் படி புதிய சியோமி பேட் 6 மாடலில் கீபோர்டு டாக் மற்றும் சியோமி ஸ்மார்ட் பென் 2-ம் தலைமுறை மாடலும் அறிமுகமாகிறது. இத்துடன் பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் சியோமி பேட் 6 மாடல் கிரே மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     

    சியோமி பேட் 6 அம்சங்கள்:

    11 இன்ச் 2880x1800 பிக்சல் 16:10 டிஸ்ப்ளே, 30/48/50/60/90/120/144Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்

    அட்ரினோ 650 GPU

    6 ஜிபி/8 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயுஐ 14

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள்

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    8840 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்த டேப்லெட் மாடல் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

    • பாதுகாப்பு ஆய்வாளரான க்ரிஸ் ப்ளூமர் ஜிமெயிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்துள்ளார்.
    • கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விரைந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது.

    ஜிமெயில் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும் வகையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் புளூ வெரிஃபைடு (verified) செக்மார்க் வழங்கியது. இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோர், உண்மையான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இமெயில்களிடையே வித்தியாசத்தை உணர முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எத்தகைய பாதுகாப்பிலும், சிறு ஓட்டை இருக்கத் தான் செய்யும் என்ற வகையில் தற்போது ஜிமெயிலின் புதிய அம்சத்திற்கும் ஏமாற்றும் பேர்வழிகள் குறைபாட்டை உருவாக்கியுள்ளனர். க்ரிஸ் ப்ளூமர் என்ற பாதுகாப்பு ஆய்வாளர் ஜிமெயில் சேவையில் ஏற்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்து, தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த குறைபாடு கூகுளின் அதிகாரப்பூர்வ வெரிஃபிகேஷனில் மாதிரியை உருவாக்கி, பயனர்களை குறிப்பிட்ட இமெயில் நம்பகத்தன்மை கொண்டது என்று நம்ப வைப்பதாக க்ரிஸ் ப்ளூமர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே தகவலை க்ரிஸ் ப்ளூமர் கூகுள் நிறுவனத்திற்கும் தெரிவித்து இருந்தார். எனினும், இது வேண்டுமென்றே கூறப்படும் குற்றச்சாட்டு என்ற பதில் அளித்த கூகுள், இது பற்றி விசாரிக்க போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறது.

    பிறகு, இதுபற்றிய தகவல்களை க்ரிஸ் ப்ளூமர் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார். இவரது டுவிட்டர் பதிவு வேகமாக பரவியதை அடுத்து, கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது. இது குறித்து கூகுள் செக்யுரிட்டி குழு கூறியதாவது..,

    "கூர்ந்து கவனித்ததில் இந்த குறைபாடு வழக்கமான SPF பாதிப்பாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். இதன் காரணமாக இந்த குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது."

    "குழப்பத்திற்காக நாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது முந்தைய பதில் உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று புரிந்து கொள்கிறோம். என்ற போதிலும், இந்த விவகாரத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இது பற்றிய ஆய்வு மற்றும் எதிர்கால அப்டேட் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    • ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த இயர்பட்ஸ்-இல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12mm டிரைவர்ள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரண்ட் மோட்கள் உள்ளன. முந்தைய பட்ஸ் 4 மாடலில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    டிசைனை பொருத்தவரை புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதில் அளவில் பெரிய இயர்பட்ஸ், வட்ட வடிவிலான சார்ஜிங் கேஸ் உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 28 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இயர்பட்ஸ் மட்டும் ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் மொத்த எடை 42 கிராம் ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எஸ்.பி.சி. கோடெக் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. மேலும் இது பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் விலை விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

    • ஓபன்ஏஐ நிறுவத்தின் சாட்ஜிபிடி ஏற்கனவே செயலி வடிவில் கிடைக்கிறது.
    • ஏ.ஐ. சாட்பாட் இன்ஃபினிக்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஃபோலக்ஸ்-இல் ஒருங்கிணைக்கப்படும்.

    சாட்ஜிபிடி, சாட்பாட் மூலம் ஜெனரேடிவ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஓபன்ஏஐ நிறுவனம் அதிக பிரபலமடைய செய்திருக்கிறது. சந்தையில் புதுவரவு தொழில்நுட்பம் என்ற போதிலும், இந்த நிறுவனம் தொடர்ச்சியாக அதனை மேம்படுத்தியும், அதிக திறன்களை வழங்கியும் இந்த சேவையை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றி இருக்கிறது.

    இதன் காரணமாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் சாட்ஜிபிடி சேவை ஏராளமான டூல்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் இன்ஃபினிக்ஸ் நோட் 30 சீரிஸ் மாடலிலும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி இந்த ஏ.ஐ. சாட்பாட் இன்ஃபினிக்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஃபோலக்ஸ்-இல் (Folax) ஒருங்கிணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பிரபல டிப்ஸ்டரான ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், தனது சாதனங்களில் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைக்கும் முதல் ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் பெற இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    "ஓபன்ஏஐ நிறுவத்தின் சாட்ஜிபிடி ஏற்கனவே செயலி வடிவில் கிடைக்கிறது. எனினும், சாட்ஜிபிடி சேவையை மொபைலில் வழங்கும் சம்பவம் சிறப்பான ஒன்றாகும். ஃபோலக்ஸ் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் உடன் ஒருங்கிணைக்கும் போது, சாட்ஜிபிடி ஆப்பிள் நிறுவனத்தின் சிரி-க்கு கடும் சவாலை ஏற்படுத்தும்" என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு ஒருங்கிணைப்பது சுவாரஸ்யம் நிறைந்ததாகவும், வாய்ஸ் அசிஸ்டண்ட் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும் என்று தெரிகிறது. இன்ஃபினிக்ஸ் சாதனத்தில் சாட்ஜிபிடி வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்கை ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு உள்ளது. வாய்ஸ் அசிஸ்டண்ட் தனக்கென சொந்த அவதார் கொண்டிருக்கிறது. இதனை ஆக்டிவேட் செய்ய மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்தாலே போதுமானது.

    ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள இன்ஃபினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஃபினிக்ஸ் நோட் 30 மாடலில் 6.78 இன்ச் IPS LTPS ஸ்கிரீன் இன்ச் HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, எக்ஸ் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 13, பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஜெபிஎல் சார்ந்த டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி தெரியவரும். 

    • தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது.
    • இதேபோன்ற மதிப்பெண்களை ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில் கிடைக்கும் சிறந்த டேப்லெட்களில் ஒன்றாக ஒன்பிளஸ் பேட் உள்ளது. சாதனங்கள் உற்பத்தியின் போதே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக டியுரபிலிட்டி இருக்க வேண்டும். ஒன்பிளஸ் பேட் மற்றும் அதனுடன் வழங்கப்படும் ஸ்டைலோ அக்சஸரீ சமீபத்தில் ஜெர்ரிரிக்எவ்ரிதிங்கின் (JerryRigEverything) டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது.

    அதில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் பெருமளவு டெஸ்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. புதிய டேப்லெட் மாடல் அசத்தலான டியுரபிலிட்டி கொண்டிருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இது ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியான சாதனங்களை உருவாக்கி வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது.

    தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது. டியூரபிலிட்டி டெஸ்டின் படி, ஒன்பிளஸ் பேட் மாடலின் ஸ்கிரீனை ஸ்கிராட்ச் செய்ததில் அது ஆறு மதிப்பெண்களை பெற்றது. இதேபோன்ற மதிப்பெண்கள் தான் ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது. ஒன்பிளஸ் பேட் மாடலின் டிஸ்ப்ளே நேரடி தீயில் காண்பிக்கப்பட்ட நிலையிலும், பத்து நொடிகள் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

     

    பத்து நொடிகளை கடந்த பிறகே, அதன் பிக்சல்கள் சரியத் துவங்கின. மேலும் இவை நிரந்தரமாக சரியாமல், சிறிதுநேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே சீராகிவிட்டன. IPS LCD ரக பேனல் இதுபோன்றே இருக்கும். ஒன்பிளஸ் பேட் மாடலின் ஃபிரேம் ஆர்கிடெக்ச்சர், சாதனத்தை சுற்றிலும் மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் சிறிய பிளாஸ்டிக் பகுதி ஸ்டைலோவின் வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கிறது.

    வளைத்து பார்க்கப்படும் பெண்டு டெஸ்ட் (Bend Test) சோதனையில் ஒன்பிளஸ் பேட் மாடல் அதிக உறுதியாக இருந்ததோடு, ஓரளவுக்கு தான் சிதைந்தது. டேப்லெட்-இன் பின்புறத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்த பிறகு தான் ஃபிரேம் மடிந்தது. எனினும், டிஸ்ப்ளேவுக்கு அதிக சேதங்கள் ஏற்படவில்லை. மாறாக வெளியிலும் வரவில்லை. பல்வேறு ஐபேட் மாடல்கள் இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ஒன்பிளஸ் ஸ்டைலோ மாடல் பெண்டு டெஸ்டை எதிர்கொள்ளும் போது நிலைத்திருக்கவில்லை. இதன் உள்புறம் 82 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பிரெஷர் சென்சிங்கிற்காக காப்பர் பேட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலோவில் உள்ள காந்த பொருள், டேப்லெட்டுன் இணைந்திருக்க செய்கிறது.

    ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் பேட் மாடல் டியூரபிலிட்டி டெஸ்டின் பல்வேறு நிலைகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று அசத்தியது. ஆப்பிள் ஐபேட் மாடலுடன் ஒப்பிடும் போதும், இந்த டேப்லெட் அதன் உறுதித்தன்மை விவகாரத்தில் சிறந்து விளங்குவது தெரியவந்துள்ளது.

    ×