என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இந்திய சந்தையில் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்கள், ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் இந்திய விலையை குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி S22 விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் போரா பர்பில், கிரீன், ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் பின்க் கோல்டு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    விலை குறைப்பு விவரங்கள்:

    விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் விலை தற்போது ரூ. 64 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

    இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 54 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதன் விற்பனை அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி S22 அம்சங்கள்:

    6.1 இன்ச் full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.1, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
    • கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க்.

    உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது.

    • ஹாமர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
    • புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    ஹாமர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் உறுதியான மெட்டாலிக் பாடி மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டுள்ளது.

    இத்துடன் 1.85 இன்ச் அளவில் பெரிய ஸ்கிரீன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் ஏராளமான உடல்நலம் டிராக் செய்யும் வசதிகள்- இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மாதவிடாய், SpO2 போன்ற வசதிகள் உள்ளன. மேலும், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹாமர் ஃபிட் பிளஸ் அம்சங்கள்:

    1.85 இன்ச் 240x286 பிக்சல் டிஸ்ப்ளே

    100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ப்ளூடூத் காலிங்

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், இன்பில்ட் கேம்ஸ்

    பாஸ்வேர்டு ப்ரோடெக்ஷன், DND

    ஸ்டாப்வாட்ச், ரெய்ஸ்-டு-வேக்

    இரத்த அழுத்தம், SpO2, மாதவிடாய் மற்றும் இதய துடிப்பு மாணிட்டரிங் வசதி

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    அதிகபட்சம் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஹாமர் ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 399 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 11 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

    • புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.

    மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.

    இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: The Verge

    • இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.
    • இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி G27 மற்றும் G27Q கேமிங் மானிட்டர்களை தொடர்ந்து சியோமியின் துணை பிராண்டு ரெட்மி முற்றிலும் புதிய மற்றும் குறைந்த விலை மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ரெட்மி A27Q என்று அழைக்கப்படுகிறது. இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் IPS ஸ்கிரீன் உள்ளது.

    ரெட்மி A27Q 2K IPS அம்சங்கள்:

    புதிய ரெட்மி A27Q 2K IPS மானிட்டர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், பொழுதுபோக்கு சார்ந்த பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள IPS ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் தலைசிறந்த விஷூவல்களை அதன் உண்மை நிறங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.

    இத்துடன் HDR 10 சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இது தரவுகளுக்கு டெப்த் மற்றும் தரத்தை மேம்படுத்தி காண்பிக்கிறது. இதில் 8-பிட் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத sRGB சப்போர்ட், 95 சதவீதம் DCI-P3 சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி A27Q மானிட்டரில் 75Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் ப்ளூ லைட் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டிக்கு DPI.4 இன்டர்ஃபேஸ், HDMI இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி ஏ இன்டர்ஃபேஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் உள்ளது.

    இதில் உள்ள யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் 65 வாட் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மானிட்டரை வால் மவுன்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை 869 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 047 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நிறம் மாறும் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய S23 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐடெல் S23 மாடலில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T606 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் ஐடெல் S23 மிஸ்ட்ரி வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் பின்புறம் உள்ள பேக் பேனல் சூரிய வெளிச்சம் அல்லது யு.வி. லைட் உள்ள பகுதியில் காண்பிக்கப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை யுஎஸ்பி டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

    ஐடெல் S23 அம்சங்கள்:

    6.6 இன்ச் 720x1600 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

    மாலி G57 MP1 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    ஏ.ஐ. கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐடெல் S23 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் மிஸ்ட்ரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 14 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியுடன்) ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என ஐடெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

    அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

    ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.

    ஜியோடேக் அம்சங்கள்:

    ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.

    ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.

    ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

    ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.

    ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம். 

    • மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
    • வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்படுகிறது.

    சமூக வலைதள நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முன்னணி தளங்களை வைத்திருக்கிறது. டுவிட்டர் நிறுவனம் துவங்கி வைத்த கட்டண முறையிலான வெரிஃபைடு சேவையை தற்போது மெட்டாவும் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவை துவங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவையை பெற மொபைல் செயலிகளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான வெரிஃபைடு சேவை மாதம் ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது.

    "மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது," என மெட்டா தெரிவித்துள்ளது.

    "முதற்கட்டமாக பல்வேறு உலக நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மெட்டா வெரிஃபைடு சோதனையை இந்தியாவுக்கும் நீட்டிக்கிறோம். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு பேட்ஜ்களை தொடர்ந்து வழங்குவோம்," என்று மெட்டா மேலும் தெரிவித்துள்ளது.

    • ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிவேக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல், ஸ்மார்ட்போன் வல்லுனர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், ஒன்பிளஸ் 10R வாங்க நினைத்தோர், தற்போது இந்த மாடலை வாங்க நல்ல தருணம் உருவாகி இருக்கிறது. ஒன்பிளஸ் கம்யுனிட்டி சேல் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் ஒன்பிளஸ் 10R எண்டூரன்ஸ் எடிஷன் ரூ. 43 அயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வந்தது.

    தற்போது கம்யுனிட்டி சேல் விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் 10R மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐசிஐசிஐ மற்றும் ஒன் மெட்டல் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளை தொடர்ந்து ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் ரூ. 32 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும்.

    ஒன்பிளஸ் 10R அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10R மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ், 5ஜி, டூயல் பேண்ட் வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும்.
    • இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஸ்னாப்சாட் தளத்தில் 'மை ஏஐ' சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை ஆகும்.

    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதை ஆப் ஆய்வாளரான அலெசாண்ட்ரோ பலூசி கண்டறிந்தார். இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும் என தெரியவந்துள்ளது. பயனர்கள் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பண்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    பபயனர்கள் தங்களை பற்றி சிறப்பாக வெளிப்படுத்தவும், மெசேஜ்களை எழுத உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நினைக்கிறது. இது பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி அறிவுறையாக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் இன்னமும், உருவாக்கும் பணிகளே நடைபெற்று வருகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    இன்ஸ்டாகிராம் தளத்தில் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்னாப்சாட் பயனர்கள் ஏஐ சாட்பாட் உடன் உரையாடல் நடத்தவும், கேள்விகளை கேட்கவும் முடியும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கொண்டு தான் இந்த தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
    • இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.

    போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.

    மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
    • கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் தனது முற்றிலும் புதிய 4K மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாணிட்டர்கள் அல்ட்ராகியர் 27GR93U மற்றும் அல்ட்ராகியர் 32GR93U என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்கு ஏற்றார்போல் இரு மாணிட்டர்களிடையேயான வித்தியாசம் அவற்றின் ஸ்கிரீன் அளவுகள் தான் எனலாம்.

    எல்ஜி 27GR93U மாடலில் 27 இன்ச் பேனலும், அல்ட்ராகியர் 32GR93U மாடலில் 31.5 இன்ச் அகலம் கொண்ட பெரிய டிஸ்ப்ளேவும் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த மாணிட்டரில் IPS பேனல், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இத்துடன் 1 ms GtG வரையிலான ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதன் மூலம் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கும்.

    இரண்டு மாணிட்டர்களிலும் AMD FreeSync பிரீமியம் மற்றும் NVIDIA G-Sync சப்போர்ட் உள்ளது. இவை சீரான கேம்பிளே அனுபவம் வழங்க செய்கிறது. இத்துடன் கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஸ்டாண்டுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய எல்ஜி அல்ட்ராகியர் மாணிட்டர்கள் எல்ஜி பிரிட்டன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய இதர விவரங்கள் இடம்பெறவில்லை. 

    ×