என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • விவோ நிறுவனம் X90 சீரிஸ் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸ் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ, தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் விவோ X90s ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது விவோ நிறுவனத்தின் நான்காவது X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இதுதவிர விவோ X90s மற்றும் ஐகூ 11s ஸ்மார்ட்போன் மாடல்களின் அம்சங்கள் வெளியாகி உள்ளது.

    விவோ X90s ஸ்மார்ட்போன் சீன சந்தைில் ஜூன் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

    சீன சமூக வலைதளமான வெய்போவில் டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் புதிய விவோ X90s மாடல் விவரங்களை பகிர்ந்து இருக்கிறார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிளஸ் பிராசஸர், LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    இதுதவிர இணையத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஐகூ 11s ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    • டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
    • புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

    'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

     

    - மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.

    - புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.

    - வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    - வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.

    - புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

    • ரியல்மி நிறுவனம் பயனர் விவரங்களை சேகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று மத்திய மந்திரி கருத்து.

    பயனர் விவரங்களை சேகரிப்பதாக ரியல்மி நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் ரியல்மி சாதனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று தெரிவித்து உள்ளார்.

    குற்றச்சாட்டுகளுடன் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் தனது பதிவில் இணைத்து இருக்கிறார். அதன்படி ரியல்மி யுஐ 4.0 -இல் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் மூலம் பயனர் விவரங்களை மேம்படுத்துவதாக கூறி அவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக டுவிட்டர் பயனர் குற்றம்சாட்டியுள்ளார்.

     

    ரியல்மி யுஐ 4.0 வெர்ஷனில் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் விவர குறிப்பில், 'இந்த அம்சம் சாதனத்தின் விவரங்கள், செயலி பயன்பாட்டு தகவல், லொகேஷன் விவரங்கள், காலென்டர் நிகழ்வுகள், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள்' தொடர்பான விவரங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சேகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களில் தானாக செயல்படுத்தப்படுகிறதா அல்லது பயனர் அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தொடர்பாக ரியல்மி பதில் அளித்துள்ளது. அதில் இந்த அம்சம் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெறப்படுவதாகவும், பயனர் விவரங்கள் அதிகளவு பாதுகாப்பாக வைக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

    • சர்வதேச சந்தையில் நத்திங் போன் 2 மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகிறது.
    • நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ஜூலை 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலின் சிப்செட், டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் போன்ற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், நத்திங் போன் 2 மாடலின் யுஎஸ்பி டைப் சி கேபிள் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள், சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

     

    டைப் சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது. நத்திங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று தெரிகிறது. நத்திங் நிறுவனம் 45 வாட் சார்ஜரை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்கிறது.

    நத்திங் போன் 1 மாடலில் அதிகபட்சம் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-க்கான சப்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நத்திங் போன் மாடலில் எவ்வளவு சார்ஜிங் வேகம் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

     

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
    • ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நார்டு 3 மாடல் அதிகாரப்பூர்வ படங்கள், விலை, 80 வாட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     

    டீசரில், புதிய ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், போஸ்டரில், தி லேப் (The Lab) வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் கம்யுனிட்டி ஃபோரமில் வெளியான தகவல்களின் படி நார்டு 3 மாடல் இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக தி லேப் வாசகம், ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T சாதனங்களின் வெளியீட்டுகளுக்கு பயன்படுத்தியது. ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்குள் தி லேப் வாசகம் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770x1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர் உள்ளது.
    • சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போதே ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

    எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. டீசரில் ஜூன் 10-ம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காக புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் LDAC கோடெக் கொண்டிருக்கிறது. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதன் இயர்பட்களில் 60 எம்ஏஹெச் செல் பேட்டரியும், கேசில் 460 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் உடல்நல டிராக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட வசதி கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் பிரீமியம் ப்ளூடூத் காலிங் வாட்ச் கொண்டிருக்கிறது. டேகர் லூக்ஸ் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல், லெதர், மெட்டாலிக் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல், இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் வசதி, SpO2 டிராக்கிங், ஸ்லீப் மானிட்டரிங் மற்றும் மகளிர் உடல் ஆரோக்கயத்தை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

     

    புதிய ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் சப்போர்ட் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஃபயர் போல்ட் அல்டிமேட் அம்சங்கள்:

    1.39 இன்ச் HD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வாட்ச் ஃபேஸ்கள்

    ப்லூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்

    சின்க் கான்டாக்ட்

    இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    புஷ் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன்

    123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட்

    ஸ்லீப், SpO2 மற்றும் இதய துடிப்பு டிராக்கிங்

    மகளிர் உடல் நல டிராக்கிங்

    IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    குடிநீர் மற்றும் செடன்டரி ரிமைன்டர்

    ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்

    வானிலை அப்டேட், இன்பில்ட் கேம்ஸ்

    மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்

    270 எம்ஏஹெச் பேட்டரி

     

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர் போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்-இன் லெதர் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் மெட்டாலிக் ஸ்டிராப் வேரியண்ட் பிளாக், சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஃபயர்போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் இன்று துவங்குகிறது. லெதர் ஸ்டிராப் மாடல் விலை ரூ. 1799 என்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 1999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய மானிட்டர் வித்தியாசமான செட்டப் கொண்டிருக்கிறது.
    • புதிய டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் மாணிட்டர்களை போன்றே அகலமாக இல்லாமல், உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எல்ஜி மானிட்டர் 28MQ750 என்று அழைக்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி டூயல்அப் 28MQ780 மானிட்டர் வழக்கமன 27 இன்ச் டிஸ்ப்ளே இல்லை. மாறாக இதில் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளது. இதன் ஸ்கிரீன் அளவு 27.6 இன்ச் அளவில் உள்ளது. இதில் எல்ஜி நானோ IPS பேனல், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 2560x2880 பிக்சல், அகலமான வைடு கலர் கமுட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது.

     

    இந்த மானிட்டரின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், இரண்டு 21.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட மானிட்டர்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. மேலும் டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மானிட்டரை எளிமையாக தூக்குவதும், வசதிக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளவும் முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மானிட்டர் யுஎஸ்பி டைப் சி இன்டர்ஃபேஸ், 90 வாட் எக்ஸ்டெர்னல் பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு HDMI மற்றும் ஒரு DP இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-பில்ட் டூயல் 7 வாட் ஹை பவர் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    புதிய டூயல் அப் மானிட்டர் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையிலும் கிடைக்கும் எல்ஜி டிஸ்ப்ளே விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 096 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • விவோ X100 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான ஃபோக்கஸ் டிஜிட்டல் விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டரை வெளியிட்டு உள்ளார். ஸ்மார்ட்போன் டிசைன் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த ரென்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரென்டர்களின் படி விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுல் இடதுபுறமாக பொருத்தப்பட்டு உள்ளது. கேமரா மாட்யுலை சுற்றி செவ்வக வடிவம் கொண்ட மேட்ரிக்ஸ் பகுதி காணப்படுகிறது. தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் விவோ X80 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், விவோ X80 சீரிசை தொடர்ந்து விவோ X90 சீரிசை தவிர்த்து நேரடியாக விவோ X100 சீரிசை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

     

    மற்றொரு டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விவோ X100 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் லோயர் எண்ட் வேரியண்ட்கள் விவோ X100 ப்ரோ மற்றும் விவோ X100 எனும் பெயர்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 சிப்செட், X100 ப்ரோ பிளஸ் மாடலில் அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ X100 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார், 32MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இதன் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது.

    லாகிடெக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M240 ப்ளூடூத் மவுஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாகிடெக் M240 சைலன்ட் ப்ளூடூத் மவுஸ் லாகிடெக் இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் குறைந்த விலை ப்ளூடூத் மவுஸ் ஆகும். இது பேர்-அன்ட்-பிளே வயர்லெஸ் மவுஸ் ஆகும். இது பயன்படுத்த சீரான அனுபவத்தை வழங்குகிறது.

    லாகிடெக் M240 ப்ளூடூத் மவுஸ் அதிவேக ப்ளூடூத் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதனை கம்ப்யுட்டர் மற்றும் டேப்லெட் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இதன் வயர்லெஸ் ரேன்ஜ் 33 அடிகள் ஆகும். இந்த ப்ளூடூத் மவுஸ் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. நிறங்களை பொருத்தவரை இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     

    இந்த ப்ளூடூத் மவுஸ் 18 மாதங்களுக்கான பேட்டரி லேஃப் கொண்டிருக்கிறது. மேலும் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது. M240 சைலன்ட் போன்ற மவுஸ் பயன்படுத்தும் போது லேப்டாப் 30 சதவீதம் வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மவுஸ்-இல் அல்ட்ரா-குயெட் க்ளிக் மூலம் மவுஸ் க்ளிக் செய்யும் போது ஏற்படும் சத்தத்தை 90 சதவீதம் வரை குறைக்கிறது.

    லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ்-ஐ இடது கை மற்றும் வலது கை பழக்கம் கொண்டவர்களும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்த மவுஸ் கார்பன் நியூட்ரல் சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பிளாஸ்டிக் பாகங்களில் 48 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டவை ஆகும்.

    புதிய லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ் இந்தியா முழுக்க லாகிடெக் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1595 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
    • பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனினை இந்தியா கொண்டுவந்துள்ளது. 2023 சர்தேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய அதிநவீன கூலிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நோக்கில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் உருவாக்கப்பட்டுஇருக்கிறது.

    புதிய கூலிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பம் (Active CryoFlux technology) என்று அழைக்கிறது. இதன் திறன்கள் குறித்து ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் போது, பின்புற பேனலில் சிறிய பைப்லைனில் நீல நிற திரவம் ஓடுவதை பார்க்க முடியும்.

    டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் ரோட் ட்ரிப் நிகழ்ச்சியின் அங்கமாக இது நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்பிளஸ் பிராண்டு மற்றும் ரசிகர்கள் இடையே உறவை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 32 அடி நீளமுள்ள இரண்டு பேருந்துகள், நாட்டின் 25 நகரங்களை சற்றி பயணம் செய்ய இருக்கிறது.

    பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 11 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட், ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2, ஒன்பிளஸ் கீபோர்டு ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். ஒன்பிளஸ் பாப் அப் எக்ஸ்பீரியன்ஸ் பேருந்து - சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, கோயம்புத்தூர், சென்னை, பூனே, கொச்சி மற்றும் பல்வேறு நகரங்களில் பயணம் செய்ய இருக்கிறது.

     

     

    ஒன்பிளஸ் புதிய கூலிங் தொழில்நுட்பம் 2.1 டிகிரி வரை வெப்பத்தை குறைக்கும் என்பதால், பயனர்கள் தடையின்றி கேமிங் செய்ய முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேம்களின் ஃபிரேம் ரேட் 3 முதல் 4fps வரை அதிகரிக்கும். மேலும் இந்த கூலிங் தொழில்நுட்பம் ஃபாஸ்ட் சார்ஜிங்கின் போதும் உதவுகிறது.

    டெல்லி நிகழ்வின் போது ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் 5ஜி ஸ்கெட்ச்பாட் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. இதில் ரோபோடிக் கை இடம்பெற்று இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இது எளிதில் படங்களை வரையும். பயணத்தின் போது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் சிறு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை பரிசாக வழங்குகிறது.

    • புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடல் முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. அமேஸ்ஃபிட் பாப் 3S என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே, 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், மெட்டாலிக் டிசைன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் இதய துடிப்பு, மன அழுத்த அளவுகள், நாடியில் ஆக்சிஜன் அளவுகளை கண்டறியும் திறன் உள்ளது. இந்த வாட்ச்-இல் ஜிபிஎஸ் வழங்கப்படவில்லை. எனினும், ஸ்மார்ட்போனில் இருக்கும் ஜிபிஎஸ் பயன்படுத்த வழி செய்கிறது. புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 12 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது.

     

    அமேஸ்ஃபிட் பாப் 3S அம்சங்கள்:

    1.96 இன்ச் 410x502 பிக்சல் AMOLED ஸ்கிரீன்

    ப்ளூடூத் 5.2

    பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர்

    அக்செல்லோமீட்டர் சென்சார்

    ஹார்ட் ரேட் சென்சார்

    3-ஆக்சிஸ் மோஷன் சென்சார்

    24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2

    மன அழுத்தம் டிராக் செய்யும் சென்சார்

    கலென்டர் ரிமைன்டர், கால் நோட்டிஃபிகேஷன்

    செடன்டரி ரிமைன்டர், ஸ்மார்ட் ஆப்ஸ் நோட்டிஃபிகேஷன்

    மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)

    300 எம்ஏஹெச் பேட்டரி

    12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய அமேஸ்ஃபிட் பாப் 3S மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இதன் மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ஸ்டிராப் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    ×