என் மலர்
தொழில்நுட்பம்
- சமீபத்திய டீசரில் போவா 5 ப்ரோ எல்இடி லைட்டிங் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்தது.
- இன்பினிக்ஸ் மாடலின் எல்இடி லைட் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
டெக்னோ நிறுவனம் புதிய போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி லைட்கள் அடங்கிய டிசைன் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் கான்செப்ட் நத்திங் போன் 2 போன்றே இருந்தாலும், தோற்றத்தில் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
டெக்னோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் புதிய போவா 5 ப்ரோ மாடலுக்கான எல்இடி லைட்டிங் சிஸ்டம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில் போவா 5 ப்ரோ மாடலில் அழைப்புகள் வரும் போது, மூன்று எல்இடி ஸ்ட்ரிப்கள் ஒரே புள்ளியில் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
டிசைன் அடிப்படையில் இது நத்திங் போன் 2 மாடலின் அச்சு அசலான காப்பி இல்லை என்ற போதிலும், கான்செப்ட் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்தது தான். மேலும் டெக்னோவின் இந்த செயலுக்கு நத்திங் டுவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது. டெக்னோ வெளியிட்ட டீசர் அடங்கிய டுவிட்டர் பதிவை ரிடுவீட் தெய்த நத்திங், "அடுத்த முறை எங்களின் வீட்டு பாடத்தை காப்பி அடுக்க விரும்பினால், எங்களிடம் கேளுங்கள்," என்று கூறி இருக்கிறது.
டெக்னோ மட்டுமின்றி இன்பினிக்ஸ் நிறுவனமும் நத்திங் போன்ற டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் எல்இடி லைட்களும் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதோடு நிறங்களும் நத்திங் போன் 2 போன்று பிளாக், வைட் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் செயல்பாட்டுக்கு பதில் அளித்த நத்திங் நிறுவனர் கார்ல் பெய், "வழக்கறிஞர்களை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்து இருந்தார். நத்திங் நிறுவனம் இந்த பிரச்சினையை உண்மையில் சட்டரீதியாக அணுக முடிவு செய்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- நாய்ஸ் லுனா ரிங் குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட் ரிங்-இல் பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி, டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லுனா ரிங் மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ரிங் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை லுனா ரிங் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் போட் நிறுவனம் தனது ஸ்மார்ட் ரிங் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மாடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் லுனா ரிங் மாடல் சவுகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும்.
நாய்ஸ் லுனா ரிங் அம்சங்கள்:
குறைந்த எடை கொண்ட மிக மெல்லிய டிசைன்
70-க்கும் அதிக உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி
BLE 5 தொழில்நுட்ரம்
நாய்ஸ்பிட் ஆப் வசதி
மேம்பட்ட சென்சார்கள்
பில்ட்-இன் அல்காரிதம்கள்
உடல்நல சென்சார்கள்
ஐஒஎஸ் 14-க்கு பிந்தைய மற்றும் ஆன்ட்ராய்டு 6-க்கு பிந்தய ஒஎஸ் சப்போர்ட்
வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
60 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
7 அளவுகள் மற்றும் 5 வித நிறங்களில் கிடைக்கிறது
முன்பதிவு மற்றும் சலுகை விவரங்கள்:
லுனா ரிங் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.
- ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி Early Access பெற முடியும்
- வெளியாகும் நாளிலேயே வாங்கும் போது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி
- நாய்ஸ் i1 ஸ்மார்ட் ஐவேர் சாதனத்தை 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 4 ஆயிரத்து 499-க்கு வாங்கிட முடியும்
- ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள காப்பீடு
- இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
- புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முந்தைய தகவல்களின் படி, இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா டிசைன் வழங்கப்படும் என்றும் இது எதிர்கால தோற்றம், வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரன்ட் போட்டோ க்ரோமேடிக் ரியர் பேனல் டிசைன் வழங்கப்படுகிறது.
இதுவரை உருவாக்கியதிலேயே சக்திவாய்ந்த மெஷின்களில் ஒன்றாக GT சீரிஸ் இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்து உள்ளது. இத்துடன் விளம்பரம் இல்லாத ஒஎஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

முன்பதிவு சலுகைகள்:
- முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ், கார்பன் பாக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது.
- ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி அல்லது எக்சேன்ஜ் முறையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி
- ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை
- சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
- கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடல் நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை ரூ. 13 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரிடெிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் ஃபார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கிறது. சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு எவ்வித எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்:
6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ GPU
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 1 டிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1
IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
200MP பிரைமரி கேமரா
12MP அல்ட்ரா வைடு கேமரா
10MP டெலிபோட்டோ லென்ஸ்
10MP டெலிபோட்டோ லென்ஸ்
12MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி போர்ட்
குறிப்பு: கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு எவ்வளவு காலம் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அந்த வகையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
- குறுகிய கால சலுகையாக பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சோனி இந்தியா நிறுவனம் கேமர்களுக்கு நற்செய்தியை அறிவித்து இருக்கிறது. இன்று (ஜூலை 25) துவங்கி பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 5 விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வுக்கு முன் இந்த கன்சோல்களின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

சோனி பிளே ஸ்டேஷன் 5 சலுகை விவரங்கள்:
பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 47 ஆயிரத்து 490 என்று மாறி இருக்கிறது. இந்த விலை குறைப்பு டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வைத்திருப்போருக்கு அசத்தல் கேம்களை இந்த ஆண்டு வழங்க இருக்கிறது.
அந்த வகையில், ஹாக்வர்ட்ஸ் லெகசி, பைனல் பேன்டசி XVI, மார்வல் ஸ்பைடர் மேன் 2, அசாசின்ஸ் கிரீட் மிரேஜ் மற்றும் ஆலன் வேக் 2 உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
சோனி இந்தியாவின் சிறப்பு சலுகை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை ரிடெயில் ஸ்டோர், ஆன்லைன் சேனல்கள், அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்அட்எஸ்சி, ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றிட முடியும்.
- புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.
டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
"நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.
டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.
இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகள் வழங்கும் ஐகூ நிறுவன சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது.
- ஐகூ நிறுவன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு.
ஐகூ இந்தியா நிறுவனம் அமேசான் வலைதளத்தில் ஐகூ குவெஸ்ட் டேஸ் சேல்-ஐ அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகைகள், தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐகூ குவெஸ்ட் டேஸ் சேலில், ஐகூ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு உடனடி பெற முடியும். இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை ஜூலை 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 32 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ நியோ 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 49 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 54 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ 9 SE 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 28 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ 9 SE 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 26 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச், 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகும் என தகவல்.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. M2 சிப்செட்களின் மேம்பட்ட வெர்ஷனாக M3 பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் புதிய M3 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மாடல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட டாப் என்ட் மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்று தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட மேக் மினி மாடல் நிச்சயம் வெளியாகும் எனினும், இப்போதைக்கு இது வெளியாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவவர் தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, 13 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 24-இன்ச் ஐமேக் மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவித்து இருகிறார்.
புதிய ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்றும் இது 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போதைய M2 சிப்செட்களை விட அதிக திறன் கொண்டிருக்கும். தற்போதைய M2 சிப்செட்கள் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
- அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.
புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
- டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
- X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புதிய மோட்டோ G14 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
வெளியீட்டு தேதியுடன் மோட்டோ G14 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலில் 6.5 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் T616 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, மேக்ரோ கேமரா, நைட் விஷன் சப்போர்ட் வழங்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G14 ஸ்மார்ட்போன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
மேலும் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. மோட்டோ G14 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகிவிடும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- டுவிட்டரில் புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
- டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரான்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரான்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளம் தான் திறக்கிறது. twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,
"வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.
இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






