என் மலர்
தொழில்நுட்பம்
- திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.
தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

கோப்புப் படம்
இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- இந்தியாவில் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
சியோமி நிறுவனம் ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி, பல்வேறு டீசர்களை சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரங்கள் டீசர் வடிவில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட்மி 12 ஸ்மார்ட்போன் பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் சில்வர் நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தது.

புதிய நிறங்கள் மட்டுமின்றி ரெட்மி 12 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் கிலாஸ் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து மற்றும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமான ஒன்று தான். எனினும், இதே அம்சங்கள் அதன் இந்திய வேரியன்டிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 4ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- குறிப்பிட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
- ஊழியர்கள் தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷிய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவின் தொலை தொடர்பு, அரசு ஊடகத் துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசு தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, ரஷியாவின் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசு ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நேட்டோ நாடுகளில் வசிக்கும் ரஷிய அதிகாரிகள் பயன்படுத்தும் ஐபோன்களில் பிரத்யேக உளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்ததாக ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து இருப்பதோடு, பயனர் தனியுரிமையை பாதுகாப்பதில், மிக கடுமையாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.
- ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
- மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக தகவல்.
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டாக 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது தான் ஹானர். இந்திய சந்தையில் 2014 ஆண்டு களமிறங்கிய ஹானர் பிரான்டு குறைந்த விலை மற்றும் காசுக்கு ஏற்ற சாதனங்களை வழங்கியதன் மூலம் மிக விரைவில் அதிக பிரபலம் அடைந்தது. எனினும், 2020 ஆண்டு ஹானர் தனது இந்திய வியாபாரத்தை நிறுத்தி விட்டது.
முன்னதாக ஹானர் 9X ப்ரோ, ஹானர் 9A மற்றும் ஹானர் 9S போன்ற ஸ்மார்ட்போன்களை ஹானர் பிரான்டு அறிமுகம் செய்து இருந்தது. பிறகு அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனத்தின் மீது பிறப்பித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிரான்டை சீன நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பிடம் விற்றுவிட்டது.

ஹானர் பிரான்டு சீனா மற்றும் சில சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து வியாபார பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகி இருந்த போதிலும், ஹானர் பிரான்டு தொடர்ச்சியாக ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஹானர் பிரான்டிங் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த தகவல்களின் படி ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டிரேட்மார்க் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
டிரேட்மார்க் படங்களில், நிறுவனம் "ஹானர் ஃபார் நைட்ஸ்" (Honor For Knights) என்ற பெயர் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய நிறுவனம் மொபைல் போன் மற்றும் அக்சஸரீக்கள் தொடர்பான வியாபார பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதன் விவரகுறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன், அதன் உரிமையாளராக மாதவ் சேத் பெயர் இடம்பெற்று உள்ளது.

இதுதவிர மாதவ் சேத் டுவிட்டர் மற்றும் லின்க்டுஇன் போன்ற வலைதள பயோ பிரிவில் நைட் எப்போது வரப் போகிறது, "When is the KNIGHT Coming?" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றை வைத்தே மாதவ் சேத் தலைமையில் புதிய ஹானர் பிரான்டு இந்தியாவில் களமிறங்க இருப்பதை நெட்டிசன்கள் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதாகவும், இதன் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரி-என்ட்ரிக்காக ஹானர் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.
- ப்ளிப்கார்ட்-இன் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் இடம்பெற்று உள்ளது.
- ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது அடுத்த டேப்லெட் மாடல், ரியல்மி பேட் 2 இந்திய சந்தையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நாளில் ரியல்மி C53 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரியல்மி பேட் 2 மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி ரியல்மி பேட் 2 மாடலில் 11.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், 40Hz / 60Hz / 120Hz ரிப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் உள்ளது.

முந்தைய ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டேப்லெட்-இன் டிஸ்ப்ளே புளூ லைட் பாதுகாப்பு, டிசி டிம்மிங் கொண்டிருக்கிறது. இவை நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை ஓரளவுக்கு தவிர்க்க செய்கிறது. ரியல்மி பேட் 2 மாடலில் 85.2 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மூலம் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்று தெரிகிறது.
ரியல்மி பேட் 2 மாடலில் O1 அல்ட்ரா விஷன் தொழில்நுட்பம் உள்ளது. இது தலைசிறந்த இமேஜ்-ஐ பிரதிபலிக்கிறது. ஆடியோவுக்காக இந்த மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது. அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் படி இந்த டேப்லெட் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் உருவாகி இருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி பேட் 2 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8360 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்ற கூறப்பட்டது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 20MP பிரைமரி கேமரா, ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 போன்ற அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
- ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
- இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில், தனது C51 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இதே ஸ்மார்ட்போனின் ஏர்டெல்-எக்ஸ்குளூசிவ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

போக்கோ C51 ஏர்டெல்-லாக்டு வேரியன்ட் விவரங்கள்:
புதிய சலுகையின் கீழ் போக்கோ C51 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 5 ஆயிரத்து 999 எனும் விலையில் வாங்கிட முடியும். இதில் ஏர்டெல் பிரத்யேக பலன்களும் அடங்கும். பலன்களை பொருத்தவரை 7.5 சதவீதம் அதிகபட்சம் ரூ. 750 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 50 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
50 ஜிபி இலவச டேட்டா, ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் பயனர்கள் மாதம் ஒரு வவுச்சரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு வவுச்சருக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. புதிய ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், பயனர்கள் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
சாதனத்தை அன்லாக் செய்வதற்கு பயனர்கள் ஸ்மார்ட்போனினை செட்-அப் செய்த 24 மணி நேரத்திற்குள் ஏர்டெல் சிம் ஒன்றை செருகி, குறைந்தபட்சம் ரூ. 199 விலை கொண்ட ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
இவற்றை செய்த பிறகு, இரண்டாவது சிம் கார்டு ஸ்லாட்-இல் ஏர்டெல் இல்லாத சிம் கார்டை பயன்படுத்த முடியும். ஏர்டெல் லாக் செய்யப்பட்ட போக்கோ C51 ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை (ஜூலை 18) ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக துவங்க இருக்கிறது.

போக்கோ C51 அம்சங்கள்:
6.52 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்
4 ஜிபி ரேம்
3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
ஆன்ட்ராய்டு 13 கோ எடிஷன்
8MP பிரைமரி கேமரா
டெப்த் சென்சார்
5MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
3.5mm ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ
பின்புறம் கைரேகை சென்சார்
- ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே உள்ளது.
- ஐபோன் 14 பிளஸ் மாடல் மூன்று வித மெமரி மாடல் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 பிளஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனையில் அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன், ஏ15 பயோனிக் சிப்செட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, டூயல் 12MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையில் ஐபோன் 14 பிளஸ் மாடலின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய ப்ளிப்கார்ட் சலுகையின் கீழ் ஐபோன் 14 பிளஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 73 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 83 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
தள்ளுபடி மட்டுமின்றி ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் பெற முடியும். இத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், HDR, ட்ரூ டோன், ஏ15 பயோனிக் சிப்செட் 5-கோர் GPU, 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை, டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லைட்னிங் போர்ட் உள்ளது.
- அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.
அமேசான் பிரைம் டே சேல் 2023 பிரைம் டே சேல் துவங்கி நடைபெற்று வருகிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர், இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இன்று (ஜூலை 15), நாளை (ஜூலை 16) அமேசான் பிரைம் டே சேல் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் மின்சாதன பொருட்களான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ஐபோன் 14 மாடலின் விலை ரூ.65 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது துவங்கி இருக்கும் விற்பனை 48 மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. பிரைம் சந்தா சேவையை பெறாதவர்கள், தற்போது அமேசான் பிரைம் சேவையை பெற்று, விரும்பிய பொருட்களை சலுகை விலையில் வாங்கிட முடியும். அமேசான் பிரைம் சந்தா ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ. 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மூன்று மாதத்திற்கான அமேசான் பிரைம் சந்தா கட்டணம் ரூ. 599, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவுக்கான கட்டணம் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் முறை அமேசான் பிரைம் சந்தாவில் இணைய இருப்பவர்கள், ஒரு மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனிற்கான சலுகை விவரங்கள்:
அமேசான் பிரைம் டே சேல் விற்பனையின் போது ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 65 ஆயிரத்து 999 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் மட்டுமின்றி ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி, ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, ரியல்மி நார்சோ 60 5ஜி மற்றும் சாம்ங் கேலக்ஸி M34 5ஜி மாடல்களுக்கும் விலை குறைப்பு, சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- லெனோவோ டேப் M10 5ஜி மாடலில் முக அங்கீகார வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- புதிய லெனோவோ டேப் M10 மாடலில் 7700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப் M10 5ஜி மாடலில் 10.61 இன்ச் 2K ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மாறாக முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 7700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கு வீடியோ ஸ்டிரீமிங் பேக்கப் வழங்குகிறது.

லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:
10.61 இன்ச் 2000x1200 பிக்சல் 2K எல்சிடி ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619 GPU
4ஜிபி, 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா, ToF சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன்
5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி 2.0 டைப் சி
7700 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லெனோவோ டேப் M10 5ஜி டேப்லெட் அபைஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன.
- கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஏஒசி நிறுவனம் தொழில்முறை கேமர்களை குறிவைத்து, CU34G3S வளைந்த கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏஒசி ஏகான் ப்ரோ 27 இன்ச் QHD 170Hz கேமிங் மானிட்டரை தொடர்ந்து, புதிய மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கேமிங் மானிட்டர் 3440x1440 ரெசல்யூஷன், அகலமான குவாட் ஹெச்டி 165Hz ரிப்ரெஷ் ரேட், 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 34 இன்ச் அகலமான குவாட் ஹெச்டி வளைந்த டிஸ்ப்ளே, 21:9, VA டிஸ்ப்ளே தலைசிறந்த நிறங்களை அனைத்து கோணங்களில் இருந்து பார்க்கும் போதும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

இத்துடன் ஏஎம்டி ஃபிரீசின்க் பிரீமியம் டியர்-ஃபிரீ இமர்ஷன் தொழில்நுட்பம் தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இதன் மெல்லிய டிசைன் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு, ஃபிரேம்லெஸ் கேமிங் மானிட்டர் சிறப்பான விஷூவல் அனுபவத்தை வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பயனர்கள் தங்களது லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது கேமிங் சிபியு உள்ளிட்டவைகளை எளிதில் இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது மியூசிக், கேமிங், பொழுதுபோக்கு உள்ளிட்ட பயன்பாடுகளின் போது, தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டர் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் தற்போது இந்த மானிட்டர் ரூ. 41 ஆயிரத்து 090 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
பிரபல டிப்ஸ்டரான மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயரில் அறிமுகமாகும் பட்சத்தில், குறைந்தபட்சம் பெயரளவில் இது வித்தியாசமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள், ஹேசில்பிலாடு டியூனிங், ஃபிளாஷ், பக்கவாட்டில் கேரேகை சென்சார், பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் ஒபன் அறிமுக நிகழ்வு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. சாம்சங் தனது கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
- புதிய ஹாட் 30 5ஜி மாடலின் பின்புறம் கிலாஸ் போன்று காட்சியளிக்கும் டிசைன் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிலாஸ் போன்று காட்சியளிக்கும் பின்புற டிசைன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் அதற்கான சார்ஜரும் வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிலாஷ், ஏஐ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிலாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் நைட் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 18-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது. அறிமுக சலுகையாக ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.






