என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
    • விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.

    டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

     

    பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.

    இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.

    விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சலுகை விரைவில் துவங்க இருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஸ்மார்ட்போன், மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நாளை (ஜூலை 15) துவங்க இருக்கும் ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் பிரைம் டே சேல் நடைபெற இருக்கும் அதே வேளையில், ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் நடைபெறுகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15 மற்றும் ஜூலை 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

     

    சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, ப்ளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அழகுசாதன பொருட்கள், மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ்-க்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கமான சலுகைகள் தவிர, நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு ஸ்பிலாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு பொருட்களை வாங்கும் போது பத்து சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்ப்படுகிறது.

    • ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது.
    • ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தோற்றத்தில் நத்திங் போன் 2 போன்றே காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேமிங் சார்ந்த சாதனமாக இருக்கும் என்றும் இதன் டிசைன், தற்போது பிரபலமாக உள்ள நத்திங் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களின் படி புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் "GT" என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். புதிய ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதோடு நத்திங் போன் 2 மாடலில் இருக்கும் எல்இடி ஸ்ட்ரிப்களை போன்றே இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனிலும் டிசைன் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் இது எல்இடி லைட்களாக இருக்குமா அல்லது வெறும் டிசைன் மட்டும் இப்படி காட்சியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்பினிக்ஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை டுவிட்டரில் பார்த்த நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைப்பதற்கான நேரம்" என்று கூறி மகிழ்ச்சியில் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.

    புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்பினிக்ஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    முன்னதாக நத்திங் போன் 1 போன்றே காட்சியளிக்கும் சாதனம் பார்சிலோனாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காணப்பட்டது. இந்த மாடலில் நத்திங் போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற எல்இடி மெக்கானிசமும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொஷிபா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M650 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய M650 மாடலில் எலிகன்ட் டிசைன், மெல்லிய பெசல் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட மெட்டல் கட்டமைப்பு உள்ளது.

    4K மினி எல்இடி டிஸ்ப்ளே, குவான்டம் டாட் கலர், ஃபுல் அரே லோக்கல் டிம்மிங் ப்ரோ கொண்டிருக்கும் M650 மாடல் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகரான, தலைசிறந்த நிறங்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR10+ அடாப்டிவ் HDR தொழில்நுட்பம் உள்ளிட்டவை சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள REGZA என்ஜின் ZR காட்சிகளின் அடிப்படையில் அவற்றின் தரத்தை ரியல்-டைமில் மேம்படுத்தும்.

     

    கேமர்களுக்காக M650 மாடலில் அல்ட்ராவிஷன் 120 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டயலாக் என்ஹான்சர், 360 சவுன்ட் அப்-ஸ்கேலிங், REGZA பவர் ஆடியோ ப்ரோ வழங்கப்பட்டு இருக்கிறது. இவை சக்திவாய்ந்த பேஸ் மற்றும் அதிக தெளிவான குரல்களை கேட்க வழி செய்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு HDMI, ப்ளூடூத் ஆடியோ, டூயல் பேன்ட் வைபை மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த டிவி வாய்ஸ் கன்ட்ரோல் வசதி- அலெக்சா, விடா வாய்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    டொஷிபா M650 4K ஸ்மார்ட் டிவி மாடல் ஜூலை 15 முதல் ஜூலை 21-ம் தேதி வரை அமேசான் தளத்தில் சிறப்பு சலுகையாக அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    அதன்படி இந்த தேதிகளில் 55 இன்ச் M650 4K டிவி ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் M650 4K மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிவியுடன் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
    • இந்த ஃபோல்டபில் போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹானர் ஃபோல்டபில் போனின் எடை 231 கிராம், தடிமன் 9.9 மில்லிமீட்டர்கள் ஆகும். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மடிக்கக்கூடிய சாதனங்களில் மிகவும் மெல்லிய மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    முன்னதாக உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலின் தடிமன் 11.2 மில்லிமீட்டர்கள், எடை 262 கிராம்கள் ஆகும். புதிய ஹானர் மேஜிக் V2 மாடலில் மிக மெல்லிய சிலிகான் கார்பன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

     

    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார், 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், OIS, மேக்ரோ ஆப்ஷன், 20MP டெலிபோட்டோ கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.92 இன்ச் மடிக்கக்கூடிய LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2344x2156 பிக்சல் ரெசல்யூஷன், 6.43 இன்ச் LTPO டிஸ்ப்ளே, 2376x1060 பிக்சல், ஸ்டைலஸ் சப்போர்ட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V2 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை RMB 8999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் என்று துவங்குகிறது. 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் V2 அல்டிமேட் எடிஷன் விலை RMB 11999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • ரியல்மி C53 ஸ்மார்ட்போன் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது C53 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய ரியல்மி C53 தோற்றத்தில், அதன் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய ரியல்மி C53 டீசரில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா மாட்யுல், கோல்டு நிற ஆப்ஷன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பிரிவில் 108MP கேமரா வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

     

    இந்திய சந்தையில் ரியல்மி C53 ஸ்மார்ட்போன் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. ரியல்மி C53 வெளியீட்டை ஒட்டி புதிய மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்களின் டீசர் இடம்பெற்று இருக்கிறது.

    கேமரா மாட்யுல், நிறம் தவிர இந்த ஸ்மார்ட்போன் பாக்சி சேசிஸ் கொண்டிருக்கிறது. இதன் வால்யும் ராக்கர், பவர் பட்டனில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதன் சிம் டிரே இடது புறத்தில் உள்ளது. ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது.

    இதன் முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச், சற்றே மெல்லிய பெசல்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில், மைக்ரோபோன் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் கீழ்புறமாக வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
    • ரெட்மி 12 பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் மைக்ரோசைட் மூலம் வெளியாகும்.

    ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வெளியாகி உள்ளது.

    அமேசான் மட்டுமின்றி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அழகிய சாதனம் என்று சியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக பாலிவுட் நடிகை திஷா படானியை விளம்பர தூதராக சியோமி நியமனம் செய்து இருக்கிறது.

     

    புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் க்ரிஸ்டல் கிளாஸ் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட்-இல் தெரியவந்துள்ளது. ரெட்மி 12 பற்றிய இதர விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வரும் நாட்களில் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
    • நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங், ஒப்போ, மோட்டோரோலா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.

    இந்த நிலையில், நத்திங் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமா என்ற கேள்விக்கு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போதைக்கு அறிமுகமாகாது என நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்ல் பெய் கூறும் போது,

    "இப்போதைக்கு வாய்ப்பில்லை. தற்போது யாரும் வந்து, எனது போனில் மடிக்கக்கூடிய வசதி வேண்டும் என்று கூறுவதில்லை. உற்பத்தியாளர்கள் பயனர்களிடம் புகுத்த நினைக்கும் கண்டுபிடிப்பகாவே, நான் அவற்றை பார்க்கின்றேன்," என்று தெரிவித்தார்.

    சில நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருப்பதை கார்ல் பெய் எடுத்துரைத்து இருக்கிறார்.

    • இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்குகிறது.
    • ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்பி நிறுவனம் தனது என்வி சீரிஸ் லேப்டாப் மாடல்களில் புதிய வெர்ஷனை இணைத்துள்ளது. புதிய ஹெச்பி என்வி X360 15 லேப்டாப், இன்டெல் மற்றும் ஏஎம்டி என இருவித பிராசஸர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லேப்டப்-இல் உள்ள டிஸ்ப்ளே, கணினிகளுக்காக முதல் முறை சான்று பெற்றுள்ளன.

    புதிய ஹெச்பி என்வி X360 15 மாடலின் டாப் வேரியண்டில் IMX என்ஹான்ஸ்டு சான்று பெற்று இருக்கிறது. சந்தையில் இதுபோன்ற சான்று பெற்ற முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே, ஆஸ்பெக்ட் ரேஷியோவை நீட்டித்து வழங்குகிறது.

     

    இத்துடன் IMAX தியட்ரிக்கல் சவுன்ட் மிக்ஸ் வசதி உள்ளது. இது டிடிஎஸ் X தொழில்நுட்பத்தின் விசேஷ டியூனிங்கை பயன்படுத்தி, சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் டச் மற்றும் பென் இன்புட் வசதிகளை கொண்டுள்ளது.

    தற்போது இந்திய சந்தையில் IMAX சான்று பெற்ற தரவுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மட்டுமே வழங்கி வருகிறது. எனினும், ஹெச்பி இந்தியா ஒடிடி தளத்துடன் கூட்டணி தொடர்பாக எந்த தகவலையும் வழங்கவில்லை. ஹெச்பி என்வி X360 15 மாடலில் ஏஐ இமேஜ் சிக்னல் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது பயனர்கள் சிஸ்டத்தை விட்டு தூரமாக நடந்து சென்றதை கண்டறிந்து, தானாக லாக் செய்து விடும். பிறகு, பயனர்கள் லேப்டாப் அருகில் வருவதை உணர்ந்து, அதனை தானாக அன்லாக் செய்து விடும். ஹெச்பி பிரெசன்ஸ் 2.0 அம்சம் கொண்டு வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஹெச்பி என்வி X360 15 அம்சங்கள்:

    15.6 இன்ச் FHD+ OLED, 500-நிட்ஸ் HDR, IMAX என்ஹான்ஸ்டு சான்று கொண்ட டிஸ்ப்ளே

    5MP IR கேமரா, டூயல் மைக்ரோபோன்

    பேங் &ஆல்ஃபுசன் டூயல் ஸ்பீக்கர்கள்

    வைபை 6E, ப்ளூடூத் 5.3

    4-செல் 55 வாட் ஹவர் லி-அயன் பாலிமர் பேட்டரி

    65 வாட் அல்லது 90 வாட் அடாப்டர்

    இன்டெல் கோர் i5-1335U i7-1355U பிராசஸர்

    ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அல்லது NVIDIA GeForce RTX3050 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5 ரேம்

    2 தன்டர்போல்ட் 4 போர்ட்கள்

    ஏஎம்டி வேரியண்ட்

    ஏம்டி ரைசன் 5 7530U அல்லது ஏஎம்டி ரைசன் 7 7730U பிராசஸர்

    ஏஎம்டி ரேடியான் கிராஃபிக்ஸ்

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR4X ரேம்

    10Gbps யுஎஸ்பி சி போர்ட்

    விலை விவரங்கள்:

    ஹெச்பி என்வி X360 15 2-இன்-1 லேப்டாப் விலை ரூ. 78 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் விற்பனை ஹெச்பி ஆன்லைன் மற்றும் ஹெச்பி வொர்ல்டு ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. இந்த லேப்டாப் நைட்ஃபால் பிளாக் மற்றும் நேச்சுரல் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹெச்பி என்வி லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12.
    • புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி வரும் ஒன்பிளஸ் 12 டிசைன் எப்படி இருக்கும் என்று தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான @OnLeaks வெளியிட்டு இருக்கும் ரென்டர்களில், ஒன்பிளஸ் 12 மாடல் மெல்லிய டிசைன், கிளாசி பிளாக் நிறம் மற்றும் ஒன்பிளஸ் பாரம்பரிய சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

     

    புதிய ஒன்பிளஸ் 12 மாடலில் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ் செட்டப் வழங்கப்படுகிறது. கேமரா மாட்யுல் பிளாக் நிற ஸ்ட்ரிப், ஹேசில்பிலாட் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இவை பக்கவாட்டு ஃபிரேம் பகுதியில் சீராக இணைவதை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கேமரா ரிங்-இன் கீழ்புறத்தில் க்ரோம் அக்சென்ட் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பம்ப் உள்ளது.

    பெரிஸ்கோபிக் லென்ஸ்களை வைப்பதற்காக, எல்இடி ஃபிலாஷ் கேமரா ஐலேன்ட்-இன் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் 12 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கின்றன. இத்துடன் பன்ச் ஹோல் டிசைன், ஸ்மார்ட்போனின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது சாதனத்தின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் வளைந்த 2K டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 750 GPU வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP வைடு ஆங்கில் லென்ஸ், 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் புதிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • அசுஸ் ரோக் Ally இந்திய விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புதிய ரோக் Ally மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.

    அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும்.

    அறிமுக நிகழ்வை தொடர்ந்து, அசுஸ் ரோக் Ally மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற்றது.

    அறிமுக சலுகைகள்:

    - அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இஷாப் அல்லது அசுஸ் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ஜூலை 12 முதல் ஜூலௌ 15 ஆம் தேதிக்குள் வாங்கும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரோக் Ally கேஸ்-ஐ ரூ. 1 மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு asuspromo.in வலைதளம் செல்ல வேண்டும்.

    - இத்துடன் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990 மதிப்புள்ள XG மொபைலினை ரூ. 87 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.

    - வங்கி சார்ந்த கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

     

    அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:

    7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்

    120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU

    16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்

    512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்

    விண்டோஸ் 11 ஒஎஸ்

    ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்

    டூயல் ஸ்பீக்கர்

    அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்

    ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்

    40 வாட் ஹவர் பேட்டரி

    65 வாட் சார்ஜிங் வசதி 

    • கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்தனர்.
    • இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

    இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.

     

    கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பயனர்களுக்கு அதிவேகமாக கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் கரணமாக நிதி சார்ந்த முன்னணி செயலிகள் பட்டியலில் டாப் 20 இடத்தை அடைந்தது. பல்வேறு பயனர்கள், கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    மேலும் கடன் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் பெற்ற கடன் விவரங்களை, அவர்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி விடுவதாக கடன் செயலிகள் மிரட்டியதாகவும், குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, ஆப்பிள் டெவலப்பர் திட்ட ஒப்பந்தத்தை இந்த கடன் செயலிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த வகையில், போலி விளம்பரங்கள் மூலம் கடன் கொடுத்து, பிறகு வாடிக்கையாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வந்த கடன் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கப்பட்டன.

    ×