என் மலர்
தொழில்நுட்பம்
- நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
- இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.
புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.
மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.
- ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் லேப்டாப்கள் என்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- இந்தியாவில் என்ட்ரி லெவல் லேப்டாப்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
புதிதாக லேப்டாப் வாங்குவது சற்று சிக்கல் நிறைந்த ஒன்று. ஆனால், லேப்டாப்களில் தேர்வு செய்வதற்கு அதிக ஆப்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் லேப்டாப் மாடல்களின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களின் விலை லட்சங்களை கடந்துள்ளன.
அந்த வகையில், ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் தேவைக்கு ஏற்ப, அனைத்து விலை பிரிவுகளிலும் அதிக லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவைகளில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லேப்டாப் மாடல்கள் எவை என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்த விலை பிரிவில் கிடைக்கும் மாடல்கள் கிட்டத்தட்ட சிறப்பான என்ட்ரி லெவல் பிரிவிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

ஹெச்பி குரோம்புக்
ஹெச்பி குரோம்புக் 15.6 மாடல் இந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கு சிறப்பான மாடல் ஆகும். டிஸ்ப்ளே மற்றும் வெப்கேமரா தவிர்த்து, இந்த மாடலின் அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்றதாகவே உள்ளது. இந்த லேப்டாப் இன்டெல் செலரான் V4500 பிராசஸர் கொண்டிருக்கிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 28 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது.

அசுஸ் விவோபுக் கோ 15
இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலில் சிறப்பான கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் அசுஸ் விவோபுக் கோ 15 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ்:
இந்த பட்டியலில் கிடைக்கும் ஸ்டைலிஷ் மாடலாக இந்த லேப்டாப் இருக்கிறது. 10th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 28 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது.

ஹெச்பி 255 G8
ஹெச்பி லேப்டாப் வாங்க திட்டமிடும் பட்சத்தில் இந்த மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் AMD ரைசன் 3 சீரிஸ் CPU, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பின் துவக்க விலை ரூ. 29 ஆயிரத்து 990 ஆகும்.

லெனோவோ ஐடியாபேட் 1
11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன், இந்த பட்டியலில் சிறிய லேப்டாப் மாடலாக லெனோவோ ஐடியாபேட் 1 இருக்கிறது. சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் இந்த லேப்டாப் அன்றாட பணிகளுக்கு ஏற்றது ஆகும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் சூட், 4 ஜிபி ரேம், 256 ஜிபி SSD மற்றும் வின்டோஸ் 11 ஒஎஸ் உள்ளது. இதன் விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 25 ஆயிரத்து 289 என்று துவங்குகிறது.
- டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
டெக்னோ பிரான்டு இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டெக்னோ போவா 5 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போன் டீசர் அமேசான் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் டெக்னோ போவா 5 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ போவை 5 சீரிசில்- டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டெக்னோ போவா 5 சீரிஸ் டீசர்களில், புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்ஜிபி எல்இடி லைட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 மாடல்களில் உள்ளதை போன்றே க்ளிம்ப் இன்டர்பேஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.
டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் டூயல் 50MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது.
- புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Vu நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய Vu ஸ்மார்ட் டிவிக்களின் விலையும், சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் Vu மாஸ்டர்பீஸ் QLED என்று அழைக்கப்படுகின்றன.
புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் குவான்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் 4K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-பிட் கலர் டெப்த் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR 10+, HLG மற்றும் MEMC வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிவிக்களில் 4K தரவுகளை அப்-ஸ்கேலிங் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் AMD ஃபிரீ-சின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. ஆடியோவை பொருத்தவரை நான்கு மாஸ்டர் ஸ்பீக்கர்கள், ஒரு சப்-வூஃபர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை 204 வாட் சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. Vu மாஸ்டர்பீஸ் QLED ஸ்மார்ட் டிவிக்கள் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன.
இத்துடன் கூகுள் டிவி ஒஎஸ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, டூயல் பேன்ட் வைபை, நான்கு HDMI, இரண்டு USB போர்ட்கள் மற்றும் ஈத்தர்நெட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 95 இன்ச் மாடல் விலை ரூ. 6 லட்சம் என்றும் 85 இன்ச் மாடல் விலை ரூ. 3 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை Vu அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது.
- சந்தையில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை ஜூலை 21-ம் தேதி துவங்க இருக்கிறது.
- புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன பிரான்டு, நத்திங் தனது நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக "Notify Me" கோரிக்கைகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்பதிவு விற்பனையில் நத்திங் போன் 2 மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக நத்திங் போன் 2 டிராப்ஸ் நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 500-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் பொருமையுடன் வரிசையில் காத்திருந்து நத்திங் போன் 2 மாடலை அனுபவித்தனர். பலர் இந்த போனினை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை வெள்ளி கிழமை, ஜூலை 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 2 மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
நத்திங் போன் 2 அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன்
அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன்
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
4700 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
- ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 999 சலுகை பலன்கள்:
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.
இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.
இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.
தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.
வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
- ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
- ஹானர் பேட் X9 மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட மொத்தம் 7 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹானர் பிரான்டின் புதிய ஹானர் பேட் X9 மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஹானர் டேப்லெட் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசரில் புதிய ஹானர் பேட் X9 வாங்குவோருக்கு ஹானர் ப்ளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1 ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஹானர் பேட் X9 மாடலில் 5MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீக்கர் டிசைன் வழங்கப்படுகிறது.
ஹானர் பேட் X9 மாடலில் 7250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்தற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 199.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
- ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் மெக்கானிக்கல் கீபோர்டு, ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 2023 வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது.
அலுமினியம்-கிராஃப்ட் செய்யப்பட்டு மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ கஸ்டமைஸ் செய்யக்கூடிய டைப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஹாட்-ஸ்வாப் செய்யக்கூடிய ஸ்விட்ச்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை டைப்பிங்கின் போது தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்குகின்றன.

கீக்ரோன் உடனான கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குகிறது. இதற்காக இந்த கீபோர்டில் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு இந்த கீபோர்டினை ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

புதிய ஒன்பிளஸ் கீபோர்டு 81 ப்ரோ மாடல் டார்க் கிரே மற்றும் லைட் கிரே என்று இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விறப்னை ஒன்பிளஸ் வலைதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி துவங்க இருக்கிறது.
- கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED, Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
- கேலக்ஸி வாட்ச் 6 சீரிசை முன்பதிவு செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுடன் கேலக்ஸி Z போல்டு 5, கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் என்று பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலை முன்பதிவு செய்வோருக்கு இலவசமாக ஸ்டோரேஜ் அப்கிரேடு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி வாட்ச் 6 சீரிசை முன்பதிவு செய்வோருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக பிரபல டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

புதிய சாம்சங் நிறுவன சாதனங்கள் பற்றிய தகவலை டிப்ஸ்டரான எவான் பிலாஸ் தனது திரெட்ஸ் ஆப்-இல் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்டோரேஜ் அப்கிரேடு செய்து கொள்ளும் வசதி இலவசமாக வழங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி 256 ஜிபி மாடலுக்கு பணம் செலுத்தினால் 512 ஜிபி மாடலை பெற்றுக் கொள்ள முடியும். இதே சலுகை கேலக்ஸி Z போல்டு 5 மாடலுக்கும் பொருந்துமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. கேலக்ஸி வாட்ச் 6 மாடல்களை முன்பதிவு செய்யும் போது ஃபேப்ரிக் பேன்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED மற்றும் Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 18) துவங்கும் முதல் விற்பனையை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விலை மற்றும் சலுகை விவரங்கள்:
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் நைட் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனினை வாங்குவோர் ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 499 என்று மாறி விடும்.

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீனஅ
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிலாஷ், ஏஐ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிலாஷ்
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வோடபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- வோடபோன் ஐடியா பிரீபெயிட் பயனர்கள் இந்த சலுகையில் பயன்பெற முடியும்.
வி ஸ்மார்ட்போன் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் வோடபோன் ஐடியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 4ஜி அல்லது 5ஜி போனுக்கு மாறும் வி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரத்து 400 வரையிலான தள்ளுபடி பெற முடியும்.
எனினும், இந்த தள்ளுபடியை வி செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரிசார்ஜ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.மேலும் இது குறுகிய கால சலுகை என்பதால், பயனர்கள் இதனை நீண்ட காலம் கழித்து பயன்படுத்த முடியாது.

வி ஸ்மார்ட்போன் திட்டம்
பீச்சர் போன் பயனர்களை ஸ்மார்ட்போன் வாங்க செய்யும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள வி பயனர்கள் 4ஜி அல்லது 5ஜி சாதனத்திற்கு அப்கிரேடு செய்யும் போது, இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் வி நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றதும், 5ஜி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சலுகை ஜூலை 4-ம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இநத திட்டம் பஞ்சாப், அரியானா, சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வாசிக்கையாளர்களுக்கு முதலில் வெல்கம் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதில் ரூ. 2 ஆயிரத்து 400 ரிசார்ஜ் தள்ளுபடி பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறுவதற்கு பயனர்கள், ரூ. 319, ரூ. 359, ரூ. 368, ரூ. 399, ரூ. 409, ரூ. 475, ரூ. 479, ரூ. 499, ரூ. 539, ரூ. 599, ரூ. 601, ரூ. 666, ரூ. 719, ரூ. 839, ரூ. 901, ரூ. 902, ரூ. 903, ரூ. 1066, ரூ. 1499, ரூ. 1999, ரூ. 2899, ரூ. 2999 மற்றும் ரூ. 3099 விலை சலுகைகளில் ஒன்றை ரிசார்ஜ் செய்து தள்ளுபடி பெறலாம்.
மேலும் பயனர்கள் வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்தால் மட்டுமே தள்ளுபடி பெற முடியும். புதிய ஸ்மார்ட்போனில் ரிசார்ஜ் செய்யும் போது ரூ. 100 தள்ளுபடி கூப்பன் பெறலாம். இதற்கான கூப்பன் வி செயலியின் மை கூப்பன் பிரிவில் இடம்பெற்று இருக்கும்.






