என் மலர்
தொழில்நுட்பம்
- ஏற்கனவே விற்பனை செய்யப்படும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.
- ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 உள்ளது.
விவோ நிறுவனத்தின் V30e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட் ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ V30e ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய விவோ V30e ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், 6.78 இன்ச் Full HD+ கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட்அவுட், அட்ரினோ GPU கிராஃபிக்ஸ், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க விவோ V30e மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், ஆரா லைட் அம்சம், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் வெல்வெட் ரெட் மற்றும் சில்வர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 2 ஆயிரத்து 500 வரை எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
- சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.
- சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா என இரண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில், சியோமி நிறுவனம் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 14 SE பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது சியோமி நிறுவனத்தின் சியோமி சிவி 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு தவிர இதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

சியோமி 14 SE மாடல் ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் கடந்த மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் இரண்டு 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. சியோமி சிவி 4 ப்ரோ மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் வயர்டு சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
விலையை பொருத்தவரை புதிய சியோமி 14 SE மாடல் சியோமி 14 மற்றும் சியோமி 14 அல்ட்ரா மாடல்களை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய சியோமி 14 SE பற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- கழற்றக்கூடிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 215, 225 மற்றும் 235 4ஜி பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பீச்சர் போன் மாடல்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் T9 கீபோர்டு, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, QVGA ஸ்கிரீன் மற்றும் கழற்றக்கூடிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த பீச்சர் போன் மாடல்கள் கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கும். இவற்றை கொண்டு ஸ்மார்ட் அம்சங்களான செய்திகள், வானிலை மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் இயக்க முடியும்.

அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி பீச்சர் போன்களில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன், நோக்கியா 225 4ஜி மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று மாடல்களிலும் யுனிசாக் T107 பிராசஸர், எஸ்30 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
நோக்கியா 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் முறையே வி.ஜி.ஏ. கேமரா மற்றும் 2MP கேமரா கொண்டிருக்கிறது. நோக்கியா 215 4ஜி மாடலின் பின்புறம் டார்ச், 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மூன்று புதிய பீச்சர் போன்களிலும் MP3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி, 64MB ரேம், 128MB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 215 4ஜி மாடல் பீச், பிளாக் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 59 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 280 என துவங்குகிறது. நோக்கியா 225 4ஜி மாடல் பின்க் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 69 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரத்து 170 ஆகும்.
நோக்கியா 235 4ஜி மாடல் புளூ, பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 79 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 070 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் புது வெர்ஷன் அறிமுகம்.
- ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று மாடல்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் வொர்ல்டு சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புது வெர்ஷனுடன் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 15 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 21 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 31 ஆயிரத்து 999 இல் இருந்து ரூ. 27 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு மூலம் பணம் செலுத்தும் போது வழங்கப்படும் ரூ. 3 ஆயிரம் வங்கி தள்ளுபடியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
- மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும்.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. டீசரின் படி புதிய ஸ்மார்ட்போன் லெதர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும் என்றும் உறுதியாகி இருக்கிறது.
இத்துடன் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியான தகவல்களில் கேலக்ஸி F55 விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M55 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி F55 மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 26 ஆயிரத்து 999 என்று துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம்.
- இந்தியாவில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- சி.எம்.எஃப். ஆடியோ சாதனங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு.
நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நத்திங் போன் 2a மாடலின் புளூ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக புளூ நிற வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய நத்திங் போன் 2a புளூ எடிஷனில் நிறம் தவிர டிசைன் மற்றும் அம்சங்களில் எந்த விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த நிற வேரியண்ட் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வருகிற மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 2a விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இத்துடன் "ஜீரோ ஹவர்" சிறப்பு விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் சி.எம்.எஃப். ஆடியோ சாதனங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு.
இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் விலையில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வர உள்ளது
- உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.
உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.
இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் - 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.
- HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது
- HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 உள்ளது.
HMD நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் வருகிற 29 - ந் தேதி முதன் முறையாக கால் பதிக்கிறது . புதிய 'ஸ்மார்ட்போன்'களான HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 வகைகளில் அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள் பல்ஸ் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் பல்ஸ் ப்ரோ மற்றும் பல்ஸ் பிளஸ் மாடல்களில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி606 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன, அதே நேரத்தில் வழக்கமான பல்ஸ் 64 ஜிபி. இந்த 3 செல்போன்களும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்க சேமிப்பகம் உள்ளன.

இந்த செல்போன்கள் Android 14 இயக்க முறைமையில் இயங்குகின்றன, HMD இரண்டு முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் 3 வருட பாதுகாப்பு வழங்குகிறது.
பல்ஸ், பல்ஸ் பிளஸ் மற்றும் பல்ஸ் ப்ரோ அனைத்தும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன. பிளஸ் மாடல் 20W வேகமான சார்ஜிங் உள்ளது, அதே போல் பிளஸ் மாடல்கள் 10W சார்ஜிங் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைபை 5 (ஏசி), புளூடூத் 5.0 மற்றும் என்எப்சி போன்ற வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் அதே 6.65-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன, இதில் 720p தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 நிட்கள் வரையிலான உச்ச பிரகாசம் ஆகியவை உள்ளன. பல்ஸ் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது.

பிளஸ் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 3:செல்போன்களிலும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும். பல்ஸ் மற்றும் பல்ஸ் பிளஸ் செல்போன்களில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன.
அதே போல் பல்ஸ் ப்ரோ செல்பிக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த செல்போன்கள் எளிதில் பழுது பார்க்கும் தன்மை உடையது.

HMD பல்ஸின் விலை ரூ. 12,500, பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 இந்தியாவில் விரைவில் கிடைக்க உள்ளது.
- ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
- ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம்.
ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது.
- ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S24 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் HD+ பன்ச் ஹோல் 90Hz டிஸ்ப்ளே, 480 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் பிளஸ், 128 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள டைனமிக் பார் அம்சம் மிகமுக்கிய நோட்டிபிகேஷன்களை கேமரா கட்-அவுட் பகுதியில் காண்பிக்கும். இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் கேமிங் தொழில்நுட்பம் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க ஐடெல் S24 ஸ்மார்ட்போனில் 108MP டூயல் ஏ.ஐ. கேமரா, EIS, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், மேம்பட்ட ஏ.ஐ. அம்சங்கள், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் S24 அம்சங்கள்:
6.6 இன்ச் HD+ 1612x720 பிக்சல் டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ G91 பிராசஸர்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
8MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஐடெல் ஒ.எஸ். 13.5
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
3.5mm ஆடியோ ஜாக்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் சார்ஜிங் வசதி
ஐடெல் S24 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் டான் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் டான் வைட் நிற வேரியண்ட் யு.வி. லைட் படும் போது பின்க் நிறத்திற்கு மாறிவிடும். இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.
நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.
ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது.
- ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் ரெட்மி பேட் SE மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 11 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த டேப்லெட் கிராபைட் கிரே மற்றும் லாவெண்டர் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.






