என் மலர்
தொழில்நுட்பம்
- "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
- அந்த ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
நத்திங் நிறுவனத்தின் போன் (3) மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (3) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில், நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் மாடல் டெட்ரிஸ் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெயர் மற்றும் மாடல் நம்பர் தவிர ஸ்மார்ட்போனின் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் A015 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வெர்ஷனின் ஓவர்கிளாக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். பிராசஸர் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன.
- உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
- ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
- பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஸ்மாட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம். கேலக்சி மாடல் ஃபோன்கள் மற்றும் நோட் மாடல் ஃபோன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கேலக்சி மாடல் ஃபோன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் ஃபோன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற ஃபோன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதால் வாடிக்கையாளர்கள் இடையே ஏமாற்றமும் நிலவிவருகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித ரேம் ஆப்ஷன்களை கொண்டிருந்தது.
- இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் Full HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போன் இருவித ரேம் ஆப்ஷன்களை கொண்டிருந்தது. இந்த நிலையில், கேலக்ஸி F15 5ஜி மாடலின் மூன்றாவது மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி F15 5ஜி அம்சங்கள்:
6.6 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
ARM மாலி-G57 MC2 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
5MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ சென்சர், எல்.இ.டி. ஃபிளாஷ்
13MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி F15 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
- ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு இறுதியில் ரி என்ட்ரி கொடுத்தது. ரிஎன்ட்ரியின் போது ஹானர் பிராண்டின் முதல் சாதனமாக ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதுதவிர வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் மாறிவிடும்.
பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வயலெட் ஹைடெக் 30 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 699 ஆகும். இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஹானர் X9b மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 3.1 மெமரி, 6.78 இன்ச் பன்ச் ஹோல் கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 2652x1200 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 108MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 35 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. 2.0 டைப் சி போர்ட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
- முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
- இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
- புது இயர்பட்ஸ்-இல் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இயர்பட்களில் 46 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
நத்திங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆடியோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஆடியோ சாதனங்கள் நத்திங் இயர் மற்றும் இயர் (a) என்று அழைக்கப்படுகின்றன. புதிய தலைமுறை இயர்பட்ஸ் மாடல்களில் நத்திங் நிறுவனத்தின் பிரபலமான டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய இயர்பட்ஸ் டிசைன் நத்திங் இயர் 2 மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் மாடலில் 11 மில்லிமீட்டர் அளவு கொண்ட டிரைவர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் LHDC 5.2 மற்றும் LDAC கோடெக் வசதி, ANC வசதி உள்ளது. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் நீண்ட நேர பேக்கப் வழங்குகிறது.

நத்திங் இயர் (a) மாடலிலும் ANC வசதி, நத்திங் இயர் மாடலை போன்ற டிசைன் மெல்லிய ஃபிரேம், ப்ளூடூத் 5.3, LDAC கோடெக் வழங்கப்பட்டு இருக்கிறது. நத்திங் இயர் (a) மாடலின் கேஸ் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இதன் இயர்பட்களில் 46 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
முற்றிலும் புதிய நத்திங் இயர் மற்றும் இயர் (a) மாடல்களின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 7 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் விற்பனை ஏப்ரல் 22 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
நோக்கியாவின் தாய் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல், ஹெயின்கென் மற்றும் பொடெகாவுடன் இணைந்து முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் போரிங் போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 4ஜி காலிங் வசதி, இரண்டு ஸ்கிரீன்கள், டிரான்ஸ்லுசென்ட் டிசைன் உள்ளது. போரிங் போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 1.77 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 128MB ரோம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் போரிங் போன் மொத்தத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் நியோ QLED 8K மற்றும் புதிய QLED 4K டி.வி. மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் டி.வி.க்களில் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் மூலம் காட்சி மற்றும் ஒலியின் தரம் மேம்படுத்தப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பிரத்யேக கேமிங் மோட், பவர் சேவிங் மோட் வழங்கப்படுகிறது.
புதிய சாம்சங் நியோ QLED 8K டி.வி. QN900D மற்றும் QN800D மாடல்கள் 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் NQ8 ஏ.ஐ. ஜென் 3 பிராசஸர் மற்றும் பில்ட்-இன் NPU ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய சாம்சங் நியோ QLED 8K டிவி துவக்க விலை ரூ. 3 லட்சத்து 19 ஆயிரத்து 990 என்றும் நியோ QLED 4K டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 என்றும் சாம்சங் OLED டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
குறுகிய கால சலுகையாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டி.வி. மாடலுக்கு ஏற்ற வகையில், ரூ. 79 ஆயிரத்து 990 மதிப்புள்ள சவுண்ட்பார், ரூ. 59 ஆயிரத்து 990 மதிப்புள்ள ஃபிரீ ஸ்டைல் ப்ரோஜெக்டர், ரூ. 29 ஆயிரத்து 990 மதிப்புள்ள மியூசிக் ஃபிரேம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த மாதம் நார்சோ 70 ப்ரோ 5ஜி மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது நார்சோ 70x 5ஜி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ரியல்மி ஈடுபட்டு வருகிறது.
ரியல்மி நார்சோ 70x 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி அமேசான் தளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்றுள்ளது. அதில் ரியல்மி நார்சோ 70x 5ஜி மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி நார்சோ 70x 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ரியல்மி நார்சோ 70x ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் FHD+ IPS LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
- புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் SE மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் ஸ்மார்ட் லிவிங் 2024 நிகழ்வை அறிவித்துள்ள சியோமி, அதில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புது சாதனங்களில் ஒன்று டேப்லெட் மாடலாக இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சியோமி நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி பேட் SE மாடல் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதில் டேப்லெட் மட்டுமின்றி அதன் டிசைன், நிறங்கள் மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடல் கிரீன், கிரே மற்றும் லாவண்டர் என மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும். டிசைனை பொருத்தவரை இந்த மாடல் அதன் ஐரோப்பிய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் 11 இன்ச் FHD+ 1900x1200 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 14 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரம் என துவங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
- இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.
முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும்.






