என் மலர்
தொழில்நுட்பம்
- கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
- கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்த
முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.
பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன.
கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.
கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .
- கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 7 உடன் கேலக்ஸி Z போல்டு 7 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் கிளாம்ஷெல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை பார்ப்போம்.
கேலக்ஸி Z ப்ளிப் 7 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது சாதனத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய மிகவும் விரிவான, எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்ப்ளேவுடன் வருவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் பெரிய கவர் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி கண்டறிந்துள்ளது.
இது தொடர்பான அனிமேஷன் கோப்புகள் கேலக்ஸி Z ப்ளிப் 5 , கேலக்ஸி Z ப்ளிப் 6 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6-க்கான காட்சிகள் அவற்றின் தற்போதைய வடிவமைப்புகளுடன் பொருந்தினாலும், கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் அனிமேஷன் குறிப்பிடத்தக்க அளவு பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் குறிக்கிறது.
கேலக்ஸி Z ப்ளிப் 7-இல் தற்போதுள்ள வடிவமைப்பிற்கு பதிலாக, புதிய மாடலில் மோட்டோரோலா ரேசர் 50-ஐ ஒத்த இரட்டை கேமராக்களுக்கான கட்-அவுட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.
வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 மாடல் 4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.8 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இது 12 ஜிபி ரேம் உடன் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 2500 சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா ஸ்லாட் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
- புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
மொபல் போன்களின் பிரியர்களுக்காக நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பலவிதமான மாடல்களில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா 1 VII-ஐ வருகிற 15-ந்தேதி அறிமுகப்படுத்துகிறது.
சோனி எக்ஸ்பீரியா 1 VII கருப்பு, பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த மாடலில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா மேல்பக்க பெசலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
மேலும், சோனியின் பிராவியா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்றும் இரண்டு நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் வழங்கும் என கூறுகின்றனர்.
- பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டது.
- பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பயனர்கள் தரவுகளை கசியவிட்டதற்காக கூகிள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை (ரூ.11,950 கோடி) அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இதுதொடர்பாக கூகிளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடர்ந்தது. கடந்த சில வாரமாக அவற்றின் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கூகுளுக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.
பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவைத் தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
- டிஸ்ப்ளே பேனல்கள் அருகருகே இருப்பது போல் உள்ளது.
- கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
விவோ நிறுவனம் சீனாவில் S30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மாடல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சீரிசில் பேஸ் விவோ எஸ்30 மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி என இரண்டு வேரியண்ட்கள் அடங்கும். இந்த மாடல்கள் முறையே 6.31-இன்ச் மற்றும் 6.67-இன்ச் பிளாட் ஸ்கிரீன்களைக் கொண்டிருக்கும். இரண்டு மாடல்களும் தலா 6,500mAh பேட்டரிகளைக் கொண்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவோ எஸ்30 ப்ரோ மினி மற்றும் விவோ எஸ்30 ஆகியவற்றின் டிஸ்ப்ளே பேனல்கள் அருகருகே இருப்பது போல் உள்ளது. இரண்டு போன்களிலும் தட்டையான திரைகள், மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக திரையில் நடுவில் பஞ்ச் ஹோல் ஸ்லாட் காணப்படுகின்றன. இரண்டு மொபைல்களிலும் உள்ள பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஏற்கனவே வழங்கிய தகவலின் படி, விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டு இருக்கும். மற்றொரு டிப்ஸ்டர் கூறும் போது, இந்த ஸ்மார்ட்போனில் "உயர் செயல்திறன் கொண்ட பிராசஸர்" மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
விவோ எஸ்30 சீரிசின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
- கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.
கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும் வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.
Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது. ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
- 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.
- 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.
சியோமி ரெட்மி நிறுவனம், சக்திவாய்ந்த பேட்டரியுடன் கூடிய ரெட்மி டர்போ 4 ப்ரோ என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது .
இது 16 ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 செயலி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனின் பின்புறத்தில் ஐபோன் 16 போன்ற கேமரா வடிவமைப்பு உள்ளது.
இந்த ரெட்மி போன் 6.83-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 8s Gen 4-இல் இயங்குகிறது. 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பு உள்ளது. 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.
இந்த ரெட்மி போனில் 7,550mAh பெரிய பேட்டரி உள்ளது. இது 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் உடன் வருகிறது.
ரெட்மி டர்போ 4 ப்ரோ நான்கு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. – 12 ஜிபி ரேம் + 256 ஜிபி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 1 டிபி.
இதன் தொடக்க விலை 2199 சீன யுவான் (தோராயமாக ரூ. 25,700). அதே நேரத்தில், அதன் உயர் வகையின் விலை 2,999 யுவான் (ரூ. 35,100).
இந்த ஸ்மார்ட்போனை கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வாங்கலாம். தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
- மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.
விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.
இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகளில் பல முறையாகப் பாதுகாக்கப்படவில்லை, இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும்.
இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது.
மெட்டா நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் கண்ணாடிகளான ரே-பான் மெட்டாவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.
உலகளாவிய கண்ணாடி பிராண்டான EssilorLuxottica உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், மெட்டா AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன.
இந்த கண்ணாடிகள், "ஹே மெட்டா" என்று சொல்வதன் மூலம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ (Hands Free) ஆக பயனர்கள் கேள்விகளைக் கேட்கவும், நேரடியாக மொழிபெயர்க்கவும், இசையைக் கட்டுப்படுத்தவும், செய்திகளை அனுப்பவும் கூட அனுமதிக்கின்றன.
இதில் 1080பி வீடியோக்களை (1080p Videos) படமாக்கக்கூடிய 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளன. ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களும் (Open Ear Speakers) பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் புகைப்படங்களைப் எடுக்கவும், வீடியோக்களைப் பதிவு செய்யவும், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் அழைப்புகளைச் செய்யவும் முடியும்.
இதன் அமெரிக்க விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது. எனவே இதன் இந்திய விலை ரூ.35,000 முதல் 40,000 க்குள் தொடங்கலாம்.
- சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
ஓபன் ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.
ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது.
இதனால் சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் சாட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
இந்நிலையில், நாம் சாட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு Please, Thank You போன்ற மரியாதைகள் தேவையில்லை. இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
- பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வெளியிடப்பட்ட தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 ஜி இணைய சேவை மூலம் 2 மணி நேர படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த சேவையானது அதி நவீன 50 ஜி பேசிஸ் ஆப்டிகலி நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீனாவின் மற்ற மாகாணங்களிலும் இந்த 10ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
- இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
- வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை வைக்கும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.






