search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி"

    • நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
    • உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராயபுரம்:

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னா (வயது 30). திருமணமானவர். இவர் தொண்டையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருக்கு நவம்பர் 1-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சின்னா உள்நோயளியாக தங்கி கிச்சையில் பெற்று வந்தார். எனினும் நோயினால் கடும் அவதிப்பட்ட சின்னா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு சின்னா ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு ஆஸ்பத்தரியில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விக்னேஷ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.
    • கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன.

    சென்னை:

    பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவின் பின்புறத்தில் விக்னேஷ் வந்தபோது அங்கு நின்ற 2 வாலிபர்கள் திடீரென விக்னேஷை வழிமறித்து செல்போன், பணம், புளூடூத் ஹெட்போனை மிரட்டி பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த வேலாயுதம் பாடியநல்லூர் மகாமேடு நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன. வெங்கடேசன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    • மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார்.
    • 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களது மகன்கள் நவீன்(வயது34), விவேக்(32).

    மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரைவில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகேஸ்வரி அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று காலையும் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கணவர் அசோகன் கண்டித்ததாக தெரிகிறது.

    ஏற்கனவே மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல்கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை நாகேஸ்வரியின் இறுதி சடங்குநடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.

    எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த விவேக் திடீரென எழுந்து மண்ணெண்ணை கேனுடன் காசிமேடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விவேக்கின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவேக் தனது தாய் நாகேஸ்வரி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். நேற்றுமதியம் தாய் தீக்குளித்தபோது வீட்டில் இருந்த விவேக் பார்த்து கதறி துடித்து உள்ளார். இதனால் தாயின் நினைவில் அவர் மனவேதனையில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்துவிட்டார்.

    இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×