search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வழிப்பறி: வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது
    X

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வழிப்பறி: வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விக்னேஷ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.
    • கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன.

    சென்னை:

    பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவின் பின்புறத்தில் விக்னேஷ் வந்தபோது அங்கு நின்ற 2 வாலிபர்கள் திடீரென விக்னேஷை வழிமறித்து செல்போன், பணம், புளூடூத் ஹெட்போனை மிரட்டி பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த வேலாயுதம் பாடியநல்லூர் மகாமேடு நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன. வெங்கடேசன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    Next Story
    ×