search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேர் ஆட்டோ"

    • ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றி செல்வதாகவும், சரியான முறையில் போக்குவரத்து விதியை கடைப்பிடிக்காமல் சென்று வருவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தன. மேலும், கடலூரில் இருந்து மதுப்பிரியர்களுக்கென பிரத்தியோக ஷேர் ஆட்டோக்கள் ஓட்டப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி கடலூர் நகரப் பகுதியில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் போக்குவரத்து போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் குடிபோதையில் உள்ளனரா? ஷேர் ஆட்டோவில் அதிகளவில் பயணிகளை அதிகளவில் ஏற்றி செல்கிறார்களா? டிரைவர் அருகாமையில் கூடுதல் பயணிகளை அமர வைத்து செல்கின்றனரா? உரிய ஆவணத்துடன் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த 2 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிகளவில் பயணிகளை ஏற்றி சென்ற 31 ஷேர் ஆட்டோகளுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும், கடலூர் நகர பகுதியில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்படுமென போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை சரவணன் நிறுத்தியிருந்தார். இரவு 10 மணயளவில் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.

    இதனால் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து ஒயர்களை பிரித்துக் கொண்டிருந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார். இதில் சுதாரித்த சரவணன் திருடன் திருடன் என சத்தம் போட அப்பகுதியினர் அங்கு திரண்டர். அந்த நபரை சுற்றி வளைத்து கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
    • போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.

    குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.

    தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.

    அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.
    • ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்களும், மாநகர பஸ்களும் திகழ்கின்றன. அடுத்ததாக ஷேர் ஆட்டோக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை பிடித்துள்ளது.

    ஆனால் ஷேர் ஆட்டோக்களை பொது போக்குவரத்து வாகனமாக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. ஆனாலும் மக்களின் பயன்பாட்டில் மாநகர பஸ்களுக்கு அடுத்த இடத்தில் இவை உள்ளன.

    பொதுமக்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்கு படுத்தவும், அங்கீகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதனை பொது போக்குவரத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையமும் முடிவு செய்துள்ளது.

    சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இடைநிலை போக்குவரத்து திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஷேர் ஆட்டோக்களின் இயக்கம், கடைசி மைல் இணைப்பு மற்றும் மாநகர பஸ்கள் சேவை இல்லாத பகுதிகளுக்கு இணைப்பை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மாநகர பஸ்களுக்கு போட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பஸ்கள் செல்லக்கூடிய வழித்தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் அதனுடைய வருமானம் குறைகிறது.

    பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.

    இத்திட்டத்தின் கீழ் பஸ்களை இயக்க முடியாத பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களை மாற்றவும் கட்டணத்தை நிர்ணயித்து பொது போக்குவரத்தாக ஒழுங்குபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    2013-ம் ஆண்டு பொது கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தினமும் பயன்படுத்துகின்றனர். 12 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களில் தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றது.

    ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களை 65 சதவீதம் பேர் தினமும் பயன்படுத்துகின்றனர். 87 சதவீதம் பேர் இறுதி இலக்கை அடைய பயன்படுவதாக தெரிய வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஏற்கனவே ஷேர் ஆட்டோக்களை இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்றபோது லேசான காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகள் பழ–மை–யான புளிய மரம் திடீரென ஷேர் ஆட்டோவின் மீது சாய்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மரக்கிளைகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா, தீயணைப்பு வீரர் கார்த்தி–கேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரக்கி–ளையை அப்புறப்ப–டுத்தி ஷேர் ஆட்டோவை வெளியே எடுத்தனர். சாலையோரம் இருந்த புளியமரம் ஷேர் ஆட்டோ–வில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    நாமக்கல்:


    நாமக்கல் பரமத்திசாலை காவேட்டிபட்டி அருகே ஷேர்ஆட்டோவும் காரும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    காரை ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த தாமரைச்செல்வன் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    ×