search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கைது"

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 

    • மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.
    • மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம் (வயது 65). இவர் 4 பசு மாடுகள் வைத்துள்ளார். இந்த மாடுகளை அங்குள்ள கரம்பு பகுதியில் மேய்ப்பது வழக்கம். அதுபோல நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதே போல அதே கிராமத்தை சேர்ந்த மற்றொருவரும் 3 மாடுகளை மேய்க்க வந்தார். அவரிடம் தனது 4 மாடு களை ஒப்படை த்த அபூர்வ ம், முக்கிய பணி உள்ளது, எனது, மாடுகளையும் சேர்த்துபார்த்து க்கொ ள்ளுமாறு கூறிவிட்டு வீடு திரும்பினார்.

    இதையடுத்து நேற்று மாலை 7 மாடுகளும் அவரவர் உரிமையாளர் வீடுகளுக்கு திரும்பி வந்தது. மாடுகளின் நுனி காது அறுக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட அபூர்வம் அதிர்ச்சியடைந்து கூச்சலி ட்டார். பிறகு பக்கத்து வீட்டுக்காரரின் மாடுகளை பார்த்தபோது, அங்கிருந்த 3 மாடுகளின் நுனி காதுகளும் அறுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக புவனகிரி போலீசாரிடம் அபூர்வம் புகார் அளித்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேய்ச்ச லுக்கு சென்ற மாடுகள் கீழமணக்குடி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், பருத்தி வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மேய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த நில உரிமையாளர்களான விவசாயிகள், 7 மாடுகளின் நுனி காதுகளை அறுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான சண்முகம் (17), வீரமுத்து (45), பழனிச்சாமி (63), லட்சுமணன் (52) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தச்சுக்காடு கிராமத்தை சேர்ந்த மாடுகள் அடிக்கடி விவசாயப் பயிர்களை மேய்வதாகவும், இது தொட ர்பாக கிராம பஞ்சாயத்தில் மாடுகளின் உரிமையா ளர்களுக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டு ளளதாகவும் கூறினார்கள். மேலும், அடுத்தமுறை மாடுகள் மேய்ந்தால் அதன் நுனி காதுகள் அறுக்கப்படும் என பஞ்சாயத்தில் எச்சரித்து அனுப்பட்டது. இதனால் எங்கள் வயல்க ளில் மேய்ந்த மாடுகளின் நுனி காதுகளை அறுத்ததாக விவசாயிகள் கூறினார்கள். இதையடுத்து 4 பேரையும் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • விவசாயிகளை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருச்சி:

    இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசண் சரண்சிங்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களாக போராடி வரும் நிலையில் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி பிரதமருக்கு கடிதம் அனுப்ப தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    அதன்படி மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அதேபோல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளையும், பெண்களையும் காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பினர்.

    இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு, மாநில துணைத்தலைவர் மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியோர் இணைந்து தபால் நிலையம் நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
    • போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

    தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    ×