search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை கட்டிடம்"

    • அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாணவிகள் திறந்து வைத்தனர்.
    • சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட 3 வகுப் பறை கட்டிட திறப்பு விழா நடந்தது. தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் பிளஸ்-2 மாணவிகள் ரிப்பன் வெட்டி கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை திறந்து வைத்த னர்.

    விழாவில் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சொக்கநாதன்புத்தூர், மேலூர்துரைச்சாமியாபுரம் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நிதிகள் வழங்கப் பட்டுள்ளது. சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக இதுவரையில் (2021-22, 2022-23) 70 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட் டுள்ளது. தற்போது பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான கலை யரங்கம் ஆடிடோரியம் கட்டிடத்திற்கு முதல் கட்ட மாக சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கலை யரங்கம் அமைக்கப்படும்.

    ஆடிட்டோரிய கட்டி டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தி.மு.க விற்கு வாக்களித்தவர்களுக்கும் மற்றும் வாக்களிக்காதவர்கள் ஏன் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை என்று எண்ணுமளவிற்கு அனை வருக்கும் சேர்த்து உழைக்க வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார். அவர் வழி யில் ராஜபாளையம் தொகுதி யில் அனைத்து பொது மக்களின் வளர்ச்சிக் காகவும் செயல்பட்டு வரு கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பரம சிவம், பாலசுப்பிர மணியன் கிளைச் செய லாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், தங்கப்பன் வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில் :

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றபோது முன்னா ள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பி னருமான தளவாய்சுந்தரம் பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    அஞ்சுகிராமம் பேரூரா ட்சியில் பால்குளம் பகுதி யில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகி ன்ற அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகளே அதிக அளவு பயின்று வருகின்றனர். கல்லூரியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனர். அதனால் கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவ தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியு றுத்தினார்.

    இதற்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததன்படி காமராஜர் கல்வி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இதுபோன்ற கல்லூரிகளில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக்கூடகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என பேசினார்.

    • அரசு பள்ளிகளில் புதிய நூலகம்- கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
    • இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்ச ருமான ப.சிதம்பரம் கல்வெட்டுகளை திறந்து வைத்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றினார்.

    உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை திமுக நகரச் செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர செயலாளர் வழக்கறிஞர் இரவுசேரி சஞ்சய், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் புகழேந்தி, இளங்குடி முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.78 லட்சம் மதிப்பிலான மகாத்மா காந்தி நூலகத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக் கோரி மேலாண்மைக்குழுவினா் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, துணை தலைவர் தீபா ஆகியோர் முன்னிலையில் மாண வர்களின் பெற்றோர் ராமநாதபுரத்தில் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போ தைய அரசு, மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து தற்போது 400 மாணவர் படித்து வருகின்றனர்.

    கடந்த 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களே இன்னும் உள்ளது.

    மேலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்ப டுவதால் தனித்தனியாக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • விஜய்வசந்த் எம்.பி.யிடம் பள்ளி நிர்வாகிகள் மனு
    • எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்தை குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சமீனுதீன் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குளச்சல் அரசு நடுநி லைப்பள்ளி சுமார் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் அங்கன்வாடி மையம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    ஆனால் பள்ளி குழந்தை களின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகள் மழைக்காலங்களில் ஒழுகி காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மைய பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அங்கு நிரந்தரமாக வகுப்புகள் நடத்த முடியாது.

    இந்த பள்ளியில் தான் குருந்தன்கோடு வட்டார வள மையம் சார்பில் குளச்சல் வட்டார மாணவ, மாணவிகளுக்கு அரசு நடத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. குளச்சல் சரகத்தில் விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    கொரோனா தாக்குதலுக்குப்பின் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அரசு பள்ளிக் கூடங்களைத்தான் நம்பி உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் செயல்பட அனைத்து வகையிலும் இந்த பள்ளி தகுதியானது. ஆனால் கட்டிடம் ஒழுகுவதால் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டால் ஏழை பெற்றோர்கள் பிள்ளைகளை இங்கு சேர்ப்பர். பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும். எனவே தாங்கள் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து பள்ளிக்கு 12 வகுப்பறை கட்டிடம் கட்டி தருமாறு ஏழை பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது.
    • பள்ளிகள் திறந்ததும் ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரவும் திட்டம் உள்ளது

    பல்லடம் :

    பல்லடம் பி.டி.ஓ., காலனி அரசு நடுநிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க தீர்மானித்தனர்.

    இதன்படி அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில்குமார், சங்கரி ஆகியோர் தாங்களே வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து 17 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தனியார் பள்ளிக்கு நிகராக கட்டப்பட்டு வருகின்றன.

    பள்ளிகள் திறந்ததும் ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வரவும் திட்டம் உள்ளது. திருப்பூர் பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினர் வகுப்பறை சுவர்களில் ஓவியங்கள் வரைந்தனர்.  

    • நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
    • நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூர் ஊராட்சியிலுள்ள, வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

    போதிய வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏவிடம் மக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அங்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விரைவில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    • பண்ருட்டி அருகே சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நெய்வேலி சட்ட மன்ற தொகுதி, பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இட பற்றாக்குறை உள்ளதால் புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பட்டு, திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திரு சபா.ராேஜந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வட்டார கல்வி அலுவலர் செல்வம்,பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், சேட்டு, ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதாஞானசேகரன், ஒன்றிய விவசாய அணி செந்தாமரை, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொமுச பேரவை துணை தலைவர் வீரராமச்சந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வகுமார், ஏழுமலை, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி, ஒப்பந்ததாரர் நித்தியநந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×