பால்குளம் அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்

சட்டசபையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
பால்குளம் அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்
Published on

நாகர்கோவில் :

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றபோது முன்னா ள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பி னருமான தளவாய்சுந்தரம் பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

அஞ்சுகிராமம் பேரூரா ட்சியில் பால்குளம் பகுதி யில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகி ன்ற அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகளே அதிக அளவு பயின்று வருகின்றனர். கல்லூரியில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிபட்டு வருகின்றனர். அதனால் கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவ தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியு றுத்தினார்.

இதற்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததன்படி காமராஜர் கல்வி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இதுபோன்ற கல்லூரிகளில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக்கூடகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கை நிறை வேற்றப்படும் என பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com