search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Library"

    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நாசரேத்:

    நமக்கு நாமே திட்டத்தில் ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆழ்வார்திரு நகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    கட்டிடம் திறப்பு விழா

    நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நிதி பங்கீடாக ரூ. 3,67,000 வழங்கப்பட்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வக்குமார், துணைத் தலைவர் மாட சாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தம்பிரான், இக்பால், ஹனிபா, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கடம்பாகுளம் பாசன மடை எண் 5, 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவ னர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு கொடி அசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மேலக்கடம்பா ஊர்த்தலை வர் பலவேசம், விவசா யிகள் சரவணன், முத்து, சுதா, தூர்க்கையாண்டி, ஆபிரகாம், குருகாட்டூர் ஜேம்ஸ், சித்தர், ஜோஷ்வா, கல்லை ஆறுமுகம், நாலு மாவடி இயேசு விடுகிறார் ஊழியர் சமூக பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

    • அரசு பள்ளிகளில் புதிய நூலகம்- கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
    • இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்ச ருமான ப.சிதம்பரம் கல்வெட்டுகளை திறந்து வைத்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றினார்.

    உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை திமுக நகரச் செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர செயலாளர் வழக்கறிஞர் இரவுசேரி சஞ்சய், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் புகழேந்தி, இளங்குடி முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.78 லட்சம் மதிப்பிலான மகாத்மா காந்தி நூலகத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வீதி பகுதியில் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல வருட கோரிக்கையாக இருந்த கிளை நூலகம் அமைக்கும் திட்டத்தை சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர் அவர் உடனடியாக கிளை நூலகம் அமைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி கீழ் வீதி கிராமத்தில் சட்ட உறுப்பினர் பொது நிதியிலிருந்து 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது அதனை முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார்.

    அப்போது நெமிலி ஒன்றிய துணைச் சேர்மன் தீனதயாளன் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    ×