search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் புதிய  வகுப்பறை கட்டிடம்  சபா.ராஜேந்திரன்,  எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
    X

    கருக்கை அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

    • பண்ருட்டி அருகே சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நெய்வேலி சட்ட மன்ற தொகுதி, பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இட பற்றாக்குறை உள்ளதால் புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாணவ மாணவிகளுக்கு உதவுகின்ற வகையில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூபாய் 15 லட்சம் பெற்று, 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட பட்டு, திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திரு சபா.ராேஜந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், வட்டார கல்வி அலுவலர் செல்வம்,பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், ஊராட்சி செயலாளர் ஜோதிநாதன்,உக்கரமூர்த்தி, ராமநாதன், திருநாவுக்கரசு, வெங்கடேசன், சேட்டு, ராஜிவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கவிதாஞானசேகரன், ஒன்றிய விவசாய அணி செந்தாமரை, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொமுச பேரவை துணை தலைவர் வீரராமச்சந்திரன், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய மேலாளர் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர்கள் செல்வகுமார், ஏழுமலை, மற்றும் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி, ஒப்பந்ததாரர் நித்தியநந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×