search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு வண்டி பந்தயம்"

    • காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சுருளிப்பட்டியில் இன்று நடந்தது . இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) மகாஜன சங்க பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார் . தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மகாராஜன் எம்.எல்.ஏ.. கூடலூர் தி.மு.க. நகரச் செயலாளர் லோகன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு சுருளிப்பட்டியில் இருந்து போட்டி தொடங்கியது. தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் ஜோடி, நடு ஜோடி, பெரிய மாடு என 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது . இதில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.

    காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 18 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரிய ஜோடி பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக சுருளிப்பட்டியில் இருந்து சுருளியாறுமின் நிலையம் விலக்கு வரை என நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் முதல் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.40 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி மற்றும் சுருளியாறு மின் நிலைய சாலையோரங்களில் நின்று இருந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) ஏர் உழவர் சங்கத்தினர் செய்திருந்தனர். கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் வரை நடக்க இருந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் இந்தப் போட்டி சுருளிப்பட்டி பகுதிக்கு மாற்றம் செய்யபபட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இந்த மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற சாரதிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    இந்த பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு சாலையில் 8 கி.மீ தூரம் இந்த பந்தயம் நடைபெற்றது.

    • சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது.
    • மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் ஏர் உழவன் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் என 6 பிரிவின்கீழ் சுமார் 150க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர் மேகமலை செல்லும் சாலையில் மாடுகள் 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. முதல்பரிசு 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மற்ற வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றிபெற்ற மாடுகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சின்னமனூர் இரட்டை மாட்டு வண்டி நலச்சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. போட்டியை அ.இ.அ.தி.மு.க. தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலாமணி மார்பன் ெகாடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சின்னமனூர் நகர் பொறுப்பாளர்பிச்ச ைக்கனி, மாவட்ட பிரதிநிதி மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தினை சாலையோரம் இருபுறங்களிலும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

    • காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

    • கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • பாதுகாப்பு பணிகளில் அலங்காநல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.



    முதலிடம் பிடித்த மாட்டின் உரிமையாளரான சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

     அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன.

    பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால கிருஷ்ணணின் மாடு பெற்றது. சிறிய மாட்டில் 2 சுற்றாக போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்ப னூர், கள்ளந்திரி மாடு களின் உரிமையாளர்கள் இணைந்து பெற்றனர்.

    மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறைப்பாறை வெண்டி முத்தையா மாடும், 2-ம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரனின் மாடும் பெற்றன.

    விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள், மாட்டு வண்டி பந்தயக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அலங்கா நல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.


    • இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி உற்சவம் நடந்தது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடுமாடு போட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    இந்த மாட்டு வண்டி போட்டியில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாடுகளுக்கான 8 மைல் தூரத்திற்கு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்

    பி.ராஜசேகரன் மற்றும் திருவாதவூர் கிராமத்தார்கள் மற்றும் திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடுமாட்டு போட்டியில் ரூ. 30 ஆயிரத்து 1-யை திருவாதவூர் அருகே உள்ள கழுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி வென்றது. 2-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து1-யை அ.வல்லா ளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசு ரூ.20ஆயிரத்து 1-யை கோட்ட நத்தம்பட்டி ரவி மற்றும் திருவாதவூர் எஸ்.எம். பிரதர்ஸ் ஆகியோர் வண்டியும், 4-ம் பரிசு 12 ஆயிரத்து 1-யை திருவாதவூர் தன்வந்த் பிரசாந்த் வண்டியும் வென்றன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்க ளுக்கு விழா கமிட்டியா ளர்கள் பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பெரிய மாடு, சின்ன மாடு, போட்டி நடந்தது. திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    • கடலாடியில் தேவர் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா மற்றும் 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் சார்பில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு பந்தயம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கடலாடி நகர் தேவர் உறவின் முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார்.

    ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவர் முனியசாமி பாண்டியன் ஒருங்கிணைத்தார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். நடுமாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் முனியசாமி தொடங்கி வைத்தார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைத்தார். பெரியமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு மதுரை மோகனசாமி குமாரின் மாடும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமாரின் மாடும், நடுமாடு பந்தயத்தில் மதுரை அவனியாபுரம் மோகன சாமி குமார் மாடு முதல் பரிசையும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமார் மாடும், 3-வது பரிசை மதுரை ஜெய்ஹிந்துபுரம் அக்னி முருகன் மாடும், 4-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும் பெற்றன.

    சின்ன மாடு பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும், 3-மூன்றாவது பரிசை பேரையூர் இலந்தைகுளம் முனியசாமி மாடும் பெற்றன. விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.

    • தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
    • இந்த தகவலை கடலாடி ஒன்றிய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-ம் ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா, 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 5-ம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆகிய விழாக்களை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் நடத்தும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையுடன் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் கூறியதாவது:-

    வருகிற (27-ந் தேதி) கடலாடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி தேவர் உறவின்முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகிக்கிறார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் சூரி முனியசாமி தொடங்கி வைக்கிறார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைக்கிறார். பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி வாங்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ரேக்ளா ரேஸ் முன்னாள் மாநில தலைவர் மோகன் சாமி குமார் வழங்குகிறார்.

    பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி கொடுக்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ராமேசுவரம் துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி வழங்குகிறார். விழாவை முன்னிட்டு வெற்றி பெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசை கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் வழங்குகிறார். விழாவையொட்டி பொது அன்னதானம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லல் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான பசு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    கீழப்பூங்குடி சிவாச்சாரியார் நேரு தலைமையில் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் 3-ம் கால பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகளுடன் கும்ப கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, ஊர் பொதுமக்கள் சார்பில் கும்ப மரியாதை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் கீழப் பூங்குடி, மேலப்பூங்குடி, புதுவட்டி, கொடுங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்னர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்

    ×