search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Double bullock cart race"

    • பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.
    • பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பகுதியில் அமைந்துள்ள வீர காளியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

    போடி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.

    பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.

    பந்தயத்தில் வெற்றி பெற்ற பந்தய மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இளஞ்சிட்டு வகை மாடுகளுக்கு ரூ.4000 முதல் பரிசாகவும் கோப்பை வழங்கப்பட்டது.

    பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்ட நாட்டு மாடுகள் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    • கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • பாதுகாப்பு பணிகளில் அலங்காநல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.



    முதலிடம் பிடித்த மாட்டின் உரிமையாளரான சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

     அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன.

    பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால கிருஷ்ணணின் மாடு பெற்றது. சிறிய மாட்டில் 2 சுற்றாக போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்ப னூர், கள்ளந்திரி மாடு களின் உரிமையாளர்கள் இணைந்து பெற்றனர்.

    மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறைப்பாறை வெண்டி முத்தையா மாடும், 2-ம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரனின் மாடும் பெற்றன.

    விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம மக்கள், மாட்டு வண்டி பந்தயக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அலங்கா நல்லூர் போலீசார் ஈடுபட்டனர்.


    • சுருளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
    • இளஞ்சிட்டு புள்ளிமான், பூஞ்சிட்டு, என 4 வகையான பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆரவாரம் செய்தனர்.

    இளஞ்சிட்டு புள்ளிமான், பூஞ்சிட்டு, என 4 வகையான பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசு தொகை பரிசாக வழங்கப்பட்டது.

    இந்தப் போட்டியில் முதல் கொடி வாங்கும் வண்டிகளுக்கும் குத்துவிளக்கு, அண்டா, துண்டு பரிசு வழங்கப்பட்டது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரை சாலையில் சுமார் 8 கி.மீ தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.

    மாட்டு வண்டி பந்தயத்தை காண 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ×