என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "netaji subhash chandra bose"

    • நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள்
    • 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

    இதற்காக தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கரிச்சான், பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான்சிட்டு, வான் சிட்டு, புள்ளிமான், இளஞ்ஜோடி என பல்வேறு பிரிவுகளில் மாடுகள் கலந்து கொண்டன.

    சின்னமனூர் மேகமலை சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. காளைகள் சீறிப்பாய்ந்த போது சாலையில் இரு புறமும் நின்று பொதுமக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னமனூர் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    முன்னதாக இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டி தேனி தெற்கு மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காசிராஜன், இணைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சைக்கனி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் நகரின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort
    புதுடெல்லி:

    இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வெள்ளையர்களின் ராணுவம் பீரங்கிகளால் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க  செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.


    இந்த அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப்போர் தொடர்பான சிறப்பு புகைப்படங்களும், முதலாம் உலகப்போரின்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு இயற்றிய எழுச்சிகீதமும் இடம்பெற்றுள்ளது.

    இவற்றை திறந்துவைத்த பிரதமர் மோடி இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை சுமார் ஒருமணி நேரம் பார்வையிட்டார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort

    ×