search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
    X

    கூடலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

    • காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சுருளிப்பட்டியில் இன்று நடந்தது . இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) மகாஜன சங்க பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார் . தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மகாராஜன் எம்.எல்.ஏ.. கூடலூர் தி.மு.க. நகரச் செயலாளர் லோகன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு சுருளிப்பட்டியில் இருந்து போட்டி தொடங்கியது. தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் ஜோடி, நடு ஜோடி, பெரிய மாடு என 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது . இதில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.

    காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 18 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரிய ஜோடி பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக சுருளிப்பட்டியில் இருந்து சுருளியாறுமின் நிலையம் விலக்கு வரை என நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் முதல் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.40 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி மற்றும் சுருளியாறு மின் நிலைய சாலையோரங்களில் நின்று இருந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) ஏர் உழவர் சங்கத்தினர் செய்திருந்தனர். கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் வரை நடக்க இருந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் இந்தப் போட்டி சுருளிப்பட்டி பகுதிக்கு மாற்றம் செய்யபபட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×