search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் விற்பனை"

    • திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை பகுதிகளில் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில் சென்னை கிழக்குகடற்கரை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டபோது பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்த மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.

    மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தம் பெட்டமைனை பதுக்கி வைத்து வாட்ஸ் அப் குழு மூலம் ராகுல் என்பவர் விற்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். அவர் அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தி விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து கைதான ராகுலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    * பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

    * கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள நிலையில் டி.ஜி.பி.கையில் விருது பெறுகிறார்.

    * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி தொடர்பில் உள்ளார்.

    * செய்தி வெளிவந்த பிறகே ஜாபர் சாதிக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    * ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

    * தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
    • போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தாம்பரம் பகுதியில் உள்ள சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

    அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது தெரியவந்தது. பின்பு சங்கர் நகர் போலீசார் மெரினா கடற்கரையில் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சூரியமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது கொடுங்கையூரை சேர்ந்த யூனுஸ் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தியும், சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு போலீஸ் துறையில் முதன் முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    • அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலைய புதிய கட்டிடங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். பின்னர் அவர் நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 போலீஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறையை சேர்ந்த 18 போலீசார், அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் போதை பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட 1½ கிலோ தங்கம், 300 செல்போன்கள், 50 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு போலீஸ் துறையில் முதன் முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்கள், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3,700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதைப் போன்று அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.

    அதன்பிறகு 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெண்கள் மத்தியில் சரியாக போய் சேரவில்லை. இதனால் அதுதொடர்பாக தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×