என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாட புத்தகம்"
- எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
- இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.
மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.
- பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்.
- ‘இல்லம் தேடி கல்வி மையம்” மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.
மதுரை
தமிழகத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 13-ந் தேதி (நாளை) முதல் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பள்ளியில் தூய்மை பணிகள், கட்டிடத்தின் உறுதி நிலை, சீரான மின்இணைப்பு, கழிவு நீர் தொட்டிகளை மூடுதல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 166 பள்ளிக்கூ டங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. அன்றைய தினமே புதிய மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் 1-10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 9.10 முதல், மாலை 4.10 வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் மாலை 4 வரை வகுப்புகள் நடைபெறும்.
பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும் 'இல்லம் தேடி கல்வி மையம்" மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாணவர்கள் கல்வி கற்பதில் தயக்க நிலை- இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To the Minister of School Education, West Bengal.
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 19, 2018
There is a glaring error with the image used in one of the school text books to depict Milkha Singh-ji. Could you please request the publisher to recall and replace this book?
Sincerely. @derekobrienmphttps://t.co/RV2D3gV5bd
ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கில பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதிகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்.
ஆனால், வார்த்தை சிக்கல் காரணமாக அவரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்