என் மலர்
செய்திகள்

திலகர் பயங்கரவாதத்தின் தந்தை - ராஜஸ்தான் பள்ளி பாட புத்தகத்தால் சர்ச்சை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #Rajasthan
சென்னை:
ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கில பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதிகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்.

ஆனால், வார்த்தை சிக்கல் காரணமாக அவரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்தின் கீழ் தனியார் ஆங்கில பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வி 8-ம் வகுப்பு பாடபுத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரை பயங்கரவாதிகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி வழியில் சென்று கொண்டிருந்த சுதந்திர போராட்டத்தை சிதைத்த அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் மிதவாத கொள்கைகளில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ஆயுத போராட்டம் மூலமே சுதந்திரம் கிட்டும் என முழங்கியவர்களில் திலகரும் ஒருவர்.

ஆனால், வார்த்தை சிக்கல் காரணமாக அவரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Rajasthan
Next Story






