search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வாகனம்"

    • எக்ஸ்பிரஸ் சாலையில் பள்ளி வாகனம ஒன்வே-யில் தவறாக வந்ததால் விபத்து
    • உயிரிழந்த அனைவரும் சொகுசு காரில் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின் மீது தவறான திசையில் வந்த பேருந்து நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    அந்த கார் குர்கானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியான 6 பேரும் அந்த காரில் பயணித்தவர்கள். பள்ளி பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீசார் விசாரணையில் பள்ளி வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 9 கி.மீ. தூரம் தவறான பாதையிலேயே பயணித்தது தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க காரின் கதவுகளை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு பள்ளி வாகனம் சொகுசு கார் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    • சினிமாவில் வரும் சம்பவம் போல 2 கார்களில் வந்து தூக்கிச் சென்றனர்
    • சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார்.

    தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார். தினமும் பள்ளி வாகனத்தில் சிறுவன் சென்று வந்தான். இன்று காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான்.

    அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்தனர்.சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் வந்தவர்கள், ஹாரன் ஒலி எழுப்பியதால், பள்ளி வாகனம் அந்த கார்களுக்கு வழி விட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து முந்திச் சென்ற 2 கார்களும் திடீரென சாலையை மறித்து நின்றுள்ளது. அதில் இருந்து திபு...திபு...வென ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் டிரைவர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்ம கும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.

    சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கடத்தப்பட்டதை பார்த்த பலரும் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் வேறு வாகனங்களில், கடத்தல் கும்பல் சென்ற காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவனை கடத்திய 2 கார்களும் மாயமாக மறைந்து விட்டன. இதற்கிடையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களது விசாரணையில், சிறுவனை கடத்திய கார்கள், நாகர்கோவில் நோக்கி சென்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனை கடத்தியது யார்? அவர்கள் எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
    • வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 570 பள்ளி வாகனங்கள், தெற்கு வட்டாரத்தில் 616, தாராபுரத்தில் 208, உடுமலையில் 260 என மாவட்டத்தில் மொத்தம் 1,660 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.

    பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.பள்ளிகளின் நிலை, படிக்கட்டு உயரம், பஸ்களில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி வசதி, இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதிச்சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுவரை நடந்த ஆய்வில் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், இன்னமும் சான்றிதழ் பெறாமல் உள்ளன. இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.திருப்பூர் வடக்கு போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  

    • குறைபாடுகளை சரிசெய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன

    நாகர்கோவில், மே.17-

    தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் ஆகியோர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு வாகனத்திலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என்று ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும்.

    வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும் கேமரா பொறுத்த வேண்டும்.

    ஆனால் கேமரா மற்றும் சென்சார் பொறுத்தப்படாமல் உள்ளது.

    இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    மாணவ- மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாக னத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைகளை சரி செய்யவேண்டும்

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 78 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 396 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பள்ளி வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும் மார்த்தாண்டத்தில் ஆய்வு பணி நடத்தப்படும். ஆட்டோக்களில் அதிக அளவு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. தனியார் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

    பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆய்வுக்கு வந்த பெரும்பாலான வாகனங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தி விட்டு வரும்படி அறிவுறுத்தினர்.

    இதே போல ஒரு சில வாக னங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கான ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

    • அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந் தேதி நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் 360 பள்ளி வாகனங்களும், அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளி திறக்க உள்ள நிலையில் பள்ளி பஸ்களின் ஆய்வை மே இறுதிக்குள் முடிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் வடக்கு , அவிநாசி வட்டாரத்துக்குட்பட்ட 590 பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பஸ்களின் கண்டிஷன், பள்ளி பஸ்களில் படிக்கட்டுகளின் உயரம், பின்புறம், இடதுபுறம், மற்றும் வலது புறம் உள்ள அவசர கால வழி, விபத்து ஏற்படும் வானங்களில் முதலுதவி வசதி, மாணவ மாணவியர் இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதி சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது.

    • மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது.
    • உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிவாகனங்களில், தமிழ்நாடு மோட்டார் வாகன(பள்ளி வாகனங்கள் முறைமைபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012, விதிமுறைகள் உரியமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுஅமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.

    கல்வி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012ல் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
    • பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில், சென்சார் பொருத்தப்பட வேண்டும்

    சென்னை:

    பள்ளி வேனில் சிக்கி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

    இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் சிறப்பு விதிகள் 2012ல் தமிழ்நாடு அரசு திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. அதன்படி, அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பேருந்தை பின்னோக்கி நகர்த்தும் போது, பின்பகுதி முழுவதும் தெளிவாக தெரியும் அளவுக்கு, பேருந்தின் பின்பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில், சென்சார் பொருத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மோட்டார் வாகன விதிகளுக்கான இந்த வரைவு திருத்தத்தை அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திருத்தமானது மாநில அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என அரசு கூறி உள்ளது. ஏதேனும் ஆட்சேபனை அல்லது பரிந்துரைகள் இருந்தால், 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, தலைமைச் செயலகம், சென்னை' என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும்.

    • உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    உடுமலை :

    தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உடுமலை மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த பணிகளை மேற்கொண்டனா்.அப்போது ஒவ்வொரு பள்ளி வாகனங்களும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    இதில் வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஓட்டுநா்களுக்கு உரிமம் புதுபிக்கப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் தகுதியற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன.
    • உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை முதல் பள்ளி வாகனங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (பொ) கோகிலா, பரிந்துரையின் பெயரில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஊர்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் தர ஆய்வில் கலந்துகொண்டன.

    சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், ஆய்வாளர் ராஜேஷ், தீயணைப்பு துறை ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன. 136 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டி இருந்தது, அவசர உதவி பெட்டி, மறந்து பெட்டி, ஜிபிஎஸ் கேமரா, தீயணைப்பு உபகரணங்கள், வாகனத்தின் தரைத்தளம், வாகனத்தின் உடற்கூறு மற்றும் பொறியியல் நிலைகள் குறித்து ஆய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் பாதுகாப்பின்மை, அவசரவழி கதவினை திறக்க முடியாதது போன்ற காரணங்களால் 2 வாகனங்களுக்கு தரச்சான்றிழ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்து. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிசெல்லம் வாகனங்கள் என்பதால் வாகன ஆய்வு கடுமையாக பின்ப்பற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோகிலா மற்றும் கலந்துகொண்ட அதிகாரிகள் ஓட்டுனர்களிடம் கலந்துரையாடிய போது, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு என சில சமூக கடமைகள் இருக்கிறது.உதராணமாக நீங்கள் சிகப்பு விளக்கு எரியும் போதோ, போக்குவரத்து காவலர் தடுக்கும் போதோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி விதிகளை மீறி செயல்படுவது போன்ற செயல்களை நீங்கள் செய்யும் போது, உங்கள் வாகனத்தில். உள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் தவறினை, சரி என நினைத்து தவறாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. போக்குவரத்து விதிகளை பயிற்றுவிக்கும் ஒரு மகத்தான சமூகபணி உங்கள் முன் இருக்கிறது என்பதை நீங்கள் அணைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். ஆக தங்கள் அனைவரின் செயல்பாடும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதிர்கால ஒரு சமூகம் உங்களை பின்பற்றுகிறது என்பதை அறிந்து செயல்படுங்கள் என பேசினார். காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த வாகன சோதனை, பத்தரை மணிக்கு மேல் நடைபெற்றது. காத்திருந்த விருந்தினர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    ×