search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் - கலெக்டரிடம் தொழிலாளர் நல அமைப்பினர் கோரிக்கை
    X

    கோப்புப்டம்.

    பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் - கலெக்டரிடம் தொழிலாளர் நல அமைப்பினர் கோரிக்கை

    • மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது.
    • உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிவாகனங்களில், தமிழ்நாடு மோட்டார் வாகன(பள்ளி வாகனங்கள் முறைமைபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012, விதிமுறைகள் உரியமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுஅமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.

    கல்வி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×