search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்மணிகள்"

    • குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
    • பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.

    அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • 100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், சேந்தமங்கலம், மாங்குடி, வடகரை, வண்டம்பாலை, நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 1லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.

    நேற்று காலையில் இருந்து மாலை வரை அதிகமழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

    ஏற்கனவே மழை நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இந்நி லையில் மாவட்ட முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    உடனடியாக வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

    100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இடையில் கன மழை பெய்வதும், சாரல் பொழிவதுமாக மாறி மாறி காணப்பட்டது.

    தஞ்சாவூா்:

    வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை, திருவையாறு, வல்லம், பாபநாசம், கும்பகோணம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்கிறது.

    தஞ்சையில் இன்று அதிகாலை 5 மணிக்கு லேசான சாரல் பொழிந்தது. அதன் பிறகு காலை 9 மணி முதல் மிதமான அளவில் மழை பெய்ய தொடங்கியது.

    இடையில் கன மழை பெய்வதும், சாரல் பொழிவதுமாக மாறி மாறி காணப்பட்டது. மதியம் 2 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது.

    இன்று மாலை மற்றும் இரவிலும் மழை பெய்வதற்கான சூழல் தென்படுகிறது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து மழை பெய்ததால் தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வழக்கத்தை விட குறைவான அளவிலே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதனால் பெரிய கோவில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.

    தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வயலில் அறுவடை இயந்திரம் இறங்க முடியாத அளவுக்கு உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.

    அடுத்து சில நாட்கள் தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே அறுவடை பணி தொடங்குவதற்கான சூழல் காணப்படும். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

    இது தவிர கொள்முதல் பணிகளும் பாதிப்படைந்துள்ளன. ஏற்கனவே கொள்முதலுக்காக கொண்டு வந்த நெல்மணிகள் நனையாமல் இருக்க தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    • முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்த ஆண்டு டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-க்கு முன்பாக மே மாதம் 24 ஆம் தேதியே திறக்கப்பட்டது.

    வழக்கமாக குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் செய்யப்படுவது வழக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. தற்போது வரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது.

    மீதி அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

    தற்போது இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற நிலை இருப்பதால் தார்ப்பாயுடன் உள்ளனர். கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். தேவையான அளவு உலர் கலம் எந்திரம் இல்லாத காரணத்தால் ஈரப்பதமான நெல்லை காய வைத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 33 ஆயிரத்து 450 ஏக்கர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சம்பா சாகுபடி 81 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    • சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
    • திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதிளில்நேற்றுபகல் நேரத்தில் வெயில் அடித்தது.

    இதனால் சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் ஆட்களை கொண்டு பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளும் தீவிரம் அடைந்தன.

    இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு ஒரு சுமை இல்லாமல் போகும் என்ற நிலை நேற்று பகலில் உருவானது.

    மாறாக நேற்று இரவு திருக்காட்டுப்பள்ளியில் பலத்த மழை பெய்தது. இதனால் திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்துஓடியதால் துர்நாற்றம் வீசியது.

    இதைப் போன்றே பூதலூர்ல் இரவு சுமாரான மழை பெய்தது.

    இன்று அதிகாலையில் இருந்து பூதலூரில் லேசாக தொடங்கிய மழை 7 மணி வரை பெய்தது.

    இதனால் காலை நேர பணிகளை செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    காலையில் மழை பெய்ததால் நேற்று காய வைத்திருந்து மூடி வைத்திருந்த நெல்மணிகள் மீண்டும் காய வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.

    தொடர்ந்து விவசாயிகள் தரப்பிலும் மற்ற பல விவசாயிகள் அமைப்புகளின் சார்பிலும் ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி வருகிறது.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காலம் தப்பிய மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளதோடு அறுவடை செய்யப்பட்டு உள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உருவாகியுள்ளது.

    விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக அரசு குறுவை நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்தி முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நெல் குவியல்கள் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
    • தண்ணீர் தேங்கி நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் மழை கொட்டியது.இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.மழை காரணமாக அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்துள்ள நெல் மணிகள் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் ஏராளமான நெல் குவியல்கள் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    அதைப்போலவே திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையிலும் விவசாயிகள் ஆங்காங்கே அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று பகல் முழுவதும் குளிரான ஒரு சூழ்நிலை நிலவியது. வெயில் தலை காட்டாததால் சாலைகளில் குட்டி காயவைக்கப்பட்ட நெல்மணிகள் காய முடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் நெல்லை மூடி வைத்துவிட்டு வந்த பிறகு இரவு 8:30 மணியிலிருந்து 3 மணி நேரத்திற்கு மழை கொட்டியது.இதனால் மூடி வைக்கப்பட்ட நெல் குவியல்களுக்கு அடியில் தண்ணீர் சென்று நனைந்து விடும் நிலை உருவாகியுள்ளது. பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்ததால் முளைத்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கோவில்பத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களுக்கு ஊடே மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பூதலூர் மேம்பாலத்தில் காய வைத்து மூடி வைக்கப்பட்டுள்ள நெல்குவியலில் மழை நீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் கொள்முதல் செய்ய காத்திருக்கும் விவசாயிகளிடம் ஈரப்பத அளவை வலியுறுத்தாமல் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

    அது மட்டுமல்லாமல் மையங்களில் கொள்முதல்செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பூதலூர் பகுதியில் பெய்த பெரும் மழையால் சந்து தெருபகுதியில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.
    • நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதலாகும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவில் 3 லட்சம் ஏக்கர் குறுவை விளை நிலங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து விற்பனை செய்து விட வேண்டும்.

    அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். ஆனால் தமிழக அரசு காரிப் பருவ கொள்முதலை செப்டம்பர் 1ஆம் தேதியே தொடங்கியதால் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் தடைபட்டு வருகிறது.

    தற்போது பெய்து வரும் கோடை மழையும் நல்ல காய்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.

    குறிப்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இதுவரையிலும் இல்லாத வகையில் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்கிறோம் எனும் பெயரால் 17 சதம் ஈரப்பதத்திற்கு கூடுதலாக இருக்கும் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்தார்கள் என்று முன் அனுபவமின்றி தொழில்நுட்பத்தினை கருத்தில் கொள்ளாமல் திருவாரூர் அருகே ஊர்குடியில் கொள்முதல் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.குறிப்பாக 15 சதத்திற்கு கீழே உலர்த்தப்பட்ட நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதல் ஆவது என்பது இயற்கையானது.

    பாதுகாக்கப்பட்ட கிடங்குகளில் இருந்தாலும் கூட இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

    விரைவில் ஊழிய ர்களோடு விவசாயிகள் இணைந்து நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப் பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில்அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமா கவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வ தால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பெரியநாயகி மூலமந்திர பிரயோக ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    பின்னர் மஹா பூர்ணாஹதி கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய நாயகி அம்மன், பெத்தார்ண சாமி ஆகிய சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோதண்டராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    ×