search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகம் நடந்தது.

    பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பெரியநாயகி மூலமந்திர பிரயோக ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    பின்னர் மஹா பூர்ணாஹதி கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய நாயகி அம்மன், பெத்தார்ண சாமி ஆகிய சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோதண்டராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×