search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திர ஓட்டல்"

    • யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் இருந்த அந்த வாலிபரை ஒரு வழியாக ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
    • போதை வாலிபரின் இந்த நிர்வாண கலாட்டா சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

    நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி உற்சாகமாக இருந்த அந்த வாலிபர் திடீரென காதலியை மட்டும் அறையில் அமர வைத்துவிட்டு வெளியில் வந்தார். உடலில் ஒட்டு துணிகூட இல்லாமல் காணப்பட்ட அந்த வாலிபா் நிர்வாணமாக ஓட்டல் வளாகத்துக்குள் சுற்றினார்.

    ஓட்டலில் இருந்த மற்ற அறைகளுக்குள் அத்து மீறி புகுந்த அவர் அங்கிருந்த பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முன்னால் போய் கூச்சமின்றி நின்றார்.

    ஓட்டலில் தங்கியிருந்த பெண்கள் "அய்யோ... இது என்ன கொடுமை" என்று கூறிய படியே அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் நிர்வாகத்தினர் மற்றும் ஓட்டலில் தங்கி இருந்த மற்ற ஆண்கள் போதையில் ஆட்டம் போட்ட வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்டதால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கூட அவரால் உணர முடியவில்லை. யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் இருந்த அந்த வாலிபரை ஒரு வழியாக ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டலுக்கு போலீசாரும் விரைந்து சென்றனர். அவர்களிடம் நிர்வாண போதை வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

    போலீஸ் விசாரணையில் போதை வாலிபர் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் என்பது தெரிய வந்தது. காதலியுடன் 2 நாட்களுக்கும் மேலாக நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    நேற்று இரவு மதுகுடித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உச்சக்கட்ட போதையில் அப்படியே வெளியில் வந்து பெண்களை அச்சுறுத்தி ஓடவிட்டதும் விசாரணையில் அம்பலமானது. போதை வாலிபரின் இந்த நிர்வாண கலாட்டா சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    • பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாக தெரியவந்தது.
    • கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள 'ரோசேட் ஹவுஸ்' என்கிற ஐந்து நட்சத்திர ஓட்டலில், அக்குஷ் தத்தா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி அறை ஒன்றை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து தங்கினார். மறுநாள் காலிசெய்து சென்றிருக்க வேண்டிய அவர், மாதக்கணக்கில் அங்கேயே தங்கியும் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

    இப்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை தொடர்ந்து 20 மாதங்களுக்கு மேல் தங்கிய அவர், சுமார் ரூ.58 லட்சம் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பைசா கட்டணம்கூட அவர் செலுத்தவில்லை.

    இந்த விவரங்கள் ஓட்டலின் கணக்குத் தணிக்கையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாகவும் தெரியவந்தது.

    இந்த கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாடகை பாக்கி வைத்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்கள் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது.
    • இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ... என்கிற பாடலை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் இளம்பெண்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோயம்பேடு பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் சாலையில் சென்னை மாநகராட்சி சிக்னல் சந்திப்பில் ஒரு கருப்பு நிற காரில் 4 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் வந்து இறங்கினர். அனைவரும் புத்தாண்டு மது விருந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை அவர்கள் அணிந்திருந்த ஆடை உணர்த்தியது.

    3 பெண்களும் கவர்ச்சியாக அரை குறை ஆடையை அணிந்திருந்தனர். 3 பேருமே போதையில் தள்ளாடிய நிலையில், ஒருவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இரவில் நடனம் ஆடிய கவர்ச்சி உடையிலே அந்த 3 பெண்களும் வந்திருந்தனர். 'வாந்தி' வருகிறது என ஒரு பெண் கூறியதாலேயே வாலிபர்கள் காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர். இதையடுத்து போதை பெண் கீழே இறங்கினார்.

    அவர் தடுமாறியதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுழித்தபடியே சென்றதையும் காண முடிந்தது. பின்னர் 4 இளைஞர்களும், 3 பெண்களையும் காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    மது குடிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற நிலைமை மாறி இளம் பெண்கள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். 'ஆணுக்கு பெண் சமம்' என்பது இது தானோ...

    • விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.
    • பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    கோவை :

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று இரவில் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. எனவே இதில் தம்பதிகள் பலர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார்கள்.

    இந்த நிலையில் இரவு விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி, தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதி உண்டு, இல்லை என்றால் உள்ளே செல்லக்கூடாது என்று கூறினார்கள்.

    அதற்கு அந்த வாலிபர்கள் தங்களிடம் இருந்த பணத்தை எடுத்து எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்களை பாதுகாவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    இதை கண்டு ஓட்டலில் இருந்த மற்ற பாதுகாவலர்கள் அனைவரும் அங்கு வந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மோதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலம் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள்அந்த வாலிபர்கள் மற்றும் ஓட்டலில் உள்ள பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ஓட்டல் கணக்காளர் திருப்பூரை சேர்ந்த விஷ்வபாரதி (24) எனபவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர்கள் லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    ×