search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைப்பயணம்"

    • 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார்.
    • தஞ்சையில் 5 நாடகள் நடைப்பயணம் நடத்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொகுதியில் என்மண், என்மக்கள் 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தஞ்சை சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் என்ற நடைபயணத்தின் 4-கட்ட பயணத்தை இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் அவர் 5 நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    திருவையாறில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைப்பயணத்தை தொடங்கும் அவர் மாலை 4 மணிக்கு தஞ்சை கொடிமரத்துமூலை, வடக்குவீதி, தெற்குவீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப்மூலையில் பேசுகிறார்.

    அன்று இரவு தஞ்சையில் தங்கும் அவர் மறுநாள் 26-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னார்குடியில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    27-ந் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    பின்னர் டிசம்பர் 1-ந் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளிலும் நடைப்ப யணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 நாடகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் பாரதிமோகன், ரெங்கராஜன், ராஜேஸ்வரன், உமாபதி, முரளிதரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
    • நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்கள் சென்ற நிலையில், கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலை நேற்று வரை அந்த மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டார்.

    அங்கிருந்து, இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை பாளை-திருச்செந்தூர் சாலையில் எம்.கே.பி. நகரில் உள்ள பெல் மைதானம் அருகே தனது நடை பயணத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாளை மார்க்கெட் சாலை வழியாக சித்த மருத்துவ கல்லூரி பகுதிக்கு வந்தடைந்தார். வழிநெடுக அவரது நடை பயணத்திற்கு பொது மக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து லூர்து நாதன் சிலை அருகே உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பின்னர் தெற்கு பஜார் வழியாக பாளை ராஜகோபாலசாமி கோவில் வந்தடைந்தார். அங்கு அவரது பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் நின்று பொது மக்களிடையே பேசினார். அவரது பேச்சை கேட்க பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.

    இதனை ஒட்டி ராஜகோபாலசாமி கோவில் பகுதியில் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடி உள்ளிட்டவை அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. மேலும் தாரை தப்பட்டை முழங்கப்பட்டது. கும்மி, கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
    • குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந்தேதி அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை குமரி மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட களியக்காவிளையில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கினார். 3 நாட்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாத யாத்திரை மேற்கொண்ட அவர், இறுதியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை காந்தி மண்டப சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்த லிங்கபுரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பெருமாள்புரம் வழியாக இரவு 7.30 மணிக்கு கொட்டாரம் சந்திப்பை வந்தடைந்தது. கொட்டாரம் ராமர் கோவில் முன்பு அண்ணாமலைக்கு பாரதிய ஜனதாவினர் அகல் விளக்கு ஏற்றி வைத்து பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அண்ணாமலை கொட்டாரம் சந்திப்பில் நிறுத்தி வைத்து இருந்த ரதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் முழு உருவ சிலை முன்பு நின்று வணங்கி தனது பாத யாத்திரையை நிறைவு செய்தார். மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் அவர் தொண்டர்கள் புடை சூழ நடந்தே வந்தார். அண்ணாமலை தனது குமரி மாவட்ட பாதயாத்திரை நிகழ்ச்சியை கொட்டாரம் சந்திப்பில் நிறைவு செய்து வைத்து திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    குமரி மாவட்டம் பழமையும் பெருமையும் மிக்க மாவட்டமாகும். இந்த மாவட்டம் காமராஜரை எம்.பி.யாக உருவாக்கிய மாவட்டம். சிதம்பரநாதன் நாடார், ஜீவானந்தம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மகாதேவன் பிள்ளை தேரூர் சிவன் பிள்ளை போன்றவர்களை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்த மாவட்டம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அமைந்து உள்ள மருந்து வாழ்மலையில் அய்யா வைகுண்டர், நாராயண குரு போன்ற மகான்கள் தவமிருந்து முக்தி பெற்ற இடமாகும்.

    அதேபோல சுவாமி விவேகானந்தர் இதே கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் தன்னம்பிக்கையுடன் வேண்டி சென்று தவம் இருந்து ஞானம் பெற்றவர். அப்படிப்பட்டவர்களை இந்த தி.மு.க. அரசு பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்யாமல் மறந்துவிட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை அரசியலுக்காக மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் பிரித்து வைத்து உள்ளனர். நெல்லை எங்களது எல்லை குமரி எங்களுக்கு தொல்லை என்று சொன்ன தி.மு.க.வினருக்கு, குமரி மாவட்டம் வரும் காலங்களில் என்றைக்கும் தி.மு.க.வுக்கு ஒரு தொல்லையாகவே அமையும். பிரதமர் மோடியை திட்டுவதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கடலில் கால் வைத்தால் இழுக்கு என்று நினைக்கிறார். இதனால் தான் ஆய்வுக்கு சென்ற அவரை மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கி வந்து கரையில் விட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பணக்காரர் மீன்வளத்துறை அமைச்சர் தான். அவரிடம் 4 ஆயிரத்து 999 கோடி ரூபாய் உள்ளது.

    குமரி மாவட்டத்தில் என் நடை பயணத்தின்போது 25-க்கும் மேற்பட்ட பைபிள், 6-ல் இருந்து 8 குரான் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள். பத்மநாபபுரம் தொகுதியில் நடைபயணம் சென்றபோது ஆலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனர். குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்தபோது ஜெபமாலை கொடுத்தார்கள். அதை நான் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வருகிறேன். இது தான் இந்துத்துவா.

    பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் உச்சபட்ச கவுரமான விருதுகளை கொடுத்துள்ளது. அதில் 7 நாடுகள் இஸ்லாமிய நாடுகள் ஆகும். எனவே என் நடை பயணத்தின் போது ஆலயம் அருகே கொடி கட்டாதீர்கள் என்றும், பேனர் வைக்காதீர்கள் என்றும் பேசாதீர்கள். காற்று அடிக்கும்போது எச்சில் இலை கோபுரத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம். எனவே எச்சில் இலைக்கு போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை. காட்சிகள் மாறும், காலங்கள் மாறும். காற்று மாற்றி வீசும் போது எச்சில் இலை தெருவில் கிடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 12-ந் தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் யாத்திரை சென்ற அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நடைபயணம் மேற்கொண்டார்.
    • இன்று காலை விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் கடந்த 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தனது பாத யாத்திரையை தொடங்கினார். 12-ந் தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் யாத்திரை சென்ற அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    மாலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார் திருநகரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி சித்திரை வீதி வழியாக ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு முடிவடைந்தது.

    இந்நிலையில் இன்று மாலை திருச்செந்தூரில் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். இதற்காக நேற்று இரவு திருச்செந்தூர் வந்த அவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார். இன்று காலை விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    மாலை 4 மணிக்கு வீரபாண்டிய பட்டினத்தில் நடைபயணத்தை தொடங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரும்பு ஆர்ச், முதல் சந்திதெரு, சிவன் கோவில் வாசல், சன்னதி தெரு முகப்பு வழியாக புளியடி மாரியம்மன் கோவில், சபாபதிபுரம் சந்திப்பு, பால்பண்ணை தெரு சந்திப்பு, கிருஷ்ணன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவில் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் சந்திப்பில் நடைபயணத்தை முடிக்கிறார்.

    • பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார்.

    காரியாபட்டி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் அவர் பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டதோடு, மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறினார்.

    மேலும் புகார் பெட்டியையும் கையோடு எடுத்துச்சென்ற அண்ணாமலை அதில் பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தி.மு.க. அரசின் ஊழல் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வரும் அவருடன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடினர். இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்தானது. மறுநாள் நடைபயணமும் கைவிடப்பட்டது.

    மதுரையில் இருந்து சென்னை சென்ற அண்ணாமாலை 2 நாட்களாக ஓய்வெடுத்தார். இன்று மீண்டும் அவர் நடைபயணத்தை தொடங்கினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பத்திரபதிவு அலுவலகம் முன்பு பாதயாத்திரையை தொடங்கிய அவர், பஜார், காவல்நிலையம், ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் பழுதடைந்த காலனி வீடுகளை அப்பகுதியினர் கேட்டுக்கொண்டதன் பேரில் பார்வையிட்டார்.

    காலனி வீடுகளுக்குள் சென்ற அண்ணாமலை, பழுதடைந்து இருந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் பனை ஓலையால் தயாரிக்கப்படும் பெட்டிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வரும் நாதஸ்வர கலைஞர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

    பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை சென்ற அவர் தொடர்ந்து பிற்பகலில் திருச்சுழியில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு ரமண மகரிஷி இல்லத்திற்கு செல்கிறார். விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் வந்து மதிய ஓய்வுக்கு பின்பு பாளையம் பட்டியில் இருந்து மாலை 4 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். அருப்புக் கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் முன்பு மக்களிடையே பேசுகிறார். இதனை தொடர்ந்து இரவு ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு விருதுநகர் பாண்டியன் நகர் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், வெயில் உகந்த அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், மெயின் பஜார், நகராட்சி அலுவலகம், இன் னாசியார் தேவாலயம் வழியாக சாத்தூர் ரோடு சந் திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் மாலையில் சிவகாசியில் தொழில் அதிபரை சந்திக்கிறார். நாளை மறுநாள் சாத்தூரில் நடைபயணம், மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதில் அண்ணாமலையுடன் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

    • பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

    ஆர்.எஸ்.மங்கலம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

    4-வது நாளான இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார். பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி மிகவும் புகழ்பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த தொகுதி கடந்த 37 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. தாத்தா, மகன், பேரன் என்று தொகுதியை பிடித்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்மாய் இங்குள்ள ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய். 42 மதகுகளை கொண்ட கண்மாயில் மதகுகள் சரியாக இல்லை.

    இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இன்று அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்கள். காரணம் இங்கு விவசாயம் செய்து பிழைப்பு நடத்தமுடியவில்லை. அதனை சரிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

    இங்குள்ளவர்கள் பனை மரம் வைத்திருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். காரணம் கள் இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் 5,500 உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு கடைகளை மூடினாலே பனைமரம் வைதிருப்பவர்களின் வாழ்வு வளமாகும். காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன்பின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார்.

    இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். 

    • பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, கிராம அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், 3-வது வார்டு உறுப்பினர் குருமூர்த்தி உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை, நெகிழி பொருட்களை பய ன்படுத்துவதில்லை, பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன் நன்றி கூறினார்.

    • உலக கழிப்பறை தினம் குறித்து தூய்மை நடைப்பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளம்பர தட்டிகளுடன் பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர்வலம் சென்றனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமபஞ்சாயத்து பகுதியில் நத்தமேடு கிராமத்தில் இன்று உலக கழிப்பறை தினம் குறித்து தூய்மை நடைப்பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமமாக கிராமத்தை உருவாக்கவேண்டும். நான் எப்போதும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பேன் என்றும். தீங்கு விளைவிக்கக் கூடிய குப்பைகளைபாதுகாப்பான முறையில் கையாளுவேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர தட்டிகளுடன் பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர்வலம் சென்றனர்.

    ஊர்வலத்தின் முடிவில் கழிப்பறையை முறையாக பயன்படுத்துவேன்.திறந்தவெளியில் மலம் கழிக்க மாட்டேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். பா.ம.க. ஒன்றியகவுன்சிலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார்.மக்கள் நல பணியாளர் தர்மலிங்கம், பஞ்சாயத்துதுணைதலைவி லட்சுமி, தலைமை ஆசிரியர் உண்ணாமலை,ஆசிரியர் கோவிந்தசாமி, காமராஜ், பார்த்திபன், புது வாழ்வு திட்டம் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர் சுதா மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.

    ×