search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Great welcome"

    • 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார்.
    • தஞ்சையில் 5 நாடகள் நடைப்பயணம் நடத்தும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொகுதியில் என்மண், என்மக்கள் 4-வது கட்ட நடைப்பயணத்தை அண்ணாமலை வருகிற 25-ந் தேதி திருவையாறில் தொடங்குகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக தஞ்சை சட்டமன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் என்ற நடைபயணத்தின் 4-கட்ட பயணத்தை இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தொடங்குகிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் அவர் 5 நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    திருவையாறில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைப்பயணத்தை தொடங்கும் அவர் மாலை 4 மணிக்கு தஞ்சை கொடிமரத்துமூலை, வடக்குவீதி, தெற்குவீதி வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு மாமாசாகேப்மூலையில் பேசுகிறார்.

    அன்று இரவு தஞ்சையில் தங்கும் அவர் மறுநாள் 26-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், மாலையில் மன்னார்குடியில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    27-ந் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

    பின்னர் டிசம்பர் 1-ந் தேதி பாபநாசம் தொகுதியிலும், 2-ந் தேதி கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளிலும் நடைப்ப யணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 நாடகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் பாரதிமோகன், ரெங்கராஜன், ராஜேஸ்வரன், உமாபதி, முரளிதரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 2 நாட்களாக வேலூரில் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    இன்று காலையில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்திற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது கிரீன் சர்க்கிள் அருகே வேலூர் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க பொய்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதல்அமைச்சரை வரவேற்றனர்.

    வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, டாக்டர் வி.எஸ். விஜய், 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர், வட்ட செயலாளர் தேவமணி, சாந்தி அம்பேத்கர், பாலு, சீனு, பகுதி செயலாளர்கள் தயால் ராஜ், சுந்தர விஜி, பாலமுரளி கிருஷ்ணா, முனவர் பாஷா, ஐயப்பன், தங்கதுரை, கணேஷ் சங்கர், சக்தி, சசிகுமார், முருகப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கதிரேசன், அன்பு நிதி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • செய்யாறு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன்கன் நாவல் பாக்கம் பாபு, மாமண்டூர் ராஜ், திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.

    வெங்கடேஷ் பாபு, வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தி.மு.க. 15-வது பொதுக்குழு தேர்தலில் 2-வது முறையாக பொதுச் செயலாளராக

    ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் ரெயில் மூலம் இன்று காட்பாடி வந்தார்.

    அவருக்கு, தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரை கரகாட்டம், புலியாட்டம், சிலம்பம், மேளதாளம், பூரணகும்ப மரியாதை, வானவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கதிர் ஆனந்த் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள், நந்தகுமார், நல்லதம்பி, அமலுவிஜயன், கார்த்திகேயன், டாக்டர் வி.எஸ். விஜய், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகர மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் துரைமுருகனை வரவேற்கும் விதமாக காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கரகாட்டம் நடந்தது.தவில், பம்பை, டிரம்ஸ், வாணியம்பாடி மேளங்கள் முழங்கியதில் காட்பாடி ரெயில் நிலையம் குலுங்கியது. சாலையில் பெண்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

    இதனால் ெரயில் நிலையம் முதல் சித்தூர் பஸ் நிறுத்தம் வரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ×