search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
    X

    ஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

    • செய்யாறு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன்கன் நாவல் பாக்கம் பாபு, மாமண்டூர் ராஜ், திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.

    வெங்கடேஷ் பாபு, வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×