search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு
    X

    காட்பாடியில் இன்று நடந்த பிரமாண்ட வரவேற்பில் அைமச்சர் துரைமுருகன் பேசிய காட்சி.

    தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு

    • அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தி.மு.க. 15-வது பொதுக்குழு தேர்தலில் 2-வது முறையாக பொதுச் செயலாளராக

    ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் ரெயில் மூலம் இன்று காட்பாடி வந்தார்.

    அவருக்கு, தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரை கரகாட்டம், புலியாட்டம், சிலம்பம், மேளதாளம், பூரணகும்ப மரியாதை, வானவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கதிர் ஆனந்த் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள், நந்தகுமார், நல்லதம்பி, அமலுவிஜயன், கார்த்திகேயன், டாக்டர் வி.எஸ். விஜய், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகர மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் துரைமுருகனை வரவேற்கும் விதமாக காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கரகாட்டம் நடந்தது.தவில், பம்பை, டிரம்ஸ், வாணியம்பாடி மேளங்கள் முழங்கியதில் காட்பாடி ரெயில் நிலையம் குலுங்கியது. சாலையில் பெண்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

    இதனால் ெரயில் நிலையம் முதல் சித்தூர் பஸ் நிறுத்தம் வரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

    Next Story
    ×