என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விஜய் சேதுபதி"

    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம் கல்ட் கிளாசிக்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம், டார்க் காமெடி அம்சங்கள் நிறைந்த காட்சிகள் என படம் கல்ட் கிளாசிக் ஆக மாறியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியானது.

    இந்நிலையில் அணமைக் காலமாக கல்ட் கிளாசிக் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் வரிசையில் சூது கவ்வும் முதல் பாகம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

    வரும் 20 ஆம் தேதி "சூது கவ்வும்" ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் தினம், மௌனம் பேசியதே, மின்னலே, உயிருள்ளவரை உஷா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்
    • இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த நிைலயில், இருவரும் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (பிப்ரவரி 16) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திரையுலகில் வித்தியாசமான கதையம்சம், ஆழமான அர்த்தமள்ள வசனங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளில் புதுமை என தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதன்படி இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.

    படத்தில் நடிகராகவே வரும் விஜய்சேதுபதி தான் நடிக்கும் காதல் கதை செல்லவா என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிடுகிறார். அந்த படத்தின் கதையை மக்களிடமே கேட்க நினைக்கும் விஜய் சேதுபதி, ரேடியோ எப்.எம் மூலம் பொது மக்களிடம் காதல் கதைகளை கேட்கிறார்.

    அப்படி விஜய்சேதுபதிக்கு இரண்டு பெண்கள் போன் செய்கிறார்கள். அதில் ஒருவர் நிகிதா. வங்கியில் வேலை செய்கிறார். அதே வங்கியில் செக்யூரிட்டியாக வேலைசெய்கிறார் ஜெய்ராம். இவர்களுடைய காதல் கதையை சொல்கிறார்.

    விஜய்சேதுபதியிடம் பேசும் மற்றொரு பெண், நகுலிடம் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கூறுகிறார். இவர்களுக்கு சில ஆலோசனைகளையும் விஜய்சேதுபதி கூறுகிறார்.

    கடைசியில், இருவர் வாழ்க்கையிலும் என்ன ஆனது? விஜய்சேதுபதி கதையை தேர்ந்தெடுத்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    விஜய் சேதுபதி வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத வசன உச்சரிப்பும், கண்கள் வழியே கடத்தும் உணர்வுகளும் படத்திற்குப் பலம்.

    ஜெயராம், தனது பரந்த அனுபவம் மற்றும் கலைஞரான திறமையால் இந்த காதல் கதையின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    துடிப்பான இளைஞராகவும், அதே சமயம் காதலில் உருகும் காதலனாகவும் நகுல் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தின் நாயகிகள் கதையின் காதல் கோணத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றனர்.

    இயக்கம்

    ஒரு மென்மையான, அழகான காதல் கவிதையை இயக்க முயற்சியிருக்கிறார் இயக்குனர் சனில் களத்தில். கதைக்களம் நன்றாக இருந்தாலும், சில இடங்கள் நாம் ஏற்கனவே பார்த்த பழைய காதல் படங்களை நினைவுபடுத்துகின்றன. படத்தின் வேகம் சில இடங்களில் தொய்வடைகிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் சற்று இழுவையாகத் தோன்றுகிறது.

    இசை

    படத்தின் பாடல்கள் மெலடி ரகமாக அமைந்துள்ளன. காதலைச் சொல்லும் காட்சிகளுக்குப் பின்னணி இசை கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.

    ரேட்டிங்- 2.5/5

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    தமிழ் தாண்டி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார், விஜய் சேதுபதி.

    தற்போது 'டிரெய்ன்', 'ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இதற்கிடையில் இந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் -சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக பேசப்பட்டது.

    அதாவது ராவணன் (யாஷ்) தம்பி விபீஷனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது.

    இதனை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். "நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது? என்று எனக்கு தெரியவில்லை", என்று அவர் கூறி உள்ளார்.

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர்.

    மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.

    இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.

    அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.

    காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.

    எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

    இசை

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.

    ரேட்டிங்-3/5

    • வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.
    • 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    • மௌன படமாக உருவாகி உள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
    • பா.விஜய்யின் வரிகளில் பாடல் வெளியாகி உள்ளது.

    விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மௌன படம் காந்தி டாக்ஸ். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் 30ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஏதோ ஏதோ' வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பா.விஜய் எழுத்துகளில் உருவாகி உள்ள இப்பாடல் நல்ல மெலடியாக அமைந்துள்ளது. மௌனப் படம் என்பதால் இதன் பின்னணி இசை படத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்கேற்றவாறே இசைப்புயலின் இசையும் அமைந்துள்ளது.  


    • பிக்பாஸ் சீசனில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார்.
    • விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடம்பிடித்தார்.

    சென்னை:

    நூறு நாட்களைக் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.

    இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர்.

    திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவித்தார் விஜய் சேதுபதி. சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

    ஏற்கனவே, கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

    இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

    • இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
    • டைட்டில் வின்னர் ஆவார் என்று கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.

    இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

    டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. 

    விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.

    விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.

    அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.

    காந்தி நினைவு தினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாகிறது காந்தி டாக்ஸ்

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    ட்ரெய்ன் படத்திற்கு மிஷ்கின் இசையமைக்கிறார்.

    பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.

    பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.

    ×