search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டு நிறுவனம்"

    • ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
    • ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

    இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
    • மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டின் கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 552 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களும், 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரத்து 913 மதிப்பிலான லெனோவா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டது.

    மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஏனைய மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.

    மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

    ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் தமிழ் சங்க செயலாளர் கோபால நாராயண மூர்த்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசுகையில் மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் மென்மேலும் உயர ஊக்கமளித்து வாழ்த்துக்களை கூறி பேசினார்கள்.

    மேலும் தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர்கள், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர், வேலூர் அக்சிலியம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜினி, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ரூ.36.95 கோடியில் கல்வி பணி

    இதுவரை ஐ.வி.டி.பி. கோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.69 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்வி பணிக்காக மட்டும் ரூ.36 கோடியே 95 லட்சம் ஐ.வி.டி.பி. நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.வி.டி.பி. தலைவர் குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

    • பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
    • முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி இளம் பெண்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தகுதிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தை இந்த தொண்டு நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இப்படி வாங்கப்பட்ட தொகை, பணம் கொடுத்தவர்களின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பட்டதாரி பெண்கள் பணம் செலுத்தி குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களாகி தற்காலிக ஆசிரியைப் பணியை பெற்றுள்ளதாக தெரிகிறது.

    அத்துடன் அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியான மாத சம்பளத்தொகை கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனிடையே தற்காலிக ஆசிரியை பணிக்கு சில மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் தடை விதித்து விட்டதாகவும் தெரிகிறது. சம்பள பிரச்சனை, பணி நீக்கம் ஆகிய இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

    இதனிடையே முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இதன்படி பாதிக்கப்பட்ட அனைவரும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

    இது பற்றிய தகவல்கள் பரவியதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பெண்கள் இன்று காலையில் வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.
    • அரசு அதிகாரிகளை வரவழைத்து பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி பழைய பஸ் நிலையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக பொதுமக்கள் மூலம் பசியில்லா தமிழகம் எனும் தொண்டு அமைப்பிற்கு தகவல் வந்தது.

    உடனே அவர்கள் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.

    உடனடியாக பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி பெண்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு தொடர்பு கொண்டு உரிய அரசு அதிகாரிகளை வரவழைத்து காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரகாஷ் உத்தரவின் பேரில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பெண் காவலர்கள் மூலம் பசியில்லா தமிழகம் அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லம் காப்பகத்தில் தற்போது அனுமதித்தனர்.மேலும் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து இல்லம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    விரைவில் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து அவரது குடும்பத்தை கண்டுபிடித்து குடும்பத்துடன் ஒப்படைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பசியில்லா தமிழகம் அமைப்பினர் கூறினர்.

    ஆதரவின்றி சுற்றித் திரிந்த பெண்ணை மீட்டு உடனடியாக அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அந்தப் பெண் காப்பாற்றப்பட்டது அறிந்து அந்தப் பகுதி மக்கள் பசியில்லா தமிழகம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் பசியில்லா தமிழகம் அமைப்பின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார்.

    மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் கருத்துருக்களை அனுப்பலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற 25-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் கருத்துருக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×