search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை இந்தியா"

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன்' விருது என்று பெயர். இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்தியா முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சூரத் 2-வது இடத்தில் உள்ளது. நவி மும்பை 3-வது இடத்திலும், புதுடெல்லி 7-வது இடத்திலும், ஐதராபாத் 9-வது இடத்திலும், அகமதாபாத் 15-வது இடத்திலும், லக்னோ 44-வது இடத்திலும், பெங்களூர் 125-வது இடத்திலும், மும்பை 189-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 438-வது இடத்தில் உள்ளது.

    அதேபோல சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மராட்டியம் முதல் இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.

    446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி 262-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி 9,500 புள்ளிகளுக்கு 5,794.9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. தூத்துக்குடி 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளன. சென்னை 5-வது இடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் 40-க்கும் மேற்பட்ட இடங்களையே பிடித்திருந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு 45-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 43-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு 44-வது இடத்திலும் சென்னை இருந்தது. தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 9,500 புள்ளிகளுக்கு 4313 புள்ளிகள் கிடைத்துள்ளது.

    தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு உள்ளிட்டவைகளை கையா ளுவதன் அடிப்படை யில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் குவிந்த குப்பைகளில் 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கை யூர் குப்பை கிடங்குகளில் 21 சதவீதம் குப்பைகள் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு நாளைக்கு 6500 டன் குப்பைகள் சேருகின்றன. பொது கழிப்பறைகளில் 77 சதவீதம் தூய்மையாக பராமரிக்கப்ப ட்டுள்ளது.

    அதே நேரத்தில் 95 சதவீதம் அளவுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள் 90 சதவீதம், குடியிருப்பு பகுதிகள் 91 சதவீதம் அளவுக்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் 85 சதவீதம் தூய்மையாக உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி உரம் தயாரிப்பதில் நீண்ட கால திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் சென்னையின் தரம் மேம்படும். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் காய்வாய் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன' என்றார்.

    • பாளையம் டோல்கேட்டில் தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.

    இந்தியா முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 2ந்தேதி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி அருகே அமைந்துள்ள பாளையம் சுங்க சாவடி பகுதியில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நம்முடைய பகுதியில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர். அதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி பகுதி சாலைகளில் தூய்மை செய்யும் பணியினை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கிருஷ் ணகிரி முதல் தொப்பூர் வரையிலான சாலை பராமரிப்பு குழுவினருக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாளையம் வருவாய் அலுவலர் ருக்மணி, வனத்துறை அதிகாரிகள் அரவிந்த், சத்யா, தரணி, பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாளையம் சுங்க சாவடி மேலாளர் அருண்குமார் மற்றும் சுங்கத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
    • 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்

    மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.

    • நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே நடந்தது

    மார்த்தாண்டம் :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே உள்ள லாறி பேட்டையில் பொதுமக்களுக்கு வசதியாக கழிவறை இல்லாத நிலை இருந்தது. எனவே நவீன கழிவறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் அதிநவீனமான கழிவறை கட்டப்பட்டது.இந்த கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன்,துணைத் தலைவர் பிரபின் ராஜா,கவுன்சிலர்கள் சர்தார்ஷா,விஜு, நகராட்சி வழக்கறிஞர் ஷாஜிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் "தூய்மை இந்தியா இருவார விழா" என்ற பெயரில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியரிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிப்பது, சுற்றுப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வகையில், மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் புராதன சின்னங்கள் பகுதியில் பொம்மலாட்டம், மைன்ட்ஷோ, கையெழுத்து இயக்கம் வாயிலாகவும், துணிப் பைகளை இலவசமாக கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறுவன பொது மேலாளர் கோமுராஜ், உதவி மேலாளர் ராமலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • வடலூர் நகராட்சியில் “என்குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணி வடலூர்நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி வள்ளலார்சபை பஸ்நிறுத்தம் வரை சென்று, வடலூர் நான்கு முனைசந்திப்பு வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முழக்கங்களுடன் கையில் பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் மேலாளர் (பொறுப்பு) முத்துராமன், துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் திவ்யா, பரப்புரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அமைச்சகங்களின் சுற்றுப்புறப் பகுதிகள் அழகுப்படுத்தப்பட்டன.
    • பாராளுமன்ற வாக்குறுதிகளில் நிலுவையில் உள்ளவை நிறைவேற்றப்பட்டன.

    தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பு இயக்கம் 2ந் தேதி முதல் 31ந் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சகங்கள் பங்கேற்றன. மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறை, நிதியமைச்சகம், பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் அவற்றுடன் சேர்ந்த தன்னாட்சி அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. இதன் ஒரு பகுதியாக அந்த அமைச்சகங்கள் அமைந்துள்ள இடத்தின் தாழ்வாரங்களை அழகுப்படுத்துதல், அறைகளை புனரமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 


    மேலும் இந்த அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள விஷயங்கள் பைசல் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிலுவையில் இருந்த 19-ல் 13 நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் குறை தீர்ப்பு தொடர்பான 278 விஷயங்களில் 185 பைசல் செய்யப்பட்டன. 1,750 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு இதுவரை 1,520 கோப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பயன்படாத பொருட்கள் விற்பனை மூலம் ரூ.50,000 ஈட்டப்பட்டது.

    இதேபோல் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை சார்பில் நாடு முழுவதும் 294 இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் 9 விவகாரங்கள், பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்த பொதுமக்கள் குறை தீர்ப்பு விவகாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்பட்டது. சுமார் 850 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 322 கோப்புகள் நீக்கப்பட்டன. கழிவுப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இதுவரை 10,72,00,960 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
    • பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நமது குப்பை, நாமே என்ற வாசகத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 40 பேர், அலுவலக தூய்மைப் பணியாளர்கள் 60 பேர், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பேரணி கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு விமான சாலை, மதுரை மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை வளாகம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பேரணி கையில் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டு சென்றனர்.

    வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அங்கு துப்புரவு பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவர் தொடங்கி வைத்தார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் செய்தனர்.

    ×