search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட பணிகள்"

    • கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.

    பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார். துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.எல். ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன் தொடங்கி வைத்தனர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியில் ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் தலைமை யில் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி கலந்து கொண்டு கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் கிரிசமுத்திரம் ஊராட்சியில் முதல் அமைச்சர் கிராம புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் கிரிச முத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, சம்பந்திகுப்பம், புருஷோத்த குப்பம் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் சித்ரா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிர பாகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
    • அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நாளை ஓசூர் வருகின்றனர்.

        கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், நாளை (சனிக்கிழமை) கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கவும், மீன் இறைச்சி கடைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகளை தொடங்கி வைக்கவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நாளை ஓசூர் வருகின்றனர்.

    மேலும், திறன் மேம்பாட்டு நூலகம் உள்ளிட்டவை களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

    • 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம்,ரேஷன் கடை, சிமெண்ட் சாலை, தார் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷினி சீனிவாசன், ஊராட்சி செயலாளர் வேலவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், வேணு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி பழனிவேல் நன்றி கூறினார்.

    • நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும்.
    • ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அவசர கூட்டம் நடந்தது.

    நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் நித்யா முன்னிலை வகித் தார். நகராட்சி ஆணை யாளர் புவ னேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தருமபுரி நகரில் பாராளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 இடங்களில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது, நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் ரூ.52 லட்சத்தில் புதிய தார் சாலை கள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்று வது என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    தருமபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் மாணவ -மாணவிகளின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பி டத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

    நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.

    கவுன்சிலர்களின் கோரிக் கைகளை உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என்று நகராட்சித் தலைவர் மற்றும் ஆணை யாளர் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ் வரி, உதவி பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், கணக்கு அலுவலர் முத்துக் குமார் மற்றும் துப்புரவு ஆய்வா ளர்கள், அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.

    • அணைக்கட்டு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மொனவூர், மேல்மொனவூர், தெள்ளூர், அத்தியூர், ஊசூர், பூதூர், போன்ற ஊராட்சிகளில் புதிய திட்டங்களை தொடங்கவும் மேலும் பணிகளை நிறைவடைந்துள்ள புதிய கட்டிடங்களையும், கட்டி முடிக்கப்பட்ட மேல் நீர் தேக்க தொட்டி திறப்பு விழாவும் நேற்று ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளும் தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் பி.டி.ஓ. வின்சென்ட் ரமேஷ் பாபு, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் தேவாமங்கலம் கிராமத்தில் ரூ.58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.44 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வ.உ.சி.நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வடுகனேரி வாரியில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள்.
    • கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை என்கிற புவனேஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 36 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தருமபுரி நகரில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 8 திட்டப்பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜாதி ரவி பேசுகையில், நகராட்சி கவுன்சிலர்களின் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைக்காமல் விழா நடத்துகிறார்கள்.

    அந்தந்த பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கு நகராட்சி கவுன்சிலர்களை முறையாக அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதேபோன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள். கவுன்சி லர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி மேலாளர் சண்முகம், கணக்கு அலுவலர் முத்துக்குமார், நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் மாதையன், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், சீனிவாசலு மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை 4-வது மண்டல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வு ெய்தனர்.

    41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விருதுநகர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் நகராட்சி, வி.எம்.சி. காலனியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடத்தையும், புல்லலக்கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில், நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2.0 மூலம் ரப்பர், நெகிலி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பொருள் மீட்டு வசதி கட்டிடத்தையும், விருதுநகர் நகராட்சியில் செயல்பட்டு வரும் மின் மயானத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×