search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான் பாண்டியன்"

    • பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

    ஆனால் எந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேறக் கழகம் போட்டியிடும் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் தென்காசி தொகுதியில் அக்கட்சி போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

    • நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    "தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

    பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமை அடையாததால் அடுத்தகட்ட பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.
    • மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது.

    திருப்பூர்:

    தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் திருப்பூர் சிவன் தியேட்டர் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது ஜான்பாண்டியன் பேசியதாவது:-

    தேவேந்திர குல வேளாள மக்கள் எத்தனை பேருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலையும், சலுகையும் கொடுத்துள்ளன. இப்படிப்பட்ட நிலையை மாற்ற வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு சட்டம். பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு சட்டம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான். மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது. தமிழக கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள பிரச்சனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஜாதியின் பெயரை வைத்து திரைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் மற்றொரு சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவது தவறான முன்உதாரணம். அதுபோன்ற திரைப்படங்களை அரசு தடை செய்ய வேண்டுமேயன்றி, அதை ஊக்குவிக்கக் கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×