search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் தடை"

    • குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன.
    • பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வனத்துறை சோதனைச்சாவடியில் முன்அனுமதி டிக்கெட் பெற வேண்டும்.

    இதனையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுத்து வருகின்றனர். காட்டு யானை, காட்டுஎருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்குள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது சாரல்மழை பெய்தாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வருகிறது.

    இதனை அணைக்கும் முயற்சியிலும் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனவிலங்குகள் இடம்பெயரும்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தற்போது பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
    • வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ளது கோவை குற்றாலம்.

    கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் கோவை குற்றலாத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது.

    தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதியில் இருந்தே கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை குற்றாலத்திற்கு வந்தனர்.

    நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை குற்றாலத்திற்கு வந்தனர். இதன் காரணமாக சின்னார் சோதனை சாவடி முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும் சின்னார் சோதனை சாவடியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசயைில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே கூட்டம் அதிகரித்ததால் 2 மணிக்கே நுழைவு சீட்டு கொடுப்பதை வனத்துறையினர் நிறுத்தி விட்டனர். இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து குதுகலமிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×