search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடை நீர்"

    • வீதிகளில் நீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது
    • டெங்கு, மலேரியா நோய் பரவும் அபாயம்- பொதுமக்கள் அச்சம்

     குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூர் அருகே கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்குட்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் ஜீவா வீதி, பெரியார் வீதி, நேதாஜி வீதி, காமராஜர் ரோடு, கம்பன் நகர், கல்லுக்குழி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உள்ளது.

    இப்பகுதிகளில் ஏராள மான குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்படு வதால் கழிவு நீர்கள் வீதியில் வழிந்தோடி கொண்டி ருக்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் இந்த கழிவு நீரில் மிதித்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    ஒரு சிலர் கட்டிடக் கழிவு களையும், குப்பைகளையும் சாக்கடையில் போட்டு விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்களது வீடுகளில் உள்ள கழிவு நீரை சாக்கடை பக்கம் திருப்பி விட்டு விடுகின்றனர். இதனால் சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு அளவுக்கு மேல் நீர் தேங்கும் போது அது, நிரம்பி வீதிகளில் ஓடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வீதிகளில் நீர் தேங்கும் போது கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

    இதனால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அன்றாடம் வந்து மேற்பார்வை யிட்டு,இதனை சரி செய்தால் நன்றாக இருக்கும். நோய் பரவும் அபாயத்திலிருந்து பொது மக்கள் தப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
    • மருதமலையில் கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை

    வடவள்ளி,

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது.

    இங்கு தினமும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மருதமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி யாக கழிப்பிட வசதிகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் செல்கிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருசிலர் கழிவு நீர் கால்வாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி ரோட்டில் குள ம்போல தேங்கி நிற்கிறது.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் மருதமலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

    கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மருதமலை பஸ் நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கழிவுநீர் சாலையில் வெளியேறியதால் பட்டாளம், புளியந்தோப்பு முழுவதும் சாக்கடை வெள்ளமாக காட்சி அளித்தது.
    • பட்டாளம் சந்திப்பில் இருந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவதற்கு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் அகற்றும் நிலையம் செயல்படுகிறது.

    இந்த பம்பிங் நிலையத்தில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள பிரதான குழாய் நேற்று இரவு 8 மணியளவில் உடைந்தது. கழிவுநீர் செல்லக்கூடிய குழாய் உடைந்ததால் அதில் இருந்து சாக்கடை நீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஓடிய சாக்கடை வெள்ளம் அருகில் உள்ள கே.எம்.கார்டன் பகுதியில் புகுந்தது.

    தகவல் அறிந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து கழிவுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர். இதனால் கழிவுநீர் வெளியேறுவது சற்று குறைந்தது. ஆனாலும் புளியந்தோப்பு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் கழிவுநீர் வெள்ளம் போல சூழ்ந்து நின்றது.

    இரவு முழுவதும் வீடுகளை சூழ்ந்து நின்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கழிவுநீர் வாகனத்தை தெருக்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இரவே அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வாகனங்களை கொண்டு வந்து கழிவுநீரை உறிஞ்சி எடுக்க முயற்சித்தனர். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. மழைநீர் தேங்கி நிற்பதுபோல கழிவு நீர் வீடுகளை சுற்றி தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியது.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கழிவுநீர் மீண்டும் வேகமாக அந்த குழாயில் இருந்து வெளியேறியது. 'குபுகுபு'வென வெளியேறிய கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து அப்பகுதி மக்கள் வெளியே வர முடியவில்லை. வீட்டிற்கு உள்ளேயும் செல்ல முடியவில்லை.

    கழிவுநீர் நிலையத்தில் இருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறியதால் பட்டாளம், புளியந்தோப்பு முழுவதும் சாக்கடை வெள்ளமாக காட்சி அளித்தது. இதனால் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து பஸ், ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பட்டாளம் சந்திப்பில் இருந்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தெருக்களில் உட்பகுதி வழியாக புகுந்து சென்றனர்.

    இதற்கிடையில் அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி தெருக்களில் தேங்கி நின்ற கழிவுநீரை உறிஞ்சி எடுத்தனர்.

    இதனால் வீடுகளை சூழ்ந்த கழிவுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் குளம்போல தேங்கிய கழிவு நீரை ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
    • இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்லவேண்டியுள்ளது.

    மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.

    இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து  செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • இந்த சாக்கடை நீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலை ஓரங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு பிரதான சாலையான, அண்ணா பூங்கா சாலையின் ஓரத்தில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்தனர்.

    அப்போது, சாக்கடை, மழை நீர் செல்ல சரியான வழி அமைக்காததால்

    மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளும் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

    மழை செல்லும் வழியை நடைபாதை அமைக்கும் போது அடைத்து விட்டதால், இங்கு தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.
    • மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.

    அவினாசி:

    அவினாசி சேவூர் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைக்கு தீர்வு காண வேண்டி அவினாசி பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ,அவினாசி சூலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வடிகால் வசதி இல்லை .எனவே அங்குள்ள கழிவு நீரை அவினாசி சிந்தாமணி பஸ் ஸ்டாப் எதிரே குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொண்டுவந்து விடுவதால் சாக்கடை நிரம்பிவழிவதால் அங்கு ஏராளமாக சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து ஏற்கனவே பேருராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பேருராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, தி.மு.க.நகர செயலாளர் திராவிட வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவாத்தையின் முடிவில் மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.

    • சாலையில் கழிவு நீர் ஓடியதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது.
    • குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி காந்தி ரோட்டில் கழிவு நீர்வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடு த்து ஓடியது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி , துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதாரஆய்வாளர்ஜெயச்சந்திரன், பாக்கியநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சச நீர்உறிஞ்சும் மோட்டார் வாகனத்தின் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றினர்.

    திருமணமண்டபம்,வர்த்தகநிறுவனங் களில்சேரும் கழிவு நீர் மற்றும் குப்பைகளைதனியாக செப்டிக் டேங் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    • குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் அதிக அளவில் புழுக்கள் மிதந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். அவர்கள் குடிநீரை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதா வது:-

    மதுரை மாநகராட்சி 4-–வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் வைகை வடகரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இதற்காக குடிநீர் அரசரடி பகுதியில் நீரேற்று நிலையத்தில் சுத்திக ரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் குடியிருப்பு பகுதிக ளுக்கு வினியோகம் செய்யப் படுகிறது.

    இவ்வாறு வரும் குடிநீர் வைகை ஆற்று வடகரை பகுதியில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் குடிநீரு டன் சாக்கடை நீர் கலப்பதாக தெரிவிக்கின்றனர். குடிநீர் வரும் பகுதியை மாநகராட்சி 29-வது வார்டு, 30-வது வார்டு பகுதியில் உள்ளது மேலும் இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று சாலையை தோண்ட வேண்டும் என்ப தால் தாமதப்படுத்துவதாக வும் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக வந்தது. இதனால் நாங்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தட்டுப்பாடு காரணமாக புழுக்கள் உள்ள தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம்.

    எங்கள் பகுதியில் தொடர்ச்சியாக பலருக்கு மஞ்சள் காமாலை, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குழாயில் வந்த குடிநீர், வீடுகளில் உள்ள குடம், பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் பார்வையிட்ட னர்.

    குடிநீரில் புழுக்கள் வந்ததற்கான காரணம் கண்டறி யப்பட்டு சுகாதார மான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக ஆழ்வார்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் தற்போது நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்னசேலம் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்றுச்செல்லும் அவலநிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் தாகம் தீர்த்தபுரம் செல்லும் முக்கிய சாலையில் சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். இதனால் சாக்கடை நீரை மிதித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் அவநிலையில் மாணவர்கள் உள்ளனர். இந்த சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கின்றது.

    தாகம் தீர்த்தாபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் வாசுதே வனூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாக்கடை நீரை கடந்து செல்லும் பொழுது எங்கே தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்று அவதிப்பட்டு வருகி றார்கள். பள்ளி மாணவர்கள் சாக்கடை நீரை கடக்கும் பொழுது அந்த வழியாக செல்லும் பேருந்துகளால் சாக்கடை நீர்மாணவர்கள் சீருடைகள் மேல் பட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்று ச்செல்லும் அவலநிலை உள்ளது.

    இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நிறைய பேருக்கு டெங்கு நோய் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாக்கடை நீரை அகற்றி பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்

    • வீடுகளை சாக்கடை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை பாதாள சாக்கடை கழிவு நீர் சூழ்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.

    இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நேரத்தில் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்தனர்.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மேல அனுப்பானடி- சிந்தாமணி மெயின் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீடுகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் அந்த பகுதிக்கு வந்து கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் மூலமாக நாள்தோறும் 10 வட்சம் லிட்டர் கழிவுநீர் கடலில் நேரடியாக கலக்கிறது. பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி நிர்வாகம் மாறிவிட்டாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

    தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர். சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் அந்த பகுதியில் மட்டும் கடலின் நிறம் மாறியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் முற்றிலுமாக அழிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கீழக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×