search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    X
    கோப்புபடம்

    அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    • சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.
    • மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.

    அவினாசி:

    அவினாசி சேவூர் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைக்கு தீர்வு காண வேண்டி அவினாசி பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ,அவினாசி சூலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வடிகால் வசதி இல்லை .எனவே அங்குள்ள கழிவு நீரை அவினாசி சிந்தாமணி பஸ் ஸ்டாப் எதிரே குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொண்டுவந்து விடுவதால் சாக்கடை நிரம்பிவழிவதால் அங்கு ஏராளமாக சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து ஏற்கனவே பேருராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தேங்காமல் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து பேருராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, தி.மு.க.நகர செயலாளர் திராவிட வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவாத்தையின் முடிவில் மாலை 5 மணிக்குள் பிரச்சனைக்கு தீர்வகாண்பதாக உறுதி அளித்த பின் பொதுமக்கள் சென்றனர்.

    Next Story
    ×